எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..
வெள்ளி, 31 டிசம்பர், 2010
உரிமையான உறவு...
வண்டோடு பூ மோதுவது
வெறி சண்டையா ??
கொண்ட உரிமையால் தானே?
நானும் அப்படிதான்..!
பனித்துளிக்கு,
சூரியனை கண்டு அச்சமா?
இல்லையடி நிச்சியமாய்.
பனித்துளி மேல்
கதிரவனுக்கு காதல்..
அதான் கண்ட உடன்
அணைக்கிறான்.!
உன்னோடு நானும் அப்படிதான்..!
நிஜமா நிழலா.?
என் நிழலும்
என்னை பிரியும் போது,
நிஜமாக நீ வருவாய்
நான் எண்ண;
என் நிழலை போலவே,
என்னை நிர்கதியாய் விட்டு சென்றாயே..??
என் நிழலின் நிஜம் நீயா??
செவ்வாய், 7 டிசம்பர், 2010
வியாழன், 2 டிசம்பர், 2010
புதன், 1 டிசம்பர், 2010
தேவதை வாழும் உள்ளம்...
மகரந்த மழையில்
தேவியிடம் மோனத்தில்
சுகித்த தருணம் அதில்
தேன் உண்ட வண்டாய்
கிறங்கி அனுபவிக்கயிலே.,
பூமிக்கும் ஓர் தேவதை வேண்டும் என
யோசித்த கடவுள்,
டிசம்பர் தேவதையாய்,
முதல் நாளிலே
உன்னை பூமிக்கு அனுப்பி விட்டானோ..?
வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்
ஏனெனில்,
இன்று தேவதைகள்
கொண்டாடும் தினம்...
பிறந்த நாள் காணும் தோழி சோபியாவிற்கு...
தேவியிடம் மோனத்தில்
சுகித்த தருணம் அதில்
தேன் உண்ட வண்டாய்
கிறங்கி அனுபவிக்கயிலே.,
பூமிக்கும் ஓர் தேவதை வேண்டும் என
யோசித்த கடவுள்,
டிசம்பர் தேவதையாய்,
முதல் நாளிலே
உன்னை பூமிக்கு அனுப்பி விட்டானோ..?
வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்
ஏனெனில்,
இன்று தேவதைகள்
கொண்டாடும் தினம்...
பிறந்த நாள் காணும் தோழி சோபியாவிற்கு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)