புதன், 26 மார்ச், 2014

ஸுதர்சனதிர்கோர் ஸாசனம் . . .

பறவைகளாய் பறந்து கொண்டிருக்கும்
இந்த கெவின்கேர் வாழ்விலே,
ஏதோர் கிளையில், இளைப்பாற அமருகையில்,
நிதானமாய் தீண்டும் எங்கள் செவியை
உந்தன் சிரிப்பு ஒலி . . !

தும்பிகளும் தோற்கும் உந்தன் சுருசுருப்பிலே,
கதிரவனும் கனிவான் உந்தன் பரபரப்பிலே,
விண்மீகன்களும் இடம் கேட்கும் உந்தன் விழிதனிலே,
ஐன்ஸ்டெனும் கடன் கேட்பர் உந்தன் அறிவதனிலே,
பட்டாம்பூச்சியும் பரிசலிக்கும் தன் சிறகதனையே . . !



வானம் தொடும் வரம் பெற்றோனே,
எல்லோர்க்கும் இனியவனாய்,
எந்நாளும் இளையவனாய்,
எழிலேனவே இமயமாய்
குறைவில்லா புகழோடும்,
குறைவற்ற குணத்தோடும்,

மாசற்ற மனதோடும்,
மறவாது எங்கள் நினைவோடும்,
மாறா புன்னகை கொண்டு,
தினம் பூக்கும் புதுமலர் போல்,
என்றென்றும் வாடதிருக்க,
வேண்டுகிறோம் இறையவனை . . !

உந்தன் வாழ்க்கை பறவையின்
ஓர் சிறகின் இறகுகள்,

TO SS, Our Team mate on his fare well ! :-) 31s Jan 2014. . . 



ருபியானோடு சனீரா . .

பாரிஸ் நகரில் பரிவாய் பார்த்தவள்
சைதையில் சற்றே  சேட்டையாய்  சிரித்தவன்,
கொல்லத்தில் கொள்ளை அழகோடு,
நாணி சிவக்கிறார்கள் மணகோலத்தில் நம் முன்னே !

விழிகளில்  கண்ட கனவாய் -  காதல்,
விழித்த உடன் நனவாய், திருமணத்தில்.
மொட்டுக்களை ரசித்த மனதிற்கு சந்தோஷ புதுமலராய்,
நாளைய கனவுகளில் நம்பிக்கை காண இருமனம் இணைகிறது!
திங்களின் எழில் கொண்ட தேவதையாம் இவள்,
ஆதவன் ஒளிகொண்ட இசை வேந்தனாம் இவன்
இருவர் கரங்கொண்டு இல்லறத்தேர் நல்லறத்தோடு
இனிதாய் இழுத்திடவே தொடங்குமோர்  பயணம்!

ஆன்றோர் நாள் குறித்து உமை சேர்க்க,
சொந்தங்கள் கூடிவந்து பெருமை கூட்ட  
தேவர்கள் ஆயிரம் பூச்சொரிய 
ஓருயிராய், ஆருயிராய், இணையாய்  இருவரும் !
விண்மீண்கள் கண்ணசைவில் புதுகவிதை பாடிடவே,
இசையோடு நாதம் சேர்ந்து தேனமுது உதித்திடவே,
காற்றோடு மேகங்கள் இன்ப  மழைச்சாரல் தூவிடவே,
ருபியானோடு சனீரா காதல் பாட்டிசைத்திடவே !

இசையன்னை மடியில் இளஞ்சிங்கமாய் உறுமுமிவனை
தன்மடி தாங்கும் அன்னையாய் இவள் இருக்க,
பிரெஞ்சு நாட்டின் அழகு தேவதையாய் இருப்பவளை,
தன்நெஞ்சில் சுகமாய் தாங்கும் தோழனாய் இவன்!
இவள்பாதியிவன்பாதி என்றுறைக்கும் மணவாழ்வில் 
இல்லறத்தின் இலக்கணமாய் ஜெயமளித்துஅன்போடு,
மனம் நிறைக்கும் மழலைச் செல்வங்களோடும் 

அறிவோடும் அன்போடும்ஆண்டாண்டாய் நிறைவாய் வாழியவே !

என்  அக்காவின் திருமணத்திற்காக :-) :-) :-)

வாழ்த்துக்களும் ஆசிகளுடன்

உன் குரல் கேட்க எழிலோவியமாய் காண,
காத்திருந்தோம் நாங்கள் ஈரைந்து  மாதங்கள்!

