ரகசியமாய் அடை காத்த கனவுகளோடு,
எவரும் அறியா பூபெய்திய காதலோடு,
வெட்க படாமல் வெளியேறும் கண்ணீரோடு
மறைத்து வைத்த மாசற்ற நேசத்தோடு,
ஓர் நாள் உன்னை சந்திப்பேன்..
அப்பொழுதும்,
என்னை யாரென சிந்திப்பாயா;
அல்ல,
என் முட்டாள்தனத்தை நிந்திப்பாயா?
எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..