திங்கள், 26 டிசம்பர், 2011

என் சுவாசமாய்..


மார்கழி பனிமலராய்,
மணம் வீசி,

கோயில்களில் புறா சிறகடிப்பாய்,
காற்று காதலனின்
தொடுகைக்கு தலை அசைக்கும் நெற்பயிராய்,

இவள்,
நிழல் தேவதையல்ல...
எந்தன் நிஜ தேவதை..

என் நிழலின் நிஜமாய்,
ஜீவனின் சுவாசமாய்...!




கிராமத்து குயில் கூவுது.

காத்ததிச்சா
பறக்குற சருகாட்டம்,
உன் நெப்புல கரையுது என் பாதி உசுரு.
உசுரோட சேந்து
நானும் கரையுறேன் உனக்காக.
மாமா உனக்காக.
பேசி பேசி மறுகறேன்
நீ வரபோற பாதைய
பாத்து பாத்து ஏங்குறேன்.
உங்கூட இருந்த நிமிஷம்
நெனச்சு நெனச்சு கெறங்குறேன்.
என் உசுர நீ வாங்காம 
உடனே வந்துடு என்னாண்ட . . .



வெட்கம்

செம்பூக்கள் பூக்கச்செய்யும்  உரமோ
 உன் வார்த்தைகள்?
செவிதனில் விழுந்ததும்
 பூகின்றனவே செம்மையாய்
 என் கண்ணா கதுப்புகளில் !

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

வருவாயோ..?

நிலவு இல்லா இரவாய்,
பனி இல்லா மென் பகலாய்,
தென் இல்லா மலராய்,
உன் ஸ்பரிசம் இல்லா சடலம்,
உலாத்தி கொண்டே தான் இருக்கிறது.
நீ மீண்டும் வருவாயென.
என் உலகம் ஒய்ந்து.
நினைவுகள் அழிந்து,
நான் செல்லும் முன் ஆவது  ...!

ஹைக்கூ.

நெற்றியில் நீமுத்தமிட்டு முடித்த காமத்தை,
கன்னத்தில் இதழ் பதித்து
மீண்டும் தொடங்குவேன் நான். . .!

பரி"மானம்"

 செல்லரிக்கும் எஸ் எம் எஸ்,
நவ நாகரிகம் என
கலாசார சீர் அழிவுகள்,
தரம் கெட்டு,
தெரு கூத்தாடியாய்,
கோமாளி தனம் தேயும் காமாளிகள்,
ட்டிங், கிஸ்ஸிங் என,
பண்பழிந்த  பதர்களாய் ,
இன்றைய இளம் வட்டங்களில் பல.
காதலின் போர்வையுள்,
பல வாழ்வு வீணாக,
சிலர் அதை பொழுதுபோக்காக,
மறித்து விட்டது
அன்பின் நிஜ பரிமானம்.
எங்கு செல்கிறோம் நாம்?,



  

மென்காற்று


தென்றல் மென்மையா?
அட பாவி,
நீ உரசி செல்ல,
நொறுங்கியது நான் தானே..

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

காதல் பரிசு ....


காதல் என்றான் ,
கவிதை தந்தேன்.
பொருளை கொன்று வார்த்தையாய் தந்தான்.
காதலை தந்தேன்,
அவன் நெஞ்சின் கடைசி துளி ஈரம் வரை
வழித்து என்  கண்ணில் தந்தான்.

கண்ணீர் விட்டேன்,
அவன் தாகம் தீர்த்தான்.
முழுதாய் என்னையே தந்தேன்,
உயிரை பிடுங்கி சடலமாய் வைத்து விட்டான்...





திங்கள், 5 செப்டம்பர், 2011

என் ஆசானுக்கோர் மடல்....!



நிறைவாகும் வரை
எமது குறைகளை கரைத்து,
சிறகுகளை விரிக்கசெய்து,
உரக்க சிந்தனை கொண்டு,
எமது துயர் ஏற்று,
எங்களுக்குள் விவேகம் விதைத்து,
" வெற்றிகள் எளிதாகும் - உன்
வாழ்வும் இனிதாகும்"
என என்றும் ஊக்குவித்து,
எம்மை சிகரத்திற்கு நடத்தி செல்லும்
எனது ஆசானே!
விண்ணையும் வளைத்து உமக்கு
மாலை இட ஆசை தான் எனக்கு !
நீர் கற்பித்த எழுத்துகளால்
மடலிடுகிறேன்..
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...!

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

காதலுடன்...

ரகசியமாய்  அடை காத்த  கனவுகளோடு,
எவரும் அறியா பூபெய்திய காதலோடு,
வெட்க படாமல் வெளியேறும் கண்ணீரோடு
மறைத்து வைத்த மாசற்ற நேசத்தோடு,
ஓர் நாள் உன்னை சந்திப்பேன்..
அப்பொழுதும்,
என்னை யாரென சிந்திப்பாயா;
அல்ல,
என் முட்டாள்தனத்தை நிந்திப்பாயா?


புதைந்த உணர்வுகள்...!

தொலைந்த காகிதம்
 மீண்டும் கிடைத்தாற்போல்
 ஓர் இன்பம்.!
நண்பனுடன்
 செலவழித்த நாட்கள் 
மீண்டும் மனகண்ணில்.!
அனால் 
அவன் இன்றி அவ்விடங்களோ
 வெறும் கல்லும் மண்ணுமாய்....!

உணர்ந்து கொள்ளேன்...


பிரிந்து போக சொல்லாதே 
என் நிழல் கூட
 உன் உருவில் தான் 
எனக்கு தெரிகிறது!
என் கனவாவது 
உன்னை சுற்றி வரட்டுமே...

நீ இறக்கவில்லை நண்பா....

உன் தோல் வளைவில் 
மறைந்து நின்று 
என்னை பெண் பார்க்க வருபவர்களை
பார்க்க ஆசை பட்டேன்.
அனால்,
திரும்பாத ஊருக்கு
 நீ சென்று, 
யாரும் அறியாது
 என் பின்னே நின்று
 வந்தவர்களை பிடித்திருக்கு
சொல்லேண்டி என்கிறாய்
 என் மனதிற்கு மட்டும் கேட்கும் 
குரல் ஓசையில்...

நட்பு

என்னுடன் சேர்ந்து 
நீயும் சுத்துறியாம்...
அம்மா சொல்றாங்க.
அடங்கொய்யாலே,,,!
நா சுத்துறதுக்கும் 
அச்சாணி நீ தானடா தோழா....

ஆணினமோ...?

என் கவலை தின்ன மனமோ,
அஜீரணத்தால் அவதி படுகிறது.
திங்க வைத்த இனமோ,
ஆடவர்கள் என்று மார் தட்டுகிறது....

கண்ணீரால் கழுவட்டுமோ ?

புன்னகை மட்டுமே 
சிந்த தெரிந்த என் மனம்,
முதல் முறையாய் 
கண்ணீரையும் சிந்துயது. 
பொன் நகையான,
பொன் தாலியை 
அவர் இன்னொருவள் கழுத்தில் 
அணிவித்த பொழுது....

தாய்மை


என் அவரின் 
தோலில் சாய்ந்து
 கை கோர்த்து 
நடக்கும் பொது தான் 
நானும் உனர்ந்தேன் 
தாய்மை என்பது 
பெண்களுகூரிய குணம் மட்டுமல்ல!
உண்மை நேசம் கொண்ட 
ஆண்களுக்கும் உண்டு என....

செவ்வாய், 19 ஜூலை, 2011

என்னை விட்டு நீங்கா உறவு..!

நீயும் நானும் 
சேர்ந்து நடந்த பாதையில்
 சிந்தியிருந்த நம் புன்னகையை 
சேகரித்து உதட்டில் வைத்தேன்...
 மீண்டும் விதைத்தாய் ;
ஓர் புன்னகையை,
 என் உள்ளத்தில்..

வானவில்லாய்...


நீ தந்த
 நேசம் மட்டும்
 என்னை வழிநடத்துகிறது.
நீயோ வானில் 
ஓர் மூலையில் இருந்து
 என்னை காண்கிறாயே??

மனிதம்....

ஒருவன் என்னை 
கேலி செய்தான்! 
உன்னிடம் நான் வந்து கதறினேன்..
ஓடோடி சென்று 
மன்னிப்பு கேட்டாய்
 சற்று முன்,
நீ கேலி செய்த பெண்ணிடம்.
டேய் அண்ணா,!
 நீ மனிதன் ஆகிவிட்டாய்...

செவ்வாய், 5 ஜூலை, 2011

கவிஞருக்கெல்லாம் ஓர் கேள்வி.?

காலம் காலமாய்,
கவிதைகளுக்கு மட்டுமே
கருவாகிறாள்
முதிர் கன்னி அவள்.!
காலங்கள் கரைந்தோடினாலும்,
கனியும் வரை காத்திருந்தும்,
மணமேடைதனை
மனமேடையிடவும்,
யோசிக்கின்றன,
பல முதிர்காளைகள் 
உழுக ஓர் நிலம் தேடி.!
இவர் விழி சிந்தும் செந்நீரை 
வழியன்றி செய்ய
வருபவர் எவரோ??


  


கேட்குமா வேண்டியவர்களுக்கு?

தனிமையில் கதறிடும் நேரம்
கண்கள் கரைத்திடும் பாரம்.
உறவுக்கென ஏங்கி 
கசிந்தாலும்,
உள்ளம் உறைப்பதில்லை 
உண்மையை!
சுகமென நினைவுகள் 
மனதில் கமழ,
கனவுகள் தான் வைக்கின்றன 
என்னை அழ.!
ஆதலால்
உறக்கத்திலும் சந்திக்க வழி இல்லை!
உருக்கமாய் சிந்திக்கிறேன்,
உண்மையை நிந்திக்கிறேன்.
உங்களுடன் இருக்க வேண்டிக்கிறேன்..!


வியாழன், 23 ஜூன், 2011

விசித்திரமானதாய்...


ஒரு வேலை... நான்..

உன் காதலை புறக்கணித்து விட்டு

உன்னையே எனக்கு ஒரு வரன் பார்த்து

முடிவு செய்ய சொல்லி இருந்தால் ...

என்ன செய்திருப்பாய்..?

எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை...?

இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !

காதலுக்காக மட்டுமே

கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை

காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய் ...

சரி விடு .. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?

இதுவும் நம் காதலுக்கு (.. மன்னிக்கவும்..)...

இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !

வரங்கள்...


என்  சகாவே,
என்னை ஒதுக்குவோர் மத்தியில்,
தெரியாமல் செய்த செயல் என என் தவறுகளால் 
நீ மட்டும் என் நண்பனாய்...
நான் வாங்கி வந்த வரம் நீ தானோ? 

நனைத்தது நீ தான் ...!


கொட்டும் மழையிலும்,
இன்றொரு நாள், 
நீ என்னை கடைதெருவில் காண்கையில்,
அதே உரிமையுடன்,
"நீங்கள் செல்லுங்கள்!
நான் பத்திரமாய் வீடு வருவேன் "
என்றாயே உன் கணவனிடம்,
என் தோளில் சாய்ந்தபடியே..!
என் சகியே, 
மழை என்னை நனைக்கவில்லை.............

திங்கள், 30 மே, 2011

கற் கடவுளுக்கு ....


கடந்து வந்த காலங்களின்று 
கனவாய் மட்டுமே நீ!
கண் அறியா
சுவாசமாய் கலந்த என் நேசமே,
இன்றோ, 
நீ என் கவிதையல் மட்டுமே உயிராய்....
உருவத்தை போல், 
அவனுக்கு உள்ளமும் கல்லோ?
அப்படியேனும் இருந்திருந்தால்,
எங்கள் கண்ணீர் 
அந்த கற்கடவுளை கரைத்திருக்குமே?
இனி எங்கு கண்டறிவேன் நான்  
நட்பின் இலக்கணமாய்,
உன் போல் ஒரு காவியத்தை.....

தோழியின் சரிதா கேடியா வின் மறைவிற்கு.,

சனி, 28 மே, 2011

எதிர்பார்ப்பாய்....

உன் மீதான காதலின் 
ரிஷிமுலம் தேடி, 
நான் களைத்துவிட்டேன்
காதலுக்கு காரணங்களுண்டு.
எதிர்பார்பில்லா அன்பை
அது வெளிப்படும் தருணம்,
காரணங்களை கண்டறிய முடிவதிலையே, 
ஏன் ..?
இருந்தும் நான் எதிர்பார்கிறேன்
உன் கண்ணீர்
என் விழிதனில் வழியவும்,
என் புன்னகை,
உன் இதழ்களில் கசியவும்...!

பிரியம்



கம்பன் வீட்டு 
கட்டு தறியும்  கவிபாடும்.
என்னை விட்டு செல்லும்
என் உயிரின் துளிகள்
பிரியத்தை பேசுமா...?
பிரிந்த பிரியத்துடன்,
பிரியத்துக்கு ஏங்குபவள்....

சனி, 19 மார்ச், 2011

பேசுகிறேன், பேசுகிறேன், உன் ஜீவன் பேசுகிறேன்..!

மனிதன் படைக்க தொடங்கிவிட்டான்
இறைவன் அதை நிறுத்தி விட்டான்.
முடிவு அவன் கையில்..!
~~ அழிந்து வரும் பூமி.


என் பொறுமையை கலைத்த 
அவனுக்கு ஏது மன்னிப்பு?
வெடிப்பேன் நானும்..!
~~ பூகம்பம்.

நானும் சேர்கிறேன் உன்னோடு,
சீரும் ஆழ்கடல்,
இனி ஆவதற்கில்லை..!
~~ சுனாமி.


விதைத்தது யாரோ?
நான் இங்கு பூத்துள்ளேன்,
சிதறடிக்க.!
~~ எரிமலை.


மனிதா! 
என்னை சீரழிக்காதே.
சிதைவது நீ தான்!
~~ இயற்கை.




நிதானம்


என்னவனுக்கு பொறுமை உண்டு.
அதனால் தான்,
என் கல்லறைக்கு வந்து 
தன காதலை உரைத்தானோ?

சொல்ல மறந்த நிஜம் ...


இன்றுவரை,
அவனை நேசிக்கிறேன் என 
யாருக்கும் தெரியாது!


கரம் பற்றிய பின்னரே 
காதல் கூற நினைத்தேன்!
அதனால் தான் சொல்லவில்லை,
உன்னை நான்,
நேசிக்கிறேன் என்று.!
அறியபடா ஆயிரம் வேதனைகளில்
இதுவும் ஒன்றாய்..!

நிஜத்தின் நிதர்சனங்கள்...


இல்லத்தை பிரிந்த தருணங்களில்
பலதை கற்றுக்கொண்டேன்.
உறுமலையும் மொழிபெயர்ப்பது
முதற்கொண்டு.!
இப்போதெல்லாம்
எப்பொழுதாவது வருகிறது
என்மன கிறுக்கல்கள் காகிதங்களில்.!



பல நிஜங்கள்
என்னை நீங்கிசென்றாலும்,
நிஜம் எதென்று நான் உணர்ந்தேன்.
கண்ட உள்ளம் எல்லாம் 
உண்மையுள்ளம் என,
மதி கேட்டு திரிந்த என்னை,
வெளி உலகம் மாற்றியதோ ?


உனக்கு நான்..!


மழைகால நீர் தேக்கமாய் உனக்கு நான்...
நீ கல்லை எறிந்தாலும் சரி ,
நீ சொல்லை எறிந்தாலும் சரி,
அல்ல,
என்னையே எறிந்தாலும் சரி..!





நான்
நீர் குமிழ்கள் போல்,
உன்னை மட்டுமே வட்டமிடுவேன்..!

புதன், 2 மார்ச், 2011

பிரிவும் பிளவும் நமக்குள்ளுமா ?


தொடர்புக்கு ஓர் முற்று புள்ளி 
வைத்தாய் வார்த்தைகளால் !
கடல் அலைகள் அடங்கலாம்,
நம் மன அலைகள் தீருமோ?
கண்கள் பரிமாறிய காதலும்,
உதடுகள் பரிமாறிய நேசமும்,
விரல்கள் பரிமாறிய அன்பும்,
நாசிகள் நெருடும் நம் சுவாசமும்,
எப்படி மறப்பேன் நான்.?
தூரங்கள் நம்மை பிரித்தாளும்,
நீ என்னை விலகி நின்றாலும்,
துயரங்கள் மனதை வதைத்தாலும்,
என் உலகம்,
உன்னை சுற்றியே சுழல்கிறது. 
நேசம் என்ற வார்த்தை 
என் சுவாசம் தீண்டும்போதேல்லாம்,
நீ தான் என் மனகண்ணில்!
காண்பவர்கள்,
காதல் தோல்வியா என்கிறார்கள்.!
ஏன்,
என் தோழமையை நான் நேசிக்க கூடாதா?




பிரிந்த உள்ளம், மறைந்த நேசம்


காதல் பேசி
காவியம் சொன்ன கண்கள்,
இன்று மூடியதேனோ?
உள்ளம் வரை இல்லாது
உதடு வரை தங்கிய உறவு நானோ?

வடிவம் இல்லா உருவமாய்,
உருவம் இல்லா உணர்வாய்,
உணர்வுகள் புரியா உறவாய்,
வார்த்தைகள் இல்லா பாஷையாய்,
பாஷை இல்லா உறையாடலாய்,

ஏன் இந்த கொடுமை?
வந்து கேள் என் தலை அணையை,
கூறும் என் கண்ணீர் கதையை.!

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

என் அன்பு சகோதரனுக்கு....

யுகங்கள் பல கழிந்தாலும்
குறையாது உன் மீதான என் நேசம்;
என் உயிர் அடங்கிய பின்பும் 
உன் உள்ளத்தில் உணர்வாய் என்னை.!
                               

அண்ணன் என்ற ஆணின் அருமையை
உணர்தேன் உன் அருகாமையில்..
வருடங்கள் உதிர்ந்தாலும்,
வாழ்கையில் உயர்ந்தாலும்,
என்றும் உன்னை நான் மறவேன்,..!

அன்பாய் ஓர் பார்வை,
ஆசையாய் ஓர் வார்த்தை,
இம்சையாய் சில செயல்,
இப்படி உண்டு பல,
என்னிடம் உனக்காக..!

எனக்கே எனக்காய்,
இதோ ஓர் கவிதை.;
என் ஆன்மாவையும் 
தீண்டிய ஓர் ஆடவனுக்காக..
எனக்கும் உள்ளான் 
ஓர் அண்ணன் என 
மார் தட்டுவேன் இனி.!

சரியா தவறா
தெரியவில்லை,
ஆனாலும்


சம்மதிக்கிறது மனம்,

புண்ணியம் செய்தேனோ
 இப்புவிதனில் பிறக்க!
தவம் தான் செய்திருப்பேன்,
உன்னை அண்ணனாய் பெற.

உன்  வார்த்தை பல கேட்க ,
நான் காத்திருந்து நிற்கையில்
திருவள்ளுவரும் இல்லை இன்று
என் பொறுமையின் குரல் கூற !


எம்மதமும் சம்மதம்"
இம்மொழி, உன்போன்ற,
உடன்பிறவா, 
உன்னத உறவுகளுக்கும் தான்..
என்றும் உடன் இருப்பாயா,
எனதாய்??

திங்கள், 21 பிப்ரவரி, 2011

என்ன செய்வேன் நான்...


எப்படியேனும் 
உன் நினைவுகளை 
அழித்தெறிய தான் வேண்டும்... 
அனால், 
ஒன்றின் பின் ஒன்றாய், 
ஓராயிரம் எண்ணங்கள், 
உனக்காகவே,
 உன்னை பற்றியே....

சனி, 19 பிப்ரவரி, 2011

தொலைத்த நிமிடங்கள்..

