காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 செப்டம்பர், 2025

நீ எங்கோ

 காற்றிடம் கிசுகிசுக்கிறேன்,
மேகத்தின் திறைக்கிழித்து 
உனை அடைய..! 

உன் ஆன்மாவின் சுவாசம்
என் நுரையீரல் மடிப்பை
நீவுகின்றது.. 

ஒவ்வொரு இரவும்
நட்சத்திரங்கள் உனக்காக
பதிலளிக்கின்றன..

நான்
நிழல்களில்
நடக்கிறேன்,

நீ எங்கோ ..

காலம் அன்பின் முன்
தலைவணங்கும் இடத்தில்,
ஒளியாய் நிற்கின்றாய்... ❤❤


வியாழன், 27 அக்டோபர், 2016

காவியங்கள் கருத்தரிக்கிறது . !

குழப்பங்களின் ஊடே,
அவன் நேசிக்க தொடங்கினான்.
துர்கதிகள் கண்ட அவளின் ஆன்மா,
நிதானிக்க தொடங்கியது.
நேசங் கொண்டு அவன் 
அவளை நீவ,
அங்கு இறக்கைகள் முளைக்க தொடங்கின.
இருட்டில் இருந்து
நிழலாய் மாற தொடங்கிய அவள்,
வெளிச்ச பரப்பில் தேவதையானாள்.
தினம் பருகும் காபி கோப்பையின் கீழே,
தன் ஒவ்வொரு இறகுகளை 
தூது விட்டு காத்திருந்தாள்.
அங்கோர் அழகிய பந்தம்.
அவன் மனதில் 
இவள் நினைவுகள் தேங்கி நிற்க,
இவள் மதியில் 
அவன் தாக்கங்கள் கவிதையாய் கொப்பளிக்க,
அழகான காவியங்கள்,
நிறைவாய் கருத்தரிக்கிறது...

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

என் காதல்

தோற்கும் பொழுதும்
நியாயம் தேடி
நியப்படுத்தும் விஷயம் அல்ல
என் காதல் , . !
நியாயமான விஷயம்,
மாலை கோர்க்க முடிந்த உன்னோடு
கை கோர்க்க அவதி படும் என்னை
கண்டால் என் மீதே கழிவிரக்கம் . . !

உன் துணை . . !

புரண்டு அழ ஒரு துகள் மண்ணும் இல்லை ,
பறந்து பாட விண் தேட வானம் இல்லை ,
நீ தந்த வலிகளை 
நான் கவிதைகளாக்கிவிட்டேன் .
என் தனிமையில் எனக்கு துணையாய் 
என் கவிதைகள் உண்டு ,
உன் தனிமையில் உனக்கு 
என்னை தவிர வேறு யாருமில்லை,
அதற்காகவேண்டியாவது ,
நான் உன் உடன் இருக்கிறேனே . . ! 

சனி, 29 நவம்பர், 2014

ஹைக்கூ

காதலோடு அழைத்தேன்,
அணைத்தாய் - என்னை இல்லை
அலைபேசியை!

கனவறை

வந்து பார் ,
என் கனவறை முழுதும் உன் பிம்பம்..
நிஜத்தில்
நீ எங்கோ, நான் எங்கோ!

கவிதைக்குவியல்

உனக்கும் எனக்குமான 
கவிதைக்குவியல்,
நம் கை பேசிகளின் inbox !

வெள்ளி, 7 ஜூன், 2013

காதல் !

அன்பை குறிக்கும் பொதுச்சொல் 
தோல்வியில் எப்படி பதில் சொல் !
காதல் 

திங்கள், 26 டிசம்பர், 2011

கிராமத்து குயில் கூவுது.

காத்ததிச்சா
பறக்குற சருகாட்டம்,
உன் நெப்புல கரையுது என் பாதி உசுரு.
உசுரோட சேந்து
நானும் கரையுறேன் உனக்காக.
மாமா உனக்காக.
பேசி பேசி மறுகறேன்
நீ வரபோற பாதைய
பாத்து பாத்து ஏங்குறேன்.
உங்கூட இருந்த நிமிஷம்
நெனச்சு நெனச்சு கெறங்குறேன்.
என் உசுர நீ வாங்காம 
உடனே வந்துடு என்னாண்ட . . .



