நள்ளிரவில்
குளிர் நிலவின் கீழ்
அலைபாயும் என் ஆன்மாவை
தடுக்கும்
தீக்கனி தொடுதல்களே
உன் நினைவுகள்...
எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..
புதன், 17 செப்டம்பர், 2025
அமைதியே காதலாகி..
நீ எங்கோ
காற்றிடம் கிசுகிசுக்கிறேன்,
மேகத்தின் திறைக்கிழித்து
உனை அடைய..!
உன் ஆன்மாவின் சுவாசம்
என் நுரையீரல் மடிப்பை
நீவுகின்றது..
ஒவ்வொரு இரவும்
நட்சத்திரங்கள் உனக்காக
பதிலளிக்கின்றன..
நான்
நிழல்களில்
நடக்கிறேன்,
நீ எங்கோ ..
காலம் அன்பின் முன்
தலைவணங்கும் இடத்தில்,
ஒளியாய் நிற்கின்றாய்... ❤❤
வியாழன், 4 செப்டம்பர், 2025
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
முதல் எழுத்தை கற்ற நாள்
கையில் பேனா கொடுத்தீர்,
மனதில் ஒளியேற்றினீர்...
பிழைகள்,
பேத்தல்கள்,
தடுமாற்றங்கள்,
அனைத்தையும் பொறுத்து
சொற்களால் செதுக்கினீர்
எம்மை ஒரு நல்மனிதனாக...
தாயக அணைத்தீர்,
தந்தையாக வழி நடத்தினீர் ,
தோழன் போல தோள்நின்றீர்,
உலகம் என் முன் திறந்த போது,
நத்தைச் சிப்பியில் அடைக்கப்பட்டிருந்த
அடர் கனவுகளை,
உடைந்த என் கனவுகளை ,
திரும்ப ஒட்டி
நிஜமாக்கி நகர்ந்தீர்...
ஒவ்வொரு பாடத்திலும்
வார்த்தைகளோடு,
சிந்தனைக்கு சுடர் புகட்டி,
மனசாட்சியையும் விதைத்தீர்.
அறிவை மட்டும் அல்ல,
உணர்ச்சியையும் கற்றுக்கொடுத்தீர்..!
காலம் கடந்து
நான் முன்னேறுகையில்,
நிழலாய் நின்று உணர்த்திணீர்,
பண்பினை...
என் வெற்றியின் ஒவ்வொரு பக்கத்திலும்
உந்தன் கையொப்பமே...
ஆசிரியர் தினம் ஒரு நாளே,
ஆனால் உந்தன் ஆசிகள்,
எமக்கு
எந்நாளுமே!!
நான் வணங்குவது
உந்தன் அறிவை மட்டுமல்ல,
உந்தன் அன்பையும்,
அர்ப்பணிப்பையும் சேர்த்து தான்...
அன்பு வணக்கங்கள்...
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!!
நன்றியுடன்,
ஞாயிறு, 15 ஏப்ரல், 2018
உன் நினைவில் . . .
திங்கள், 4 செப்டம்பர், 2017
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! ! !
தாய் தந்தது உயிர்
தந்தை தந்தது அன்பு
எனில் எமக்கு
நீர் தந்ததோ
உணர்ச்சி !
எதிர்பாரா சந்திப்பில் ,
நாங்கள் முன்னேறி
நல்ல குடிமகன்களாய் இருக்கையில்
எத்துணை மகிழ்ச்சி
எத்துணை குதூகலம் !
உங்களை வாழ்த்த வயதில்லை
உங்கள் அன்பிற்கு
தலை வணங்குகிறோம்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! ! !
வெள்ளி, 28 ஜூலை, 2017
பௌர்ணமி கவிதைகள்
தேய்ந்தும் தோன்றியும்,
முழு இருட்டும்
கடன்வாங்கிய வெளிச்சமுமாய்!
குடும்பம் எனும் வானில்,
கண்கட்டி விளையாடும்
கடனாளி நிலவாய் . . !
பௌர்ணமி கவிதைகள்
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
மத்தியில்,
கதியற்ற ஒற்றை நிலவாய்
கருநீல இருள் வானில்
தனி வெள்ளை தட்டாய்
சொல்லொன்னா சோகமேந்தி
பௌர்ணமி நிலவு . . !
செவ்வாய், 21 மார்ச், 2017
பயணம்
சுவாசத்தை தேடி அலையும் இலைகள்,
புற்கள் நிறைந்த வனங்கள் ,
இலையுதிர்ந்த மரங்கள் ,
பனி படர்ந்த புல்வெளிகள்,
மழை தாங்கிய கார்மேகங்கள் ,
வானும் பூமியும் வெண்மை படர,
அவ்வபோது பஞ்சவர்ணங்கள் தெறிக்க,
முடிவற்ற நீண்ட பாதையில் ,
சொற்களை தேடியும் ,
கனவுகளை சுமந்தும் ,
கவிதைகள் வடித்தும் ,
கேளிக்கையை சகித்தும் ,
பேனாக்காரியாய்
நீண்டதூர பயணம் . . .!
உலக கவிதைகள் தினம் படைப்பு - 2017
செவ்வாய், 14 பிப்ரவரி, 2017
பௌர்ணமி கவிதைகள்
சனி, 11 பிப்ரவரி, 2017
பௌர்ணமி கவிதைகள்
கரு நீள் வானை சூழ்ந்த
பஞ்சு பொதி மெகங்களூடே
அவள் காட்டிய பால்நிலவுண்டு…
நிலவின் மேனியில் திரையிடும்
அவள் முகம் மட்டும் வெகு தூரமாய்!
நீ பௌர்ணமி ...
செவ்வாய், 31 ஜனவரி, 2017
ஒருவேளை . . .
அந்த பயணம் ,
கனிவு பார்வைகளுக்கென
கண்கள் ஏங்கும் வரை.
ஒளிந்து கொண்டு தான் இருந்தன
இயலாமை என்றொரு உணர்வு ,
உரிமையை நிலைத்து கொள்ள
முடியாது போகும் வரை.
காணாமல் தான் இருந்தது ,
எதிர்த்து பேசும் குணம் ,
அநாகரீகமான கேள்விகளை
செவி கேட்காத வரை!
இத்துணைக்கு பிறகும் ,
வெட்கமில்லாமல் ஏங்கும்
மந்தை மனதை கண்டால்,
பொங்கி வழிகிறது வெறுமை!
மடை திறந்து ஓடும் வெள்ளமாய் ,
கண் வழி வரும் நீரை ,
துடைத்தெறிய ஒரு
விரலையாவது தேடுகையில்
உரைக்கிறது பல உண்மைகள்,
துள்ளி திரிந்த காலத்தில்
சேகரித்து வைத்திருக்கலாம்
ஒரு துளியையாவது . .
இத்துணை வெறுமையை ,
உண்ணு விழுங்க ,
இத்துணை தவறுகளை
மொத்தமாய் அழிக்க . . .
ஒரு வேளை இவையனைத்தும்
இல்லாது இருந்திருந்தால் ,
இல்லாமல் போன அவன்
நினைவுகள் புதைந்து இருக்குமோ எங்கேனும்!
திங்கள், 23 ஜனவரி, 2017
பெயரிடாவரிகள்
மகரந்த வாசம் தேடி நின்றேன்,
காகித பூக்கள் என அறியாமலே.
வெள்ளி, 20 ஜனவரி, 2017
ஜல்லிக்கட்டு - தடை - போராட்டம் !
புதன், 18 ஜனவரி, 2017
தடை அதை உடை
நியூயார்க்கில் நான் . . ! - 4
வெள்ளி, 13 ஜனவரி, 2017
பௌர்ணமி கவிதைகள்
பட்டொளி வீசி என் இரவுகளை விடியலில் தள்ளுவாள்!
அவள் போராடா காரிருள் மேகமில்லை,
அவள் ராஜ்ஜியத்தில் வானமே எல்லை!