திங்கள், 5 செப்டம்பர், 2011

என் ஆசானுக்கோர் மடல்....!



நிறைவாகும் வரை
எமது குறைகளை கரைத்து,
சிறகுகளை விரிக்கசெய்து,
உரக்க சிந்தனை கொண்டு,
எமது துயர் ஏற்று,
எங்களுக்குள் விவேகம் விதைத்து,
" வெற்றிகள் எளிதாகும் - உன்
வாழ்வும் இனிதாகும்"
என என்றும் ஊக்குவித்து,
எம்மை சிகரத்திற்கு நடத்தி செல்லும்
எனது ஆசானே!
விண்ணையும் வளைத்து உமக்கு
மாலை இட ஆசை தான் எனக்கு !
நீர் கற்பித்த எழுத்துகளால்
மடலிடுகிறேன்..
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...!