ஞாயிறு, 25 டிசம்பர், 2011

மென்காற்று


தென்றல் மென்மையா?
அட பாவி,
நீ உரசி செல்ல,
நொறுங்கியது நான் தானே..

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

காதல் பரிசு ....


காதல் என்றான் ,
கவிதை தந்தேன்.
பொருளை கொன்று வார்த்தையாய் தந்தான்.
காதலை தந்தேன்,
அவன் நெஞ்சின் கடைசி துளி ஈரம் வரை
வழித்து என்  கண்ணில் தந்தான்.

கண்ணீர் விட்டேன்,
அவன் தாகம் தீர்த்தான்.
முழுதாய் என்னையே தந்தேன்,
உயிரை பிடுங்கி சடலமாய் வைத்து விட்டான்...





வியாழன், 23 ஜூன், 2011

இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !

காதலுக்காக மட்டுமே

கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை

காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய் ...

சரி விடு .. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?

இதுவும் நம் காதலுக்கு (.. மன்னிக்கவும்..)...

இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !

சனி, 28 மே, 2011

எதிர்பார்ப்பாய்....

உன் மீதான காதலின் 
ரிஷிமுலம் தேடி, 
நான் களைத்துவிட்டேன்
காதலுக்கு காரணங்களுண்டு.
எதிர்பார்பில்லா அன்பை
அது வெளிப்படும் தருணம்,
காரணங்களை கண்டறிய முடிவதிலையே, 
ஏன் ..?
இருந்தும் நான் எதிர்பார்கிறேன்
உன் கண்ணீர்
என் விழிதனில் வழியவும்,
என் புன்னகை,
உன் இதழ்களில் கசியவும்...!

பிரியம்



கம்பன் வீட்டு 
கட்டு தறியும்  கவிபாடும்.
என்னை விட்டு செல்லும்
என் உயிரின் துளிகள்
பிரியத்தை பேசுமா...?
பிரிந்த பிரியத்துடன்,
பிரியத்துக்கு ஏங்குபவள்....

சனி, 19 மார்ச், 2011

உனக்கு நான்..!


மழைகால நீர் தேக்கமாய் உனக்கு நான்...
நீ கல்லை எறிந்தாலும் சரி ,
நீ சொல்லை எறிந்தாலும் சரி,
அல்ல,
என்னையே எறிந்தாலும் சரி..!





நான்
நீர் குமிழ்கள் போல்,
உன்னை மட்டுமே வட்டமிடுவேன்..!

புதன், 2 மார்ச், 2011

பிரிந்த உள்ளம், மறைந்த நேசம்


காதல் பேசி
காவியம் சொன்ன கண்கள்,
இன்று மூடியதேனோ?
உள்ளம் வரை இல்லாது
உதடு வரை தங்கிய உறவு நானோ?

வடிவம் இல்லா உருவமாய்,
உருவம் இல்லா உணர்வாய்,
உணர்வுகள் புரியா உறவாய்,
வார்த்தைகள் இல்லா பாஷையாய்,
பாஷை இல்லா உறையாடலாய்,

ஏன் இந்த கொடுமை?
வந்து கேள் என் தலை அணையை,
கூறும் என் கண்ணீர் கதையை.!

சனி, 5 பிப்ரவரி, 2011

காலமான காலம் .


உன்னை பற்றிய எண்ணங்கள்
ஏதும் இல்லை.!
கேட்டதை தருவாயா;
சில சொற்கள் உதிர்பாயா;
இல்லை எதிர்பார்ப்புகள்,
உன்னிடமிருந்து.!
கனவுலகில் கூட
வேண்டாம் உன் பாராமுகம்!
தூக்கம் இல்லையடா எனக்கு!

உனக்காக,
உணர்வெழுப்பி,
உடைந்துருகி,
உயிர் கசிந்து
நான் எழுதும் காலம்,
காலமாகி,
காலம் பல கரைந்தோடி விட்டது.!


வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

என் உயிருக்குள் நீ!





