செவ்வாய், 23 ஜூன், 2015

நினைவுகளில் நின்ற ஞாபகங்கள் . . !

குழந்தை பருவத்தினில் 
தாய் சேய் போல்,
நமக்காக நாம்,
நாம் இருவரும் !

சிறிது வளர்ந்த பின்,
நீ பெரியவனா, 
நான் பெரியவளா 
என்று  செல்ல சண்டைகள்! 

சின்ன சீண்டல்களும் 
செல்ல சிணுங்கல்களும்,
கண்ணீர் மல்க 
சிதறவிடும் சிரிப்பலைகளும்,
உரமாய் நம் உறவிற்கு !

கால சக்கிரம் 
வேகமாய் சுழல்கையில்,
அவர்தம் வாழ்கை பாதையில் 
தொடங்குகிறோம் பயணத்தை!

ஆனால்,
எனக்கும் நம்பிக்கையுண்டு,
ஒரு நாள்,
உலகம் இருண்டாலும்,
கனவுகள் கலைந்தாலும்,
உறவுகள் சிதறினாலும்,
தனிமை எனக்கென்று எண்ணுகையில்.
காதினில் தீண்டும் உன் கேலிகள்,
பின் திரும்பி காண்கையில்,
கரம் விரித்து காத்திருப்பாய் 
எனை கையில் ஏந்த ! ! !

To my Beloved Brother Dr.Raj Kailash Mohan ! <3 p="">

திங்கள், 8 ஜூன், 2015

பௌர்ணமி கவிதைகள் #14

இருள் பூக்கும் இரவினிலில்
கதிரவனின் முத்தத்துடன்
கருநீல வானில் உலவிடும்
என் கவிதை கண்ணே,
தனித்தாலும் தவித்தாலும்
வெண் பதுமையாய்
மௌன இசையோதும்
முழுமதியே,
நீ பௌர்ணமி . . !