ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

உன் நினைவில் . . .

மூன்று ஆண்டுகள் உருண்டோடிய 
உன்னை பிரிந்து நாங்கள் வாழ தொடங்கி. 
எங்கிருக்கிறாய் நீ?
எப்படி இருக்கிறாய் நீ? 
எப்போழுது வருவாய் நீ? 
பற்பல கேள்விகள் எங்களுக்குள் . 
இருளா நீ , 
ஒளியானயா நீ?
கதிரா நீ , 
மழையானாயா நீ?
அழுகுரலா நீ ,
சரணகோஷமானயா நீ?
உன்னை தீ விழுங்க, 
நாங்கள் கதறிய நினைவலைகள்,
நெஞ்சினில் நீங்காது நிற்க, 
எங்கள் நினைவுப்பெட்டகத்திலிருந்து 
உன் மாசற்ற சிரிப்பின் நிகழ்வுகள்,
இன்னும் எங்கள் உள்ளத்தில். 
ஆண்டொன்று போனால் 
வயதொன்று கூடும் என்றும் 
உன்னை விரைவில் காண்போம் 
என்ற எண்ணத்தில் வாழும் நாங்கள் . . .

நினைவாஞ்சலி - ஏப்ரல் 16, டாக்டர் ராஜ் கைலாஷ் மோகன்.

திங்கள், 4 செப்டம்பர், 2017

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! ! !

முதல் நாள் பள்ளி,
அழுகையினூடே 
பையை அணைத்தேன் ,
நீரோ எம்மை அணைத்தீர்,
தாயுமானவராய் !

குறும்பு வயதின் உச்சமாய்  
ஓராயிரம் தண்டனைகள்,
வாயோயாது வைவீர்கள்
வலிக்கும் என அறிந்தும் திருத்த,
தந்தைக்கு நிகரானீர் !

என் நத்தை கூட்டிலிருந்து 
விடுவித்து வெளியுலகை காட்டினீர்.
தவறி விழுந்தால் 
தோளோடு அணைத்தீர்,
தோழனாய் திகழ்ந்தீர் !

தாய் தந்தது உயிர்
தந்தை தந்தது அன்பு
எனில் எமக்கு
நீர் தந்ததோ
உணர்ச்சி !

எதிர்பாரா சந்திப்பில் ,
நாங்கள் முன்னேறி
நல்ல குடிமகன்களாய் இருக்கையில்
எத்துணை மகிழ்ச்சி
எத்துணை குதூகலம் !

உங்களை வாழ்த்த வயதில்லை
உங்கள் அன்பிற்கு
தலை வணங்குகிறோம்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! ! !


வெள்ளி, 28 ஜூலை, 2017

பௌர்ணமி கவிதைகள்

நிலவை போல் நம் உறவு,
தேய்ந்தும் தோன்றியும், 
முழு இருட்டும் 
கடன்வாங்கிய வெளிச்சமுமாய்! 
குடும்பம் எனும் வானில்,
கண்கட்டி விளையாடும்
கடனாளி நிலவாய் . . ! 

பௌர்ணமி கவிதைகள்

என் கனவுகளில் தேய தொடங்கி
உன் முழு ஒளியில்
நான் கண் விழித்தேன்!
நீ என் பௌர்ணமி . . !

பௌர்ணமி கவிதைகள்

ப்ரகாசமாய் மிதந்தாலும்
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
மத்தியில்,
கதியற்ற ஒற்றை நிலவாய்
கருநீல இருள் வானில்
தனி வெள்ளை தட்டாய்
சொல்லொன்னா சோகமேந்தி
பௌர்ணமி நிலவு . . !

பௌர்ணமிகவிதைகள்

நிலவும் தாயே
தான் தேய்ந்தாலும்
பேனாக்கள் வழி
பிரசவிக்கிராள் கவிதையாக . . !
நீ பௌர்ணமி