வியாழன், 23 செப்டம்பர், 2010

ஓர் தமிழச்சியின் குரல்..

உயிருடன் இருந்தும்
உறங்குகின்றனர்
சவக்குழிகளில்...
கொடை வள்ளலாம்
பாரத பூமி;
குண்டு மழைகளுக்கு
குடை கொடுக்க வக்கில்லை..
உலக வரைபடத்தின்
பௌத்த நாடு,
இன்றோ யுத்த நாடாய்...

அலைகளின் ஓசையை காட்டிலும்
அலறலின் ஓசையே அதீதமாய்....
செவிடாய் கிடக்கும்
உலக நாடுகளும்,
ஐ நா சபை கூடங்களும்...
மடல் சாய்க்க
மனதில்லையா??
மனிதாபி"மானமே" இல்லையா??

எனது ஈழ சகோதரர்களின்
இழிவு நிலை அதனை
இல்லாது செய்வது அரிதோ??


~ ~ ~ இவள் ,
             ஓர் தமிழச்சி...

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக