புதன், 12 செப்டம்பர், 2012

மனதில் உறுதி வேண்டும் . . . . .!

பிறந்த குழந்தைக்கு
பெயர் வைக்கிறோமா?
 இரண்டாம் பட்சமானது இப்போது!
பிறக்கும் புத்தாண்டுக்கு,
 உண்டு ஒரு பேரு !
சுகாதாரம் பேணி காக்கும் ஆண்டு,
கல்வி போதித்தல் ஆண்டு,
அறிவியல் ஆண்டு,
அவர் ஆண்டு,
இவர் ஆண்டு !
ஆண்டுக்கு ஒரு உறுதி மொழி !
வறுமை போக்கும் ஆண்டாம் - அதில்
 பட்டினியாய் செத்தவர்கள் ஏராளம் !
அறிவியல் ஆண்டாம்  - அதில்
பள்ளிகனுப்பாது தொழில் சாலைக்கு
அனுப்பினர்  பச்சிளம் குழந்தைகளை !
மனதில் உறுதி வேண்டும்
என்றான் பட்டு கவி பாரதி!

உறுதி  மொழியின் உறுதி
குருதியிலும் உறையவில்லை,
 உரைக்கவில்லை!
எங்கு செல்கிறோம் நாம்?
எங்கு செல்வோம் நாம்?



கனவுலகின் கூத்தாடி !

கட்டு மாடி கட்டிடம்,
வெள்ளை கோட் சூட் ,
பென்ஸ் கார்,
சுழல் நாற்காலி . . . .
கண்கள் முழுதும் கனவுகள் தாங்கி
தோள்களில் புத்தக பை ஏந்தி,
பள்ளியிலிருந்து   திரும்பினேன் நான்!


ஆழி பேரலை,
சுனாமியாய் ,
சுண்டல் விற்றிருந்த
என் தந்தையை  விழுங்க ,
குழந்தை தொழிலாளியாய்
இன்று கல் சுமக்கிறேன்
ஓர் கட்டிடம் எழுப்ப  . . . !


 

புதிய பிரம்மா !

உறவுகளால் உணர்விழந்து,
நெசத்தால் நெஞ்சம் நோக ,
பாசத்தால் பழிகள் பழக,
வற்றியது என் நெஞ்சின் ஈரம் !
விழி உடைத்து
அரங்கேறியது கண்ணீரின் சரம்!
இனியும் ஏதும் எஞ்சவில்லை ,
புதிதாய் பறி கொடுப்பதற்கு!
அனைத்தும் சலித்திட ,
கட்டவிழ்ந்தேன் நானும்,
புதிதோர் உலகம் படைக்க!
நான் தான்,
புதிய பிரம்மா !