வியாழன், 27 டிசம்பர், 2012

நிலவும் மலரும்

இரவை திறந்த சூரியனுக்கு,
நிலவும் மலரும்
 காதல் புரிந்த காட்சி சிக்கியதோ?
பார்த்த கணத்தில்
வெட்கி சிவந்தானோ ?
என் நிலவே,
வெண் நிலவே,
இதற்கா உன் கண்ணீரை
பூக்களிடம் விட்டு செல்கிறாய்?

இதோ என்னவள் !

செய்தி கேட்டு
தோழியின் இல்லம் சென்றேன் ,
எங்கள் சிரிப்பை திருடிக்கொண்டு,
புகைப்படத்தில் சூடி இருந்தால்,
பூ மாலைகளுக்கிடையே ஒளிந்திருந்தாள் !
ஒளியிழந்த நான்,
அவள் இல்லை இது என்றேன்!
மரண அறிக்கை,
விபத்தின் விவரங்கள்,
எரித்த சாம்பல்,
இப்படி அனைத்தும் காண்பித்தனர்!
அவள் இல்லை இது என்றேன்!
அவளால் காப்பாற்ற பட்ட
சிறார்களை காண்பித்து,
இதோ என்னவள் . . . . . . . !


பொன்வெயிலும் குளிர் மழையும்!

சூரிய காந்தி தவிரவும்,
சுட்டெரிக்கும் சூரியனுக்கு,
காதலி தேவையாம்!
யாருகென்று தெரியாமல்,
யாருக்குமே தெரியாமல் ,
பூக்கும் சில மலர்களும்,
பல சமயங்களில்,
சூரியனுக்கு
குறுஞ்செய்திகள் அனுப்ப,
குளிர்ந்த அவன்,
பொன்வெயிலும்
குளிர் மழையும்,
பூமிக்கு அனுப்புகிறானோ ? ?


காலமோ? நேரமோ ??

காதை திருகிவிட்டாற்போல் ,
கழண்டு சுழண்டு
பச்சை மரம் அதிலிருந்து
ஓர் பழுத்த இலை,
"என் மேல் என்ன பிழை?"
என்றார் போல்
பகிரங்கமாய் ,
 பூதேவியை முத்தமிட்டது !
இலையுதிர் காலமோ?
இலைகள் புணரும் நேரமோ ??

வெள்ளி, 14 டிசம்பர், 2012

புல்லாங்குழல் !

என்னை ஏன் கண்டாய் ,
காயம் செய்து காதல் உரைக்கவா?
காற்றிடம் புல்லாங்குழல் !

இல்லம் .. !

கல்லுடனும் கலவையுடனும்
சிமெண்ட்டுடன் தன் 
உழைப்பையும் சேர்த்து
சிறுக சிறுக கட்டியது தான்
இல்லம்.!
உணர்ச்சிகள் நிறைந்ததாய்,
மனிதர்கள் குழுமமாய் ,
நகையொளியுடன் நிறைவாய்,
மகிழ்ச்சியின் பிறப்பிடமாய்,
மனிதத்துவத்தின் இருப்பிடமாய்,
அது அல்லவோ இல்லம்?
வெறும் வீடல்ல அது
நிம்மதியின் கூடு
என்றும் நீ அதை நாடு !



செவ்வாய், 4 டிசம்பர், 2012

சாபம் - சல்லாபம்

சுருண் ட வயிறுடன் ,
கருத்த தோலுடன்,
நொந்த  நெஞ்சுடன் ,
பிளவு கொண்ட பூமியுடன்,
வறண்ட நிலத்துடன் ,
போராடும் தன்
விவசாய  காதலனுடன் ,
சல்லாபிக்க வந்துவிட்டான் ,
சபிக்க பட்ட சூரியன் !

காடுகள் தேடி . .

சுவடு படாத
சுனை நீர் தேடி,
வாசம் அழியாத
மலர்களை சூடி ,
காண கிடைக்காத
காட்சிகளை நாடி,
மறக்க முடியாத
மரங்களில் ஏறி,
சந்தோஷிக்க ஆசைப்படுகிறேன் !
ஆனால் ,
காடுகள் எங்கே?

நட்பே நீ ஓங்குக !

எதிர்பார்த்து சந்திக்கவில்லை,
சந்தித்ததும் சிந்திக்கவில்லை!
இருப்பினும் சந்தித்து விட்டோம் 
நட்பின் இலக்கணம் எழுத!

தலை நரைத்த பின்பும்
தலை முறை கடந்த பின்பும்
நாம் நினைத்து பார்ப்போம்
பழகிய நாட்களை!

பின்பு என்றோ ஒருநாள் சந்தித்தால்,
நன்றாகவே பழகினோம் என்று
மனம் அறிந்து பொய் உரைப்போம்,
நாம் கொண்ட சண்டைகளை
மனதில்நினைத்து கொண்டு !

இனிமையான பந்தம் என்று
அடிகடி உணருவோம்
நம் நட்பின் பெருமையை !

நட்பே நீ ஓங்குக !

பூக்களோட புராணம்

தோட்டத்துல போய்
பட்டாம்பூச்சி புடிக்கறப்போ 
எங்க ஆத்தா கூப்பிட்டு  வெக்கும் 
சோறு திண்ண !
ஒழுங்கு காமிச்சு 
ஒளிஞ்சுக்குவோம்
 வயக்காட்டுகுள்ளரா !
வீடுங்க நெரப்பி போக,
எம்புள்ளைக்கு 
பட்டாம்பூச்சின்னா 
பேந்த பேந்த முழிக்க தெரியுது!
மல்லிபூ பந்தல்னா ,
பெக்க பெக்க ன்னு பாக்க தெரியுது !
அதான், எம் பேரப்புள்ளைங்கனாச்சு 
தெரிஞ்சுகட்டுன்னு ,
பூக்காரி கூடை பூ கிட்ட கேட்டு தெரிஞ்சுகிறேன் 
பூக்களோட புராணத்த! 


தொலைந்த நிலவு

என்னை நித்திரையில் ஆழ்த்திவிட்டு
எங்கு சென்றாளோ அவள்
முகிலவன் சித்திய
 மழை சாரலில் கரைந்து விட்டாளோ ?
கதிரவன் பரப்பிய
தீச்சுடரில் உருகிவிட்டாளோ ?
எந்தன் பனி நிலவே,
உன்னை தேடும் விழிகளுக்கு
 பதில் இல்லையடி 
என் சிதறிய சிந்தையிலே !

சின்ன சின்ன ஆசைகள்

அழகிய அதிகாலையில்,
பசுன்தளிர் வெளியில்
பரந்த பாரினில்
கை கோர்த்து
குளிர் காற்றை சுவாசிப்பது,
பஞ்சணையில் தோள் புதைந்து
என் மனதை தொலைப்பது,
மஞ்சள்மாலை பொழுதில்
மானாய் துள்ளி எழுந்து
 தின் பண்டம் தேடுவது ,
தோழமைகளின் பதிலை எதிர்பாத்து
பேசாமல் (கை ) பேசியை பார்ப்பது ,
இதமான இரவில்,
நிலவொளியில் நணைவது ,
இதெல்லாம் சாத்தியமாவது எப்போது?

என்செய்வேன் நான் ?

சிறை பிடித்தாயே
சிந்தனை மொத்தமுமாய் .
விடுவிக்க விரும்பினாலும்
விலக்க  விருப்பம் இல்லை எனக்கு!
உறங்கிய பின்னும்
உறங்கா நினைவுகள் 
காணும் கனவுகள்
திரையிடுவதும் நீ,
திரையிலும் நீ !

சேற்றில் நிலா நிழல் !

எங்கோ கேட்டேன்,
நினைவாலே அணைக்கிறேனே "
அதனால் தானோ
விண்ணுயிராய் இருந்து
மண்ணுயிராய் விழுந்து
வெள்ளமாய் தேங்கியது
மழைத்துளி?
பொன் நிலவின் தேகம் அணைக்க?