பௌர்ணமி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பௌர்ணமி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஜூலை, 2017

பௌர்ணமி கவிதைகள்

நிலவை போல் நம் உறவு,
தேய்ந்தும் தோன்றியும், 
முழு இருட்டும் 
கடன்வாங்கிய வெளிச்சமுமாய்! 
குடும்பம் எனும் வானில்,
கண்கட்டி விளையாடும்
கடனாளி நிலவாய் . . ! 

பௌர்ணமி கவிதைகள்

என் கனவுகளில் தேய தொடங்கி
உன் முழு ஒளியில்
நான் கண் விழித்தேன்!
நீ என் பௌர்ணமி . . !

பௌர்ணமி கவிதைகள்

ப்ரகாசமாய் மிதந்தாலும்
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
மத்தியில்,
கதியற்ற ஒற்றை நிலவாய்
கருநீல இருள் வானில்
தனி வெள்ளை தட்டாய்
சொல்லொன்னா சோகமேந்தி
பௌர்ணமி நிலவு . . !

பௌர்ணமிகவிதைகள்

நிலவும் தாயே
தான் தேய்ந்தாலும்
பேனாக்கள் வழி
பிரசவிக்கிராள் கவிதையாக . . !
நீ பௌர்ணமி

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்


நீயும் தமிழ் பெண்ணோ ?
நாணத்துடன் , 
தென்னங்கீற்றுக்களிடையே ஒளிந்திருந்து 
குளிர் பார்வையால் கண்களை நிரப்புகிறாயே ,
நீ பௌர்ணமி 

சனி, 11 பிப்ரவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்

பிள்ளைக்கு பசியுண்டு 
கரு நீள் வானை சூழ்ந்த 
பஞ்சு பொதி மெகங்களூடே 
அவள் காட்டிய பால்நிலவுண்டு…
நிலவின் மேனியில் திரையிடும்
அவள் முகம் மட்டும் வெகு தூரமாய்!
நீ பௌர்ணமி ...

வெள்ளி, 13 ஜனவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்

இன்று முதல் அவள் தேய தொடங்கினும்,
பட்டொளி வீசி என் இரவுகளை விடியலில் தள்ளுவாள்!
அவள் போராடா காரிருள் மேகமில்லை,
அவள் ராஜ்ஜியத்தில் வானமே எல்லை!

வெள்ளி, 16 டிசம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

நீரோடு நிலவு
தெளிந்து தெரிவதைப்போல்
உன்னோடு நான் ,
நிழலாய் மட்டும் . .
நீர் நிலவு ! 

பௌர்ணமி கவிதைகள்

கடன் வாங்கிய காரணத்தினால்,
ஆதவனிடமிருந்து மறைந்து ,
கதியற்று ஒற்றையாய் ,
தேய்ந்து தோய தொடங்கினாளோ 
பௌர்ணமி நிலவாய் . . !
பெண் நிலவாயின் ,
தனிமை புதிதல்லவே ! 

செவ்வாய், 13 டிசம்பர், 2016

பௌர்னமி கவிதைகள்

பூமி தாய் மடியில் இளைப்பாறிய நிலாப்பெண் 
ஆதவனிற்கென தாய் மடி விட்டுக்கொடுத்து
 வான் வந்தாளோ 
கதியற்ற ஒற்றை நிலவாய்...
பெண் பௌர்ணமி. . !

திங்கள், 14 நவம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

நிட்சத்திரங்களை ஈன்றெடுத்த
நிலவுமகள், பிரசவ வலியில்
அமாவாசையாய் மறைய...
ஈரேழு நாட்களில்,
மீண்டும் மகவு தாங்கிய,
பௌர்ணமி மங்கையாய்...!

பௌர்ணமி கவிதைகள்

அவள் ஆசைப்படுபவை,
அழகாகவும் ,
கையில் எட்டாததுமாயே..!
நீ பௌர்ணமி! 

வியாழன், 20 அக்டோபர், 2016

பௌர்ணமி கவிதைகள்

காதல் நிரம்பிய உலகை
கேட்கவில்லை...
இரவின் மடியில்,
நிலவை பகிர்வோம் !
நீ பௌர்ணமி !

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

இரவில் மடியில் 
துடிக்கும் நட்சத்திரங்கள் போல்
என் இதயம் துடிக்க,
ஆழ்கடலில் மூழ்கிய
முழு நிலவாய்,
உன் நினைவு . .
நீ பௌர்ணமி . . .

பௌர்ணமி கவிதைகள்

ஆக்ரோஷமான ஆதவனே
என்னையும் நிலவையும் 
நடு நின்று பிரிப்பவன். . .
அவனால் எரிந்த முழு 
நிலவாய் நீயும் 
உன் காரிருள்
நிழலாய் நானும் . . .
நீ என் பௌர்ணமி . . .

பௌர்ணமி கவிதைகள்

ஒற்றை நிலவாய்,
வான வீதியில்,
வெளிச்சம் புகட்ட
உன் பிறப்பு…
தேய்ந்தும் மலர்ந்தும்
தோற்றமளிப்பது
உன் சிறப்பு…
உனை காண
இனியுமில்லை
எனக்கொரு எதிர்ப்பு…
நீ என் பௌர்ணமி…

பௌர்ணமி கவிதைகள்

மண்ணில் இருந்து நான்,
சிலந்தியாய் என் எண்ணங்கள் கொண்டு வலை பின்ன,
விண்ணில் இருந்து நீ,
நிதர்சனமாய் சிரிக்கிறாய் . . !
சிக்கல்களில் சிக்கி கொள்ளாமல் . . !
நீ பௌர்ணமி . . .

பௌர்ணமி கவிதைகள்

தனிமைக்கு பழகிய என்னை ,
குடும்பமாய் அணைத்து ,
இருளில் சிரித்த முகமாய்,
தூரத்தில் ஓர் நிலா மனிதன் ,
என் பிம்பமாய்,
சிரிப்பில் சேர்ந்து
கண்ணீரில் கரைந்து ,
ஆறுதல் விரிவடைவதுமாய் . . .
நீ பௌர்ணமி !

பௌர்ணமி கவிதைகள்

காரிருள் விண்ணில் ,
தொலை தூர தொடுவானில்,
மிளிர்கிறாய்,
ஒளிர்கிறாய் . !
என்றேனும் ஓர் நாளெனிலும் ,
என் மௌன உலகில் ,
ஒளிர்வூட்டி
குளிர்விக்கிறாய் . . !
சிலுசிலுப்பேற்றி ,
கூறாமல் கூறுகிறாய் ,
தொலைவாய் நிலவாய்
இருந்தும் அணைப்பாய் என . . !
நீ என் பிள்ளை நிலா . . !

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

பௌர்ணமிகவிதைகள்.

உன்னை நோக்கி தவழ்ந்து வருகையில்
உடைந்த என் முழன் காலின் வலியை
தவிர வேறில்லை தர
என்றே நினைத்தேன்.
வெண்கிரணங்கொண்டு என் வெறுமை அள்ளிக்கொண்டு, 
நீ முடிச்சிட்டாய் முத்தாய்ப்பாய்.
நானே எழுத வேண்டும்.
உன் பிரகாசங்கொண்டு
அத்துனையும்
பிரகாசமாய்
நானே எழுத வேண்டும்.
ஏனெனில்,
நீ என் பௌர்ணமி...
#பௌர்ணமிகவிதைகள்.