செவ்வாய், 30 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #17

பிறை இல்லா நாளிலும்
அவள் நெஞ்சில்
பௌர்ணமி கோலம் !
அதனால் தான்
பகலவனை கண்ட பனி போல்
பெண் பாவை அவள்
உருகி நிற்கிறாளோ ?
அவள் - காந்தாரியோ மீராவோ!

பனியும் பெண் பாவையும் #16

வன்மையும் மென்மையுமாய்
வளைந்தோடிய நதியிடம்
கேட்டாள் பெண் பாவை இவள்,
வானந்தரதிலும் வன மத்தியிலும்
நீர் வளைந்து செல்கையிலே,
காண்பாயோ ஓர் பனித்துளியை ?

திங்கள், 29 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #15

பனி சிற்பமாய் உறைந்தாள்
பெண் பாவை அவள்
தன் கண்ணனின் குழலோசையை
காணிக்கையாய் கொண்ட
தன் காதல் மீது கர்வங்கொண்டு ! !

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #14

கோட்சே வாதம் பேசும் கன்னியாவான்களே
கவிதை வரைய தயாராகுங்கள்,
அதோ வருகிறாள்
தன்  காதலின் தூதாய்
பனித்துளியை வரித்த
பெண்பாவை!

பனியும் பெண் பாவையும் #13

தன் கருவின் புதயலேன
கண்டெடுத்த அவளின்
காந்தர்வ காயகனின்
கண் சிந்திய ஒரு துளியில்
பனிபோல் உறைந்து நின்றாள்
பெண் பாவை அவள் !

பனியும் பெண் பாவையும் #12

பனி போர்வைக்குள்
மறைந்தது  ஒரு துளி
கண்டெடுத்த பெண் பாவை
தந்தாள் ஒரு  சிரிப்பொலி !

பனியும் பெண் பாவையும் #11

கதிரவனின் அணைப்பில்
 கரைந்திடும் பனித்துளி
பேரிளம் பெண் பாவையே
அதை நீ கண்டு களி !

பனியும் பெண் பாவையும் #10

பனித்துளியை பரிசளித்தது
பால் நிலவு
பெண் பாவை அவள்
பால் சோறு ஊட்டுகையிலே !

பனியும் பெண் பாவையும், #9

உதிர்ந்தாலும்
உடைந்தாலும்
உறைந்தாலும்
தன்னை இழக்காத
ஒரு பனி  துளியின் மேல்
மையம் கொண்டாள்
பெண் பாவை இவள் !

சனி, 27 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #8

பள்ளிகொண்ட நிலவு
பதமாய் பறை சாற்றியது
பகலவன் வரும்முன்
பனி துளி தரிசிக்கும்,
பெண் பாவை இவளை !

வியாழன், 25 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #7

காற்றின் இசைக்கு
சங்கதிகள் எழுதி
கமகம் கொடுத்து தலையாட்டிய
பூ பாவையின் இதழில்
தெறித்து விழுந்தது பனித்துளி!

பனியும் பெண் பாவையும் #6

பூ மலர சிந்திய
வேர்வையாம் பனிதுளியின்
வாசத்தை சுவாசித்த
பெண் பாவை நினைத்து கொண்டாள்,
உழைப்பே உயர்வென்று !

பனியும் பெண் பாவையும் #5


தன்னை சூழ்ந்து கொண்ட தனிமையை 
மொழிபெயர்க்க எண்ணிய பாவை,
எழுத்தானியில் இட்டாள் 
மார்கழியின் பனித்துளியை!

பனியும் பெண் பாவையும் #4

கரைந்து போன 
பனித்துளியின் வாசத்தில்,
காந்தார பவை அவள்
கந்தர்வ கண்ணனை தேடினாள் !

பனியும் பெண் பாவையும் #3

மௌனத்தின் கதறலில் 
மெதுவாய் விழித்தது 
பாவையின் உள்ளம்,
பனி தாங்கிய கண்களோடு . . .!

புதன், 17 டிசம்பர், 2014

‪பனியும் பெண் பாவையும் #2‬

பனி தங்கிய இமை 
தேன் துளி கொண்ட இதழ்
பிரித்த பாவையின் உள்ளம் 
தேடியது அவள் கண்ணனை,
அவள் - தேவகியோ மீராவோ . . !

செவ்வாய், 16 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #1

பகல் முழுக்க புன்னகைத்து 
பாதி இரவினில் விக்கியழுத 
பெண் பாவையை மறைந்து 
இருளின் இடுக்கில் எட்டிப்பார்த்து 
நிலவு சிந்திய கண்ணீர்,
காலை பூவிதழ் மேனியதனில் 
பனித்துளியாய்...

திங்கள், 15 டிசம்பர், 2014

வாழ்க்கை ஓர் தொடர் கதை ! #1

மழை பெய்ந்து ஓய்ந்ததும்,
மேக காதலனுடன் 
மோகம் கொண்ட கதிரவன்,
தன் தாபம் தீர்த்த பின்னரே,
நிலம் கொண்ட மழை குடித்து,
தாகம் தீர்த்தானோ ?
வாழ்க்கை 
ஓர் தொடர் கதை !

