சனி, 16 நவம்பர், 2013

எங்கள் பாரதத்தின் இரத்தினமே . . .

மட்டைபந்தாட்டதின் அட்டைபக்கம்
இன்றுடன் ஓய்வு பெற்று
அகற்றபடுகிறது . . . !

விறகுகட்டையையும் பந்தாடும் மட்டையாக்கும் 
அந்த துடிப்பிமிக்க கரங்கள்,
இன்று பிரியாவிடையில் கை அசைத்தது !

பதவிமமதையில்பாதை மாறும்
பாவிகள் மத்தியில் ,
புகழின் உச்சியிலும் சுத்தமாய் நின்றாய் . . .!

தந்தையின் கல்லறையில்
நீ சிந்திய கண்ணீர் காயும் முன்னே,
உன்மட்டையில் பட்ட பந்துகள் பாய்ந்தது முன்னே !

விருதுகள் உனக்கென படைக்கப்பட்டதா,
நீ மட்டை பந்திற்கென படைக்கப்பட்டாயா ,
இரண்டையும் பெருமைபடுத்திய இந்திய குடிமகனை,

கண்ணில் கண்டதையும்,
கற்பனை கொண்டதையும்,
விடைதேடி விழிதேழுகையிலே ,

விடைபெற்றேன் நான் என்று,
இரத்தின சுருக்கமாய் செய்தி தந்தாய்
இந்தியருக்கு மட்டுமின்றி உலகிற்கோர் அதிர்ச்சியாய் !

உந்தன் பெயரிலும் பிரமிப்பு ,
நீ இருக்கும் இடமெல்லாம் பூரிப்பு,
நீ காணும் களமெல்லாம் ஆர்பரிப்பு !

விளையாட்டில் வேர்த்த உன் உடல் காண்கையில்
உள்ளம் பதறினாலும் கர்வம் கொள்ளும்,
இவன் இந்தியத்தாயின் தவப்புதல்வன் என்று . . . !

இன்றோ, விளையாட்டின் இறுதியில்,
உன் கண்கள் வேர்கையிலே, எந்தன்
சப்தநாடிகளும் அதிர்ந்து ஒடுங்கியது !

கடவுளிற்கும் ஒய்வுண்டோ,
இனி, ஒளி தரும் பரபிரம்மமாய்,
மட்டைபந்தாட்ட மதத்தவர்களுக்கு நீ!

உன் காலத்தில் வழ்ந்தவள்
என்ற கர்வத்தை எம
தர்மனிடமும் நான் காட்டுவேன் . . !

நீ காட்டியது மாற்றம் அல்ல,
மறுமலர்ச்சி - மட்டைபந்தாட்டதின்
ஓர் மலர்ந்த சகாப்தம் !

உன் பிறந்தநாளை கொண்டாடிய எங்களுக்கு
அன்று உறைக்கவில்லையே
உனக்கு வயதாகிவிட்டதென?

மனமின்றி விடைக்கொடுக்கிறோம்,
நன்றி என்றொரு வார்த்தை கூறி,


எங்கள் பாரதத்தின் இரத்தினமே,
நன்றி என்றொரு வார்த்தை கூறி,
உன் சாதனைகளை குறைத்து அளவிடமுடியாமல் . . . !

கண்ணீரோடு,
உந்தன் எழிலின்
ஓர் நிழல் . . . !

#MissUSACHIN
 — with Srinivas Singer and 5 others.

வியாழன், 14 நவம்பர், 2013

எழுத்தரசிக்கென ஓர் எழுத்து !

எழுத்தரசியே ,
உம்மை கடவுள் எழுதிய நாள் இன்று 
நீ வளர்ந்தாய் தடைகளை வென்று!

சிரிக்க மறந்த மனதை,
சிந்திக்க வைத்தாய் !
துடிக்க மறந்த நெஞ்சை 
அன்பிலே நனைய வைத்"தாய்" !

காதலுடன் நேசம் கற்பித்தாய்,
பாசத்தை சுவாசம் செய்ய வைத்"தாய்"!
எண்ணங்களுக்கு எழுத்தூட்டினாய்,
எமக்குள் நம்ம்பிக்கையை துளிரவைத்"தாய்"!
என்னை நீர் பெறவிடில்லும்
நீரும் என் அன்னையே!

சீரிய சிந்தனையுடன் நற்பண்புடனும்
எழுத்தென்னும் ஆயுதத்தால்,
நல் எண்ணன்ங்கள் விதைத்து,
தீமையை கலை அறுத்து,
என்றும் நீவிர் வழிகாட்டி ,
வெற்றி படியேறி விண்ணுயர்ந்து,
வானிலும் மை இட்டு எழுதிட ,
வேண்டுகிறோம் இறையவனை . . . 


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

அழகிற்கோர் ஹ்ருதயாசனம் . . .

மானாமதுரை மாமர கிளையின் தொங்கும் மாங்கனியின் தேன் சுவையாய் ,
ஆலங்கட்டி மழையை, உச்சி கிளகையில் 
பூமிதனில் புதுசாய் புதுசாய் 
இசையை சொட்டவிடும் அழகே,
சுகமா
ன இசைபாடல்
செவிதனில் தீண்ட செய்யும் ச்நேஹிதனே
பூவினை கொய்தாலும்,
ஜெகமெங்கும் குஷியோன்கோஹி,
குஷி
தரும் ஒரு பொன் கிளி போல்,
வான் நிலா அசத்துறார் போல்,
நச்சென்று உமது முத்திரை பதித்த பண்பாளனே ,
நீவிர் நினைச்சபடி நெனச்சபடி ,
இசை வரமென அமைய,
இசைக்கு நீர் புதல்வனாய் திகழ,
கனவா, இல்லை காற்றா என்று,
உம் குரல் கேட்டு நாங்கள் கை தட்டி தட்டி,
உமது ஒவ்வொரு தைய தையாவையும் ,
முதல் முறை கேட்பது போல் உறைந்து நிற்க,
மனிதா மனிதா, உன் பிரியசகியுடன்,
கிடைக்கலெ கிடைக்கலெ என்று கூறாது ,
எந்தன் நெஞ்சில் (காலையில்) அரும்பிய
காதல் தேவதை இவள் ,
என்னை பந்தாட பிறந்தவள் - என்னுயிரே,
உயிரிலே எனது உயிரிலே
கலந்தவள்,
என்று கண்ணோடு கண்கள் பேசிக்கொண்டு,
இன்றோடு தடைகளை தூக்கி எரிந்து,
ஓம் முருகா என்று இறையருள் பெற்று,
இந்த நிமிடம் போல் என்றென்றும் புன்னகை பூத்து,

"
"ஸ்ரீ"நாதமாய் ஸ்ர்ங்கார ரசம் சொட்ட,
"நி"ன் குரல் கம்பீரமாய் செவிதனில் தீண்ட,
"வா"னமும் வையகமும் உன்னிசை போற்ற,
"ஸ்"ருதி யோடு லயம் கூடும் மெல்லிசையாய்,

ஆ"வா"ரம் பூ போலே,
தா"ழ்"வின்றி என்றென்றும்,
சு""மாக வாழ்ந்திடவே
"வே"ண்டுகிறோம் இறையவனை 

வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். . .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! !
 — feeling excited with Srinivas Singer