செவ்வாய், 25 மே, 2010

ஹைக்கூ...



யாரை வரவேற்க
இந்த வளைவு நடனம்?
காற்றசைவில் தென்னை மரம்...

குளிர்நாயகனே...


சிந்தை சிதறடித்து
நின்தைகளை முறியடித்து,
நித்தம் எனை காண
நீ வருவாய் என்
காத்திருந்தேன் நானும்
சாகசப் பறவையாய்;
பூவிழிதனிலே எதிர்பார்ப்பை தேக்கியபடி..
ஒரு நாள்,
முழு மனதுடன்,
எனது மனிதனாய்..!
ஒரு நாள்,
முழு இருட்டாய்..
என்னை விட்டு தூரமாய்!!
மித நாட்களிலே
தோன்றி தேய்ந்து..
எந்தன் குளிர் நாயகனே!
ஏனடா இந்த கண் கட்டி விளையாட்டு??
முகம் புதைய தலையணை அணைப்பில்,
மனம் சிதைய..,
என்சிந்தயும் கலங்குதடா.....

நான் ஓர் அகதி!

சொப்பனங்கள் களைந்து
கண்கள் விழித்தால்,
அங்கோ கிடந்தன
சடலங்கள் சிதைந்து
வேதங்கள் அழிந்து,
செந்நீர் மட்டுமே படிந்து,
உயிரை இழந்து?!
மிதம் எஞ்சிய நானோ,
உயிரை மட்டுமேந்தி,
உணர்வையும் தொலைத்து
உள்ளேன் ஒரு அகதியாய்!
நான் கேட்பதெல்லாம்,
ஒரு குடை நிழல்,
முக்கால்  நுரையீரல் காற்று,
அரை வயிற்று  உணவு,
கால்கள் ஊன ஓர் நிலம்,
ரத்தம் கேட்காத நிலம்!

எந்தன் மண்ணை
அடுத்தவர் ஆள்வது சரியா?
இதை தட்டி கேட்டால்,
உயிர் பலித்தான் முறையா??
என் நாவிலோ,
செந்தமிழ் தேன் மழை;
அதன் விளைவோ .,
என் தாய் மண்ணில்,
வெடிகுண்டுகளின் மழை.
எழுதுங்கள் என் கல்லறையில்,
"இவள் அழிவிற்கு;
மொழி பற்றே - தாய்
மொழி பற்றே காரணம்"
மலரின் மேன்மையை -எங்கள்
பிணவறையில் வைக்கும்
மலரின் மென்மையில்
ஒரு பாதி,
ஒரு பாதியை
என் ஈழ மக்களிடம் காட்டி இருந்தால்??
ஒரு வேளை,
ஒரு வேளை,
இத்துனை சிறார்கள்
அனாதையாகி இருக்க மாட்டனரோ???
ஆம்!
நான் ஓர் அகதி!

அனைத்தும் இழந்தவள்!
உயிருடையும் சப்தத்தை மட்டுமே
செவிதனில் சுமப்பவள்!
சிதைந்த சிந்தனைகளை
சிரிதேழுப்ப முயற்சிப்பவள்!
உயிர் கலை  கற்று,
உயிர் களை எடுக்க,
புதிதோர் உலகம் படைக்க,
துடிக்கும் ஓர் அபலை அகதி!
ஆம்!
நான் ஓர் அகதி!

தாயுமானவனோ நீ...


எல்லை அற்ற சோகங்களுடன்
உன் நினவுலகில் தலை சாய்ந்தேன்...
கருவறையும் நினைவதனில் 
கொண்டவன் நீ தானடா...

திங்கள், 24 மே, 2010

நான் ஓவியன் எனதெரிந்தும் நீ.......................


தேய்ந்து வளரும் நிலவாகி,
வளரும் மதிக்கு வானாகி,
வான் முகிலுக்கு மழையாகி,
மழை சேரும் தாய் மடியாகி,
நீர் தேடும் செடி வேராகி,

என்தோட்ட  பூக்களுக்கு பனியாகி,
வாடும் மலருக்கு மண்ணாகி,
துவளும் எனக்கு மென்னிசையாகி ,
என் கவிதைகளுக்கு கருவாகி,
இன்று என்னுள் உருவாகி நிற்கும்
என் காதலே....
என்னை என்ன செய்ய போகிறாய்..??

எரிகிறேனடா ...


திசை தெரியாது,
எனது உள்ளுணர்வுகள் 
ஒன்றை ஒன்று
கொளுத்திகொள்கின்றன..
நானும் உடன் எரிகிறேன்
மிக சுகமாகவே...
உன் நினைவுகளில்
ஆரம்பித்து..
அதிலே சாம்பலாகிறேன்....