புதன், 17 செப்டம்பர், 2014

நீ தான், நீயே தான் !

பறவையாய் தங்கிடுவேன்
பறந்து விரிந்த உன்னுள்,
கம்பளம் கேட்க எண்ணம் இல்லை,
நீ என்னை அணைக்கையில்
உன் மார்போடு
நீ என்னை அணைக்கையில் ! ! !

துயர் கொண்ட நெஞ்சம் அதை
தூய நேசத்துடன் கொஞ்சும்
தருணம் கண்டேன்
நீ தரும் முத்தத்தில்
என் நெற்றியில்
நீ தரும் முத்தத்தில் ! ! !

மனதின் அடிவாரத்தில் ஆரவாரம்
மெது மெதுவாய் அடங்கும்
அமைதியாய் கண்கள் உறங்கும்
உன் ஆராரோ கேட்கையில்
நெஞ்சின் பௌர்ணமி என
உன் ஆராரோ கேட்கையில் ! ! !

நீ
என் பிரபஞ்சத்தின் நாயகன்

நீ
நேசத்தின் தாயகம்

நீ
என் ஆரோகணம்

நீ தான்
நீயே தான்

இசை . . !

புதன், 3 செப்டம்பர், 2014

Happy Teachers' Day ! ! !

அனைத்தும் உண்டு


எங்கள் நினைவில்.

நாங்கள் உயர,

நீங்கள் குனிந்து நின்றது!





பசுக்கள் தம் ரத்தத்தை

பாலாய் தருகின்றன,

எங்கள் ஆசானே,

எங்களுக்கு கல்விப்பால் புகட்ட,

உங்கள் ரத்தம்

தொண்டை நீராய் வறண்டுசென்றது !





விஞ்ஞானிகள், மருத்துவர்கள்,

ஆய்வாளர்கள் - ஏதும் நாங்கள் இல்லை,

அன்று எங்களை உரு ஏற்றிவிட

நீங்கள் இல்லாவிடில் !





சர்வாதிகாரி என்றே சொல்லுவோம்

உங்கள் திட்டுகளையும்

பிரம்படிகளையும் வாங்கிய பின்பு!

இன்று உணர்ந்தோம்,

கல்லொன்று தடை செய்த போதும்

சிலை எழுப்பும் சிற்ப்பியாய்,

எம்மை விண்ணுயர செய்த நீர்,

ஆசிரியர் மட்டும் அல்ல,

ஆசானும் தான் !





இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .