வியாழன், 16 செப்டம்பர், 2010

விழிகளில் விழுந்தேனோ..?




ஆழியினும் ஆழமான
உன் மௌனத்தை
எனக்க்கு என்றும் விளம்புகிறது
உன் விழிகள்..!
அதனால் தான் என்னவோ..,
தவறுகள் செய்தால்,
கண் நோக்கி பேச முடிவதில்லை என்னால்..!

முதற்கனவா பகற்கனவா?


அருகினில் மழை சாரலின் குளுமையாய்,
உந்தன் அணைப்பினில் கிறங்கினேன்..
மூளை சிலிர்த்து உசுப்பியது..
இது வெறும் பகற்கனவென..!

காதலனா கணவனா ?


திருமணத்தின் பின்பு ,
நமது கர்வ பசிக்கு 
தீனி ஆகிவிடுமோ காதல்?
வேண்டாம்., 
நாம் காதலர்களாகவே வாழ்ந்திடுவோம்..

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

எனதினிய மேன்மக்களுக்கு..

வாழ்வெல்லாம் வெற்றி காணும்
வகைகளை எல்லோருக்கும் 
ஆழ் மன அன்பையும் 
அரிதான அறிவையுங்க்கூட்டி 
அன்றாடம் புகட்டுகின்றனர்,
எம்-மேன்மக்கள்.!


அன்பு நெறி பண்புடனே 
அறநெறியும் அறிந்துகொண்டு 
நல்லநிலை எய்துவதற்கு
ஏணியாய் உதவுகின்றனர்
எழிலார்ந்த ஆசிரியர்கள்..!


சத்தான கருத்துக்களை 
முத்தான முழுஅறிவு - அதனையும்
முழு நிலா வெளிச்சமாய்,
கால் முளைத்த நற்கனவுகளுக்கு
வெற்றியின் வழி காட்டி
நிர்மல்யமாகவே தொடக்கத்தில் நின்று 
நிறை நெஞ்சுடனே வாழ்த்தும் 
எமதினிய ஆசிரிய உள்ளமே...
வாழ்த்த வயதில்லை உம்மை,
வணங்குகிறேன் சிரம் தாழ்த்தி.....


                                            இனிய ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்...!

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

சத்தமின்றி யுத்தம்


அலை பேசியில்
அலை அலையாய் அன்பளிப்பு அளிக்க,
ஐயோ..!
அது உன் முத்தங்களை வாங்கி,
வெறும் சத்தங்களாகவே,
ஆம்,
வெறும் சத்தங்களாகவே உனக்களிக்க,
மொத்தமாய் உனக்காக தர,
ஓர் யுத்தம் செய்யவே வேண்டும் நான்!
சத்தம்ன்றி ஓர் யுத்தம்...!
சத்தமின்றி ஓர் முத்தம்!

உயிர் சொர்க்கம்

சாகவும் தயார் நான்!
அனால்,
உன் மார்பில் சாய்ந்தபடி,
உன் குரல் செவிதனில் ஏந்தியபடி,
வேண்டும் ஓர் மரணம்!
ஏன் என்றால்,
உயிர்சொர்க்கம் எனக்கு மட்டும் தான்
சொந்தம்.