புதன், 27 அக்டோபர், 2010

உணர்வின் உயிர்தேழுப்பு...

நொடி பொழுது வந்தாலும்
சுகம் தரும் வானவில்லாய்..

கிழக்கினில் தினம் தோன்றி
சில நேரம் இம்சிக்கும்
செஞ்சூரியனாய்..
நொடி பொழுது பிரிந்தாலும்
தினறசெய்யும் காற்றாய்...
நீ வேண்டும் எனக்கு!

ஈரம்...

யார் சொன்னது
அவன் கல் நெஞ்சன் என??
எப்போதும் அழுகிறேன்
அவன் மீதுள்ள பாசத்தால்..!
ஆதலால்,
அவனும் ஈரமானவனாய்..!

உதயத்திற்கு உதவுவோம்...


உயிருடன் இருந்தும்
 உறங்குகின்றனர்
சவ குழிகளில்...!
கொடை வள்ளல்லம்
பரத பூமி..
குண்டு மழைக்கு - வெடி
குண்டு மழைக்கு 
குடை கொடுக்க வக்கில்லை...!
உலக வரைபடத்தின்
பெளத்த நாடு - இன்றோ
யுத்த நாடாய்...!
அலைகளின் ஓசையை விட
அலறலின் ஓசையே 
அதீதமாய்..!
செவிடாய் கிடக்கும் 
உலக நாடுகளும்,
ஐக்கிய நாட்டுசபையும்...!
மடல் சாய்க்க
மனம் இல்லையா?
மனிதாபி"மானமே" இல்லையா?

திங்கள், 11 அக்டோபர், 2010

கள்வனின் காதலோ.??


வகுப்பறையில் மூலையில்
தன் வேலையை
அவன் ஷ்ராதையாய் செய்திருக்க,
என் வலையை விட்டு விட்டு,
கடைக்கண் பார்வையால்
அவன் கண் படாது
பார்த்து ரசிப்பதும்
தவிப்பை தான் உள்ளது...
~~ பேராசிரியர் நடத்துகையில்,
ஜன்னலில் ஓர் சிட்டு குருவி...

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தோற்ற இயற்பியல் விதி..

விசை தாகும் வரை,
பொருள் அசைவதில்லை.
இவர்களது  அழுகுரல் ஓசை  கேட்பினும்
அந்த அரசாங்கம் அசையவில்லையே..!
நியூட்டன் விதியும் தோற்றுவிட்டதோ....
தமிழீழத்தால்??

ஹைக்கூ...


என்னுயிரே ...,
கண்ணீருக்கு சக்தி இருந்திருந்தால்,
விண்ணிற்கு ஓர் படிக்கட்டி
உன்னை மீட்டிருப்பேன் நான்....