வெள்ளி, 31 டிசம்பர், 2010

மாறும் காலம்..

சம்பாத்தியம்,
காலமின்மை,
வேலை பளு,
உத்தியோக அலைச்சல்,
இப்படி பல காரணங்கள் ,
சிசுக்களை கிரேச்சே - இல் விட..,

பின்போர் நாளில்,
இவை அமையும்
நாம் முதியோர் இல்லம்
சென்றடைய..
என அறியா பெற்றோர்கள்..!

பாவம்..!

உரிமையான உறவு...


வண்டோடு பூ மோதுவது
வெறி சண்டையா ??
கொண்ட உரிமையால் தானே?
நானும் அப்படிதான்..!
பனித்துளிக்கு,
சூரியனை கண்டு அச்சமா?
இல்லையடி நிச்சியமாய்.
பனித்துளி மேல்
கதிரவனுக்கு காதல்..
அதான் கண்ட உடன் 
அணைக்கிறான்.!
உன்னோடு நானும் அப்படிதான்..!

நிஜமா நிழலா.?



என் நிழலும்
என்னை பிரியும் போது,
நிஜமாக நீ வருவாய்
நான் எண்ண;
என் நிழலை போலவே,
என்னை நிர்கதியாய் விட்டு சென்றாயே..??
என் நிழலின் நிஜம் நீயா??

செவ்வாய், 7 டிசம்பர், 2010

யார் தாய் . . ?

நான் பிரசவத்தாய் - ஆனால்
கவிக்குழந்தையை நீ
எனக்குள் பிரசவித்தாய்...

வியாழன், 2 டிசம்பர், 2010

புதன், 1 டிசம்பர், 2010

தேவதை வாழும் உள்ளம்...

மகரந்த மழையில் 
தேவியிடம் மோனத்தில் 
சுகித்த தருணம் அதில் 
தேன் உண்ட வண்டாய் 
கிறங்கி அனுபவிக்கயிலே., 
பூமிக்கும் ஓர் தேவதை வேண்டும் என 
யோசித்த கடவுள், 
டிசம்பர் தேவதையாய், 
முதல் நாளிலே 
உன்னை பூமிக்கு அனுப்பி விட்டானோ..? 

வருடத்தில் 
ஒரு முறை வரும் 
இந்நாளுக்காக 
வருடம் முழுதும் 
காத்திருக்கிறேன் 
ஏனெனில், 
இன்று தேவதைகள் 
கொண்டாடும் தினம்... 


பிறந்த நாள் காணும் தோழி சோபியாவிற்கு...