திங்கள், 30 மே, 2011

கற் கடவுளுக்கு ....


கடந்து வந்த காலங்களின்று 
கனவாய் மட்டுமே நீ!
கண் அறியா
சுவாசமாய் கலந்த என் நேசமே,
இன்றோ, 
நீ என் கவிதையல் மட்டுமே உயிராய்....
உருவத்தை போல், 
அவனுக்கு உள்ளமும் கல்லோ?
அப்படியேனும் இருந்திருந்தால்,
எங்கள் கண்ணீர் 
அந்த கற்கடவுளை கரைத்திருக்குமே?
இனி எங்கு கண்டறிவேன் நான்  
நட்பின் இலக்கணமாய்,
உன் போல் ஒரு காவியத்தை.....

தோழியின் சரிதா கேடியா வின் மறைவிற்கு.,

சனி, 28 மே, 2011

எதிர்பார்ப்பாய்....

உன் மீதான காதலின் 
ரிஷிமுலம் தேடி, 
நான் களைத்துவிட்டேன்
காதலுக்கு காரணங்களுண்டு.
எதிர்பார்பில்லா அன்பை
அது வெளிப்படும் தருணம்,
காரணங்களை கண்டறிய முடிவதிலையே, 
ஏன் ..?
இருந்தும் நான் எதிர்பார்கிறேன்
உன் கண்ணீர்
என் விழிதனில் வழியவும்,
என் புன்னகை,
உன் இதழ்களில் கசியவும்...!

பிரியம்



கம்பன் வீட்டு 
கட்டு தறியும்  கவிபாடும்.
என்னை விட்டு செல்லும்
என் உயிரின் துளிகள்
பிரியத்தை பேசுமா...?
பிரிந்த பிரியத்துடன்,
பிரியத்துக்கு ஏங்குபவள்....