மூன்று ஆண்டுகள் உருண்டோடிய
உன்னை பிரிந்து நாங்கள் வாழ தொடங்கி.
எங்கிருக்கிறாய் நீ?
எப்படி இருக்கிறாய் நீ?
எப்போழுது வருவாய் நீ?
பற்பல கேள்விகள் எங்களுக்குள் .
இருளா நீ ,
ஒளியானயா நீ?
கதிரா நீ ,
மழையானாயா நீ?
அழுகுரலா நீ ,
சரணகோஷமானயா நீ?
உன்னை தீ விழுங்க,
நாங்கள் கதறிய நினைவலைகள்,
நெஞ்சினில் நீங்காது நிற்க,
எங்கள் நினைவுப்பெட்டகத்திலிருந்து
உன் மாசற்ற சிரிப்பின் நிகழ்வுகள்,
இன்னும் எங்கள் உள்ளத்தில்.
ஆண்டொன்று போனால்
வயதொன்று கூடும் என்றும்
உன்னை விரைவில் காண்போம்
என்ற எண்ணத்தில் வாழும் நாங்கள் . . .
நினைவாஞ்சலி - ஏப்ரல் 16, டாக்டர் ராஜ் கைலாஷ் மோகன்.