ஆகாயத்தில் கண்ட வெண்ணிலவை,
அருகில் காணும் அதிர்ஷ்டமாய் !
அன்பு போர் செய்த போதும்,
அடம் பிடிக்கும் போதும் 
அழகென நீ இருப்பாய் 
என்றென்றும்  எங்கள் ஜிஷ்ணு!
வருடத்தின் முதற் கவிதை
வரைகிறேன் உனக்காய் இன்று..
வரமென வாழ்வில் வந்த மழலையே ,
மறவாதே உன் அன்னையை!
உனக்கென உருகும் தந்தை(யை)
காண்பதோ நிஜமாய் விந்தை !
நல்லுயிர்களை உரம் என கொண்டு,
வெற்றி வாகை சூடி, 

நற்பண்பின் இலக்கணமாய் நீ வளர,
வேண்டுகிறோம் இறையவனை . . !


வாழ்த்துக்களும் ஆசிகளுடன்,
:-) 

To Jishnu (S/o. Mrs & Mr. Gomathi ) on His Birthday ! 

அடை தோசையும் நானும்!

முழு நிலவு அம்மாவிற்கு மட்டுமே
பிஞ்சு போன பிறை நிலவு,
ஏன் எனக்கு மட்டும்??

ஆதலால் அனுமதி தாருங்கள் . . !

கவிதைகளில் மட்டுமாவது
சிந்துகிறேன் என் கண்ணீரை,
துடைக்க விரல்கள் ஏதும் இல்லை,
ஆதலால் அனுமதி தாருங்கள் . .

வாழையடி வாழையாய்,
கவிஞர்களின் வரிகளிளேனும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள்
முதிர் கன்னியவள்  . . .

கூடுகளோடு மரங்களை தேடி
அலையும் என் போன்ற
ஆண் பறவைகள்,
சிறகொடிக்கபடுங்கின்றன. . .

முதிர் காளைகள் என  எங்களுக்கும்
 வைக்கலாமே ஓர் முத்திரையை,
கிழிக்குமே அது அடாவடி என
புகழப்படும் எங்கள் முகத்திரையை . . .

பேரழகியை தான்
தேடுகிறேன் நான்,
தாயாக சேயாக,
என் தாரமாக, எனக்காக . . !

பெண்ணிற்கு பேரழகு 
மதிப்பதில் பங்கதிகம்,
சிந்தும் வெட்கத்தில்
இன்னும் கொஞ்சம் . .!

நளினமும் நாணமும்
மென்மையும் மேன்மையும்
அளவான கலவையில்,
பண்பை பறை சாற்றும். . .

பெண்னொருத்தி இருக்கின்றாலெனில்
எனை ஆளும் உரிமை மட்டுமல்ல
நேசத்தோடு சுவாசமும் தருவேன்,
என் அவள் ஜீவிப்பதர்க்கு . . . !

பாரதியே,
நீ கண்ட புதுமை பெண்களில்
என்றேனும் கண்டாயோ,
நான் தேடும் பேரழகியை . . ?

என் விழி சிந்தும் நீர்
கரை புரண்டே வழிந்தோடும்,
ஆங்காங்கே பெற்றோரின்
கண்ணீர் கால்வாயாய் சேர்ந்தோடும் . . !
 
கவிதைகளில் மட்டுமாவது
சிந்துகிறேன் என் கண்ணீரை,
துடைக்க விரல்கள் ஏதும் இல்லை,
ஆதலால் அனுமதி தாருங்கள் . . !

மனமே, உன் கதவின் தாழ் திறவாய். . .

காதல் அதில் பிரிந்தால்
பிரிந்தவளுக்கு ஒரு வலி இல்லை , 
பிரிந்தவளுக்கு ஒவ்வொன்றுமே வலி தான் . . .

நேற்று வரை என் அவன் இப்படி இல்லையே,
இன்றோ அவன் அப்படி இல்லை
மாற்றம் நேர்ந்தது அவனிடமா 
இல்லை என்னிடமா?
என் பார்வையிடமா?

இரு மனமாய் இருந்த வரை 
இது இல்லையே 
திருமண முதல் நாளில்
காதல் இல்லையே !

காதலெனில் அது 
கல்யாணத்தில் முடியுமென 
கேள்வி கொண்டேன்.
ஆனால் காதலே 
கல்யாணத்தின் பின் 
முடிந்து போகும் என கற்றும் கொண்டேன் !

வலிகளை விழிகள் சுமக்கத் தவறி
அணை கொண்ட இமைகள் உடைந்து போக,
கொட்டும் அருவியில் உலகம் தடுமாற
முடிவெடுத்தேன் அவனை கடந்து போக!

என்னுள் விதை கொண்ட அவனது உயிர்,
அவன் விதைத்த காதலை தர,
அவன் காதலை நினைத்து கரையும் தருணம்,
மனமே, உன் கதவின் தாழ் திறவாய். . .