திங்கள், 17 ஜனவரி, 2011

உணர்வுகள் உனதாய்...

கண்களில் நீர் தங்குவதில்லை
ஆனாலும் அழுகின்றன அவை.
உயிர் ஒன்று கலங்கி கரைகிறது,
உருகிய நெஞ்சத்துக்கு
பதில் சொல்ல ஆளில்லை...

உணர்வுகள் தேக்கி
உள்ளத்தால் வெந்து
நலிந்து கிடக்கும் ஓர் ஜீவனுக்கு ,
வழிதடம் ஏதும் இல்லையோ??