செவ்வாய், 9 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #10

ஆங்காலம் தேடி
வறண்ட தொண்டையோடு
இப்புவிதனில் நான்  நடக்கையிலே,
அழகிய புதையலென
உன்னை கண்டெடுத்து,    
ரத்தினமாய்
ஜொலிக்கும் உன்னை,
என் விரலில் இட்டு,
அவ்விரல் நீட்டி
வான் பதிந்த
விண்மீன்களை கொண்டு,
சுருங்கும் உன் விழி நீவி,
உன் அருகில்
என்றென்றும் உன் அருகில்,
நான் நின்று
அடைகாக்க ஆசை தான் !
நீ,
என் இரத்தின புதையல்!
​ --- சுபம் ---

இரத்தின புதையல் #9

அப்பொழுது பூத்த
புஷ்பத்தில் ராகம் இசைக்கும்
வண்டை போல்,
என்றும் உன் கீதம்
என் செவி தீண்டும்!
நீ,
என் இரத்தின புதையல்!

இரத்தின புதையல் #8

பசிக்கும் என் மனதிற்கு
புசிக்க தந்தாய்  விருந்து !
உன் பவழ இதழ் விரித்து,
நீ சிந்திய வார்த்தைகளும் 
தந்த முத்தங்களும் !
நீ,
என் இரத்தின புதையல் !

இரத்தின புதையல் #7

அஞ்சும் இருளில் இருந்து
என்னை மீட்ட மருந்து
நீ  - கோமேதகமாய்
சுடர்கொண்டு எனக்கு ஒளிதந்தாய் !
நீ
என் இரத்தின புதையல்!

இரத்தின புதையல் #6

நீளமாய் செல்லும்
நமது பந்தத்தில்,
சாந்தமாய் நீ,
சுடராய் நான் !
ரதினச்சுருக்கமாய்,
நீலம் நீ!
நீ,
என் இரத்தின புதையல் !

திங்கள், 8 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #5

உன் மரகத முகம் காண்கையில்
கவலைகள் மறந்தோடி
நேசம் மட்டுமே  நிற்கின்றது!
நீ,
என் இரத்தின புதையல்!

இரத்தின புதையல் #4

மனம் பற்றும் முன்னேற்றத்தை
பரிசளிக்கும் வைடூரியம் போல்,
என் மனம்நோக்கும் அமைதியையும்,
இதழ் தேடும் புன்னகையையும்
அழிக்காது தருகிறாய்!
நீ
என் இரத்தின புதையல் ! 

இரத்தின புதையல் #3

வானத்தில் சுகித்த
நிலா துண்டொன்று
முத்தாகி, எனது முத்தத்தில்
முக்தியடையுதோ ?
நீ
என் இரத்தின புதையல் 

இரத்தின புதையல் #2

உன் தங்க முகங்கண்டு
ப்ரமிப்பில் பித்தாகி,
சட்டென நின்ற இதயத்திடம்,
சூரியனுக்கு உகந்த
மாணிக்கம் போல்,
உனக்கு உகந்த
இரத்தின பந்தம் இதென்றேன் !
நீ
என் இரத்தின புதையல்!

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #1

நிலவாய் நீ தீண்டி
மின்னும் வைரமாய் நான்
வெண்மை தான் எங்கும்,
தூய்மையான நம் நேசம் போல்!
நீ
என் இரத்தின புதையல்!

வெள்ளி, 5 டிசம்பர், 2014

பௌர்ணமி #8

பிறை வளர்ந்து பெரிதாகி,
கருநீல வானில் இன்று
பௌர்ணமி நிலவானது போல்,
அறிமுகத்தில் தொடங்கி,
நட்பில் வளர்ந்து,
பிரிவில்லா பந்தமாய்
இன்று  நானும்நீயும்
- நெகிழவைத்துவிட்டாய்
ஒத்துக்கொள்கிறேன்
பௌர்ணமி நான்,
என் வானம் நீ !
​​​​ சுபம்



வியாழன், 4 டிசம்பர், 2014

பௌர்ணமி #7

நிலவு வளருமே என்றேன்!
அடி போடி ,
அல்லி போல் நானும் 
நீ வருவாய் எனநின்றிருந்தேன் 
பிறையாய் வளர்ந்து 
பின் காட்சி தரும் 
பௌர்ணமி நிலவை போல்,
குறுஞ்செய்திகளில் தொடங்கி, 
கை அணைப்பில் 
நிற்கிறாய் நீ என்றாய் ;
-  உருக்கி விட்டாய் !

பௌர்ணமி #6

பௌர்ணமி #6
சில தருணங்களில் முழுமையாய்,
எனதே எனதாய்,
சில தருணங்களில் பகைமையோடு,
எனக்கென்று இல்லாமல் தூரமாய் ,
புரிகிறதா நீயும்
அந்த பௌர்ணமி நிலவும்
 ஒன்று தான் - முடித்துவிட்டாய் !

புதன், 3 டிசம்பர், 2014

பௌர்ணமி #5

பௌர்ணமி கவிதைகள் #5

தனிமை இரவில் 
துணை என யாரும் இல்லை.
அவ்வபொழுது மட்டுமே 
நிழலாய் வரும் நிலவும்
அவ்வபொழுது மட்டுமே 
நிஜமாய் வரும் உன்னையும் தவிர..
 நீ எனக்கு பௌர்ணமி தான்!  

திங்கள், 1 டிசம்பர், 2014

பௌர்ணமி #4

பௌர்ணமி #4
பிறை கொண்ட  நிலவா
நான் உனக்கு - என்றேன்!
நட்சத்திரங்கள் ஆயிரம் இருந்தும்,
வானின் அரசி
என்றும் பௌர்ணமி நிலவு தான்
எனக்கு உன்னை போல
- முடித்து விட்டாய் !