கால் தடம் இல்லா
கடல் தீவுகளில் கலைத்து தேடுகிறேன் ,
வாழ்வு முழுதுமாய் 
என்னுடன் இருக்கும்
என நினைத்த பொற்குவியல்.
பூமியில் புதையலாய் புதைந்ததோ 
என பிளந்தும் பார்த்தேன்,
பிரபஞ்சம் அலைந்தும் பார்த்தேன்...
கடவுளின் காலை 
பற்றி கேட்டேன்,
கதறி கேட்டேன்..
கடைசியில்.,
பேழையில் பார்த்தேன்...
களவு போன என் புன்சிரிப்பை,
காணாது போன என் நிம்மதியை,
மனித இனம் 
மறந்து போனதென்னவோ உண்மைதான்!
அமைதியும்,
புன்னகையும்,
பொறுமையும்,
பேரானந்தமும்,!
என்று திரும்பும் மனிதம் நம்முள்..??



உழுகிறேன் , விழுகிறேன்...

கற்பனை குதிரை ஏறி,
கனவுகளி அழைத்துக்கொண்டு,
காற்றோடு விரைந்து சென்றேன்
கடிவாளம் இல்லாமல்...
சென்ற இடமெல்லாம் 
வறண்டு இருக்க,
எங்கு நோக்கினும்
கதவுகள் மூடி கிடக்க,
அங்கோ,
என் பூமி வற்றி கிடக்க,

தானியம் இன்றி
என் சிசு பட்டினி கிடக்க,
என் செய்வேன் நான்..?
விவசாய பூமியில்,
உழவனுக்கு சோறில்லை..!

என் சகியே...

மௌனத்தால் வதைத்தாய்
முன்பு என்னை.!
வார்த்தைகளால் சிதைக்கிறாய்
உன் மீதான என் மாற்று அபிப்ராயத்தை.!
வார்த்தைகளும் விசிதிதிரமானதேனோ.?
செவிதனில் உன் குரல் தீண்ட,
நாசியில் உன் வாசம் நெருட,
மனதோடு  நீ என்றும் 
குடிகொண்டு உள்ளாய்  என் சகியே..!


புதன், 16 பிப்ரவரி, 2011

கொடுமை காதல்


என்னை கொள்ளை அடித்தவன் அவன்.!
தனிமை சிறை எனக்கா.??
காதலில் கொடுமை...

சனி, 5 பிப்ரவரி, 2011

காலமான காலம் .


உன்னை பற்றிய எண்ணங்கள்
ஏதும் இல்லை.!
கேட்டதை தருவாயா;
சில சொற்கள் உதிர்பாயா;
இல்லை எதிர்பார்ப்புகள்,
உன்னிடமிருந்து.!
கனவுலகில் கூட
வேண்டாம் உன் பாராமுகம்!
தூக்கம் இல்லையடா எனக்கு!

உனக்காக,
உணர்வெழுப்பி,
உடைந்துருகி,
உயிர் கசிந்து
நான் எழுதும் காலம்,
காலமாகி,
காலம் பல கரைந்தோடி விட்டது.!


வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

என் உயிருக்குள் நீ!





பல சமயங்களில்

என் மனதில் அடிவாரத்தில்
ஓங்கி அடிக்கும்
உன் நினைவலைகளின்
சில சாரல்களாய்..,
ஓரீரு வரிகள்.!

உன் மழையின்
சாரலில் சிலிர்த்து எழ,
உயிரும் உடையும் சப்தம் 
பலமாய் என்னுள்...!

என் உயிர் தூறல்
சிறிதேனும்
ஈரப்டுத்டுமா
உன் இதயத்தை....
அல்லையேல்
குடை விரித்து பிடி..!
கரை படபோகிறது,
உன் கல்நெஞ்சம்..!

துலைந்த இடம்  ஒன்றாய்,
தேடும் இடம் மற்றொன்றாய்,
மதிகெட்டு தான் திரிகிறேன்,
தீரா அன்பினால்.!


