வியாழன், 26 பிப்ரவரி, 2015

அமாவாசை .

முத்தம் வாங்கிய மயக்கத்தில்
 நிலவு தன்னை மறைதுகொண்டது.
அமாவாசை .

என் காலத்தை

உன்னில் தொலைந்து
உன்னிடமிருந்து தொலைவாய்
போனதை எண்ணியே கடக்கிறேன்
என் காலத்தை . . .!

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

நிதர்சனம்

மனதின் தேடல்
சில தருணங்களில்
உடலில் முடியும் !

ஈழ பைங்கிளி

கடல் தாண்டி நின்றாலும்
பாவம் அவள் நிலத்தின்
 மடியில் வீழ்ந்து விடுகிறாள்
வானில் ஓர்
விமானம் பறக்கையிலே...
அவள் - ஈழ பைங்கிளி !

வித்தியாசம்

ஒன்றோடு ஒன்று
உரையாடிய உதடுகள்
இப்பொழுது தங்களுக்குள்
உறவாடுகின்றன . . .
அது சரி,
காதலுக்கும் காமத்திற்கும்
சிறு கோடுகள் தான்
வித்தியாசம் . . .

கண்ணகி - மாதவி

மந்தஹாசம் சிந்தும்
மாதவி இல்லையெனில்
கற்புக்கரசி என கண்களில்
கனல் கொண்ட கண்ணகியை
நாம் கண்டறிந்திருக்க முடியுமோ....?