வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சமுதாய சிற்பிக்கு ஓர் மடல் !

வித்தென விழுந்த என்னை
விருட்சிகமாய் மேலெழுப்பி
கிளை பரப்ப செய்தீர்!

தந்தைக்கு இணையாய் கண்டிப்பும்
தாய்க்கு இணையாய் பாச பிணைப்பும்,
தோழமைக்கு இணையாய்
 பரிவும் உரிமையும்,
கற்பித்த கல்விதனிலே புகுத்தி தந்தீர்!

தினம் தினம் கலை சிற்பியாய்
எம்மை - நாளைய இந்தியாவை ,
அழகாய் செதுக்குகிரீர்,
துளியும் சலிக்காமல்!

குயவனின் களி மண் பானையாகிறது
உந்தன் கைகளிலே யாம் மனிதனாகிறோம்!
உந்தன் பேச்சுக்களால் பட்டை தீட்ட பட்டு
இன்று வைரங்களாய் மின்னுகிறோம்!

மெல்ல மெல்ல 
நாட்கள் நகர,
நாங்களும் வளர,
உலகின் உச்சியில் 
எம்மை நிறுத்தி காணுகையில்,
உமது கண்கள் பொங்குதே 
மகிழ்ச்சியின் பால்!

எமை ஏற்றி விட்ட ஏணி என 
துளியும் இல்லை கர்வம்!
உலகை எமக்கு காண்பித்த நீரோ,
இன்றும் அதே வகுப்பறையில்,
எம்மை போன்ற மாணாகளுடன், . . . 
சமுதாயத்தை செதுக்கும் சிற்பியாய்,
அறபணியில் நின்னை அர்பணித்த நிறைவுடன் . . . !

உம்மை வாழ்த்த வயதில்லை,
வணங்குகிறோம் சிரம் தாழ்த்தி !

எமதினிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !

இவள்,
உந்தன் வாழ்கை பறவையின்
சிறகில் ஓர் இறகு !