உன்னால் உடைந்த திசுக்கள்
ஒட்ட  தான் இல்லை என்னுள்;
அதில் ஒன்றாய்,
என் சிறு இதயம்!
வெறும் செநீரை மட்டுமே சுமக்காமல்,
உன்னையும் கருவாக்கி தாங்கிட,
ஆசை பட்ட பாவத்திற்கு,
உடைந்தே கிடக்கிறது,
ஆறா ரணமாய்!!
அதனால் தான்
துடி துடித்தே,
ஏங்குகிறதோ??

காயங்களால் மட்டுமே தீண்டி,
நரம்புகளையும் தூண்டி,
சுடும் தீயிற்கு இரையாக்கி விட்டாயோ,
கடைசியில் என்னை??

நெஞ்சம் சரிகிறது,
கண்ணீரும் எரிகிறது!
உரிமை போர் கோடி
தூக்கிட தயார் இல்லை நான்.!
அறிந்தேன் உன் மீதான
என் உரிமையை.!
வார்த்தைகளில் ஒருவாராய்,
செய்கையில் மற்றோருவாராய்,
உணர்த்தியே விட்டாய;
வழியை விலையை எடுத்து.!

பாராமுகமான உன் மொழியை விட
இழந்த வலி பெரிதல்ல!
ஆசைகள் எதிர்பார்புகளாக,
எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாக,
ஏக்கங்கள் ஏம்மாற்றதை தழுவ,
ஏம்மாற்றங்கள் உன் எதிர்ப்பை பறை சாற்ற,
எதுவுமே நிலையானதில்லையோ.,
உன்னை போலவே??

விழி உடைத்து
வழி கண்டு
உணர்வுகளை தாக்கி,
இன்று,
என் உயிருக்குள் நீ!

மௌனங்களில்
உன்னை எழுதி
வார்த்தைகளில்
உன்னை வரைய..,
உன்னுள் நான் கலந்தேன்.!
இல்லை இல்லை,
என்னுள் நீ தான்,
இன்றும், என்றும்!
உருகி
மருகி
மருவ நேசம் கொள்ள - என்
உயிர் உறங்கிய பின்பாவது
உணர்வாயா,
பெயர் இல்லா 
என் பந்தத்தை.....????
அதன் நேசத்தை...???









ஹைக்கூ

மரணத்திற்கு பின்பாவது கமழவேண்டும்
காற்றின் மென்மையோடு..
ஊதுபத்தியை போல்...

ஹைக்கூ

அனைத்தும் இழந்து
கிழிந்த பக்கங்களாய்,
வேசியின் வாழ்வு.!

புதன், 2 பிப்ரவரி, 2011

காதல் காதல் தான்..!

உன்னால் நான் நீர் சிந்தினாலும்,
அதை கண்டு நீ சுகிதாலும்,
கனவாய் நிஜங்கள் தொலைந்தாலும்,
நிஜங்களின் நினைவுலகில் வாழ்ந்தாலும்,
நினைத்து நினைத்து மரித்தாலும்,
வெறுப்புகள் அனைத்தும் சகிதாலும்,

காதல் காதல் தான்!
அன்றும்
இன்றும்
என்றும்
காதல் காதல் தான்..!

தோற்றும் வென்ற நேசமோ?

அவனும் நேசித்தானோ என்னை?
அறியாது விழித்தேன்.!
நீர்த்திரை இட்ட கண்களோடு
என் மண அழைப்பிதழை
அவன் பெற்ற போது..........
மரித்த என் காதலே
நீ தோற்தாயா??
இல்லை வென்றாயா?

திங்கள், 17 ஜனவரி, 2011

உணர்வுகள் உனதாய்...

கண்களில் நீர் தங்குவதில்லை
ஆனாலும் அழுகின்றன அவை.
உயிர் ஒன்று கலங்கி கரைகிறது,
உருகிய நெஞ்சத்துக்கு
பதில் சொல்ல ஆளில்லை...

உணர்வுகள் தேக்கி
உள்ளத்தால் வெந்து
நலிந்து கிடக்கும் ஓர் ஜீவனுக்கு ,
வழிதடம் ஏதும் இல்லையோ??