பல சமயங்களில்

என் மனதில் அடிவாரத்தில்
ஓங்கி அடிக்கும்
உன் நினைவலைகளின்
சில சாரல்களாய்..,
ஓரீரு வரிகள்.!

உன் மழையின்
சாரலில் சிலிர்த்து எழ,
உயிரும் உடையும் சப்தம் 
பலமாய் என்னுள்...!

என் உயிர் தூறல்
சிறிதேனும்
ஈரப்டுத்டுமா
உன் இதயத்தை....
அல்லையேல்
குடை விரித்து பிடி..!
கரை படபோகிறது,
உன் கல்நெஞ்சம்..!

துலைந்த இடம்  ஒன்றாய்,
தேடும் இடம் மற்றொன்றாய்,
மதிகெட்டு தான் திரிகிறேன்,
தீரா அன்பினால்.!


உன்னால் உடைந்த திசுக்கள்
ஒட்ட  தான் இல்லை என்னுள்;
அதில் ஒன்றாய்,
என் சிறு இதயம்!
வெறும் செநீரை மட்டுமே சுமக்காமல்,
உன்னையும் கருவாக்கி தாங்கிட,
ஆசை பட்ட பாவத்திற்கு,
உடைந்தே கிடக்கிறது,
ஆறா ரணமாய்!!
அதனால் தான்
துடி துடித்தே,
ஏங்குகிறதோ??

காயங்களால் மட்டுமே தீண்டி,
நரம்புகளையும் தூண்டி,
சுடும் தீயிற்கு இரையாக்கி விட்டாயோ,
கடைசியில் என்னை??

நெஞ்சம் சரிகிறது,
கண்ணீரும் எரிகிறது!
உரிமை போர் கோடி
தூக்கிட தயார் இல்லை நான்.!
அறிந்தேன் உன் மீதான
என் உரிமையை.!
வார்த்தைகளில் ஒருவாராய்,
செய்கையில் மற்றோருவாராய்,
உணர்த்தியே விட்டாய;
வழியை விலையை எடுத்து.!

பாராமுகமான உன் மொழியை விட
இழந்த வலி பெரிதல்ல!
ஆசைகள் எதிர்பார்புகளாக,
எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாக,
ஏக்கங்கள் ஏம்மாற்றதை தழுவ,
ஏம்மாற்றங்கள் உன் எதிர்ப்பை பறை சாற்ற,
எதுவுமே நிலையானதில்லையோ.,
உன்னை போலவே??

விழி உடைத்து
வழி கண்டு
உணர்வுகளை தாக்கி,
இன்று,
என் உயிருக்குள் நீ!

மௌனங்களில்
உன்னை எழுதி
வார்த்தைகளில்
உன்னை வரைய..,
உன்னுள் நான் கலந்தேன்.!
இல்லை இல்லை,
என்னுள் நீ தான்,
இன்றும், என்றும்!
உருகி
மருகி
மருவ நேசம் கொள்ள - என்
உயிர் உறங்கிய பின்பாவது
உணர்வாயா,
பெயர் இல்லா 
என் பந்தத்தை.....????
அதன் நேசத்தை...???









புதன், 2 பிப்ரவரி, 2011

காதல் காதல் தான்..!

உன்னால் நான் நீர் சிந்தினாலும்,
அதை கண்டு நீ சுகிதாலும்,
கனவாய் நிஜங்கள் தொலைந்தாலும்,
நிஜங்களின் நினைவுலகில் வாழ்ந்தாலும்,
நினைத்து நினைத்து மரித்தாலும்,
வெறுப்புகள் அனைத்தும் சகிதாலும்,

காதல் காதல் தான்!
அன்றும்
இன்றும்
என்றும்
காதல் காதல் தான்..!

தோற்றும் வென்ற நேசமோ?

அவனும் நேசித்தானோ என்னை?
அறியாது விழித்தேன்.!
நீர்த்திரை இட்ட கண்களோடு
என் மண அழைப்பிதழை
அவன் பெற்ற போது..........
மரித்த என் காதலே
நீ தோற்தாயா??
இல்லை வென்றாயா?