செவ்வாய், 30 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #17

பிறை இல்லா நாளிலும்
அவள் நெஞ்சில்
பௌர்ணமி கோலம் !
அதனால் தான்
பகலவனை கண்ட பனி போல்
பெண் பாவை அவள்
உருகி நிற்கிறாளோ ?
அவள் - காந்தாரியோ மீராவோ!

பனியும் பெண் பாவையும் #16

வன்மையும் மென்மையுமாய்
வளைந்தோடிய நதியிடம்
கேட்டாள் பெண் பாவை இவள்,
வானந்தரதிலும் வன மத்தியிலும்
நீர் வளைந்து செல்கையிலே,
காண்பாயோ ஓர் பனித்துளியை ?

திங்கள், 29 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #15

பனி சிற்பமாய் உறைந்தாள்
பெண் பாவை அவள்
தன் கண்ணனின் குழலோசையை
காணிக்கையாய் கொண்ட
தன் காதல் மீது கர்வங்கொண்டு ! !

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #14

கோட்சே வாதம் பேசும் கன்னியாவான்களே
கவிதை வரைய தயாராகுங்கள்,
அதோ வருகிறாள்
தன்  காதலின் தூதாய்
பனித்துளியை வரித்த
பெண்பாவை!

பனியும் பெண் பாவையும் #13

தன் கருவின் புதயலேன
கண்டெடுத்த அவளின்
காந்தர்வ காயகனின்
கண் சிந்திய ஒரு துளியில்
பனிபோல் உறைந்து நின்றாள்
பெண் பாவை அவள் !

பனியும் பெண் பாவையும் #12

பனி போர்வைக்குள்
மறைந்தது  ஒரு துளி
கண்டெடுத்த பெண் பாவை
தந்தாள் ஒரு  சிரிப்பொலி !

பனியும் பெண் பாவையும் #11

கதிரவனின் அணைப்பில்
 கரைந்திடும் பனித்துளி
பேரிளம் பெண் பாவையே
அதை நீ கண்டு களி !

பனியும் பெண் பாவையும் #10

பனித்துளியை பரிசளித்தது
பால் நிலவு
பெண் பாவை அவள்
பால் சோறு ஊட்டுகையிலே !

பனியும் பெண் பாவையும், #9

உதிர்ந்தாலும்
உடைந்தாலும்
உறைந்தாலும்
தன்னை இழக்காத
ஒரு பனி  துளியின் மேல்
மையம் கொண்டாள்
பெண் பாவை இவள் !

சனி, 27 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #8

பள்ளிகொண்ட நிலவு
பதமாய் பறை சாற்றியது
பகலவன் வரும்முன்
பனி துளி தரிசிக்கும்,
பெண் பாவை இவளை !

வியாழன், 25 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #7

காற்றின் இசைக்கு
சங்கதிகள் எழுதி
கமகம் கொடுத்து தலையாட்டிய
பூ பாவையின் இதழில்
தெறித்து விழுந்தது பனித்துளி!

பனியும் பெண் பாவையும் #6

பூ மலர சிந்திய
வேர்வையாம் பனிதுளியின்
வாசத்தை சுவாசித்த
பெண் பாவை நினைத்து கொண்டாள்,
உழைப்பே உயர்வென்று !

பனியும் பெண் பாவையும் #5


தன்னை சூழ்ந்து கொண்ட தனிமையை 
மொழிபெயர்க்க எண்ணிய பாவை,
எழுத்தானியில் இட்டாள் 
மார்கழியின் பனித்துளியை!

பனியும் பெண் பாவையும் #4

கரைந்து போன 
பனித்துளியின் வாசத்தில்,
காந்தார பவை அவள்
கந்தர்வ கண்ணனை தேடினாள் !

பனியும் பெண் பாவையும் #3

மௌனத்தின் கதறலில் 
மெதுவாய் விழித்தது 
பாவையின் உள்ளம்,
பனி தாங்கிய கண்களோடு . . .!

புதன், 17 டிசம்பர், 2014

‪பனியும் பெண் பாவையும் #2‬

பனி தங்கிய இமை 
தேன் துளி கொண்ட இதழ்
பிரித்த பாவையின் உள்ளம் 
தேடியது அவள் கண்ணனை,
அவள் - தேவகியோ மீராவோ . . !

செவ்வாய், 16 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #1

பகல் முழுக்க புன்னகைத்து 
பாதி இரவினில் விக்கியழுத 
பெண் பாவையை மறைந்து 
இருளின் இடுக்கில் எட்டிப்பார்த்து 
நிலவு சிந்திய கண்ணீர்,
காலை பூவிதழ் மேனியதனில் 
பனித்துளியாய்...

திங்கள், 15 டிசம்பர், 2014

வாழ்க்கை ஓர் தொடர் கதை ! #1

மழை பெய்ந்து ஓய்ந்ததும்,
மேக காதலனுடன் 
மோகம் கொண்ட கதிரவன்,
தன் தாபம் தீர்த்த பின்னரே,
நிலம் கொண்ட மழை குடித்து,
தாகம் தீர்த்தானோ ?
வாழ்க்கை 
ஓர் தொடர் கதை !

செவ்வாய், 9 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #10

ஆங்காலம் தேடி
வறண்ட தொண்டையோடு
இப்புவிதனில் நான்  நடக்கையிலே,
அழகிய புதையலென
உன்னை கண்டெடுத்து,    
ரத்தினமாய்
ஜொலிக்கும் உன்னை,
என் விரலில் இட்டு,
அவ்விரல் நீட்டி
வான் பதிந்த
விண்மீன்களை கொண்டு,
சுருங்கும் உன் விழி நீவி,
உன் அருகில்
என்றென்றும் உன் அருகில்,
நான் நின்று
அடைகாக்க ஆசை தான் !
நீ,
என் இரத்தின புதையல்!
​ --- சுபம் ---

இரத்தின புதையல் #9

அப்பொழுது பூத்த
புஷ்பத்தில் ராகம் இசைக்கும்
வண்டை போல்,
என்றும் உன் கீதம்
என் செவி தீண்டும்!
நீ,
என் இரத்தின புதையல்!

இரத்தின புதையல் #8

பசிக்கும் என் மனதிற்கு
புசிக்க தந்தாய்  விருந்து !
உன் பவழ இதழ் விரித்து,
நீ சிந்திய வார்த்தைகளும் 
தந்த முத்தங்களும் !
நீ,
என் இரத்தின புதையல் !

இரத்தின புதையல் #7

அஞ்சும் இருளில் இருந்து
என்னை மீட்ட மருந்து
நீ  - கோமேதகமாய்
சுடர்கொண்டு எனக்கு ஒளிதந்தாய் !
நீ
என் இரத்தின புதையல்!

இரத்தின புதையல் #6

நீளமாய் செல்லும்
நமது பந்தத்தில்,
சாந்தமாய் நீ,
சுடராய் நான் !
ரதினச்சுருக்கமாய்,
நீலம் நீ!
நீ,
என் இரத்தின புதையல் !

திங்கள், 8 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #5

உன் மரகத முகம் காண்கையில்
கவலைகள் மறந்தோடி
நேசம் மட்டுமே  நிற்கின்றது!
நீ,
என் இரத்தின புதையல்!

இரத்தின புதையல் #4

மனம் பற்றும் முன்னேற்றத்தை
பரிசளிக்கும் வைடூரியம் போல்,
என் மனம்நோக்கும் அமைதியையும்,
இதழ் தேடும் புன்னகையையும்
அழிக்காது தருகிறாய்!
நீ
என் இரத்தின புதையல் ! 

இரத்தின புதையல் #3

வானத்தில் சுகித்த
நிலா துண்டொன்று
முத்தாகி, எனது முத்தத்தில்
முக்தியடையுதோ ?
நீ
என் இரத்தின புதையல் 

இரத்தின புதையல் #2

உன் தங்க முகங்கண்டு
ப்ரமிப்பில் பித்தாகி,
சட்டென நின்ற இதயத்திடம்,
சூரியனுக்கு உகந்த
மாணிக்கம் போல்,
உனக்கு உகந்த
இரத்தின பந்தம் இதென்றேன் !
நீ
என் இரத்தின புதையல்!

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #1

நிலவாய் நீ தீண்டி
மின்னும் வைரமாய் நான்
வெண்மை தான் எங்கும்,
தூய்மையான நம் நேசம் போல்!
நீ
என் இரத்தின புதையல்!

வெள்ளி, 5 டிசம்பர், 2014

பௌர்ணமி #8

பிறை வளர்ந்து பெரிதாகி,
கருநீல வானில் இன்று
பௌர்ணமி நிலவானது போல்,
அறிமுகத்தில் தொடங்கி,
நட்பில் வளர்ந்து,
பிரிவில்லா பந்தமாய்
இன்று  நானும்நீயும்
- நெகிழவைத