பனித்துளி கரைந்தால் மழையா ?
மழை முடிந்தால் பனித்துளியா?
இதுவே திருமதி நித்யஸ்ரீக்கும்
இசைக்கும் இடையிலான பந்தம் !
இசை அரசியே,
உன் சோகத்தால்
இசையெனும் மொழிமறந்து,
மௌனிப்பாய் என அஞ்சியநெஞ்சங்களில் ,
உன் குரல் கொண்டு தேன் வார்த்திட்டாய் !
கழுத்து நிமிர்ந்த தமிழின குயிலே,
கானத்தால் உலா வரும் குரலே,
உன் இனம் என்றும் போற்றிடும் உன்னை. !
உன் குரல் தேடி
உள்ளது இசை தமிழ் வாடி !
வரவேற்போம் அன்று போல்
என்றும் உனை !
நல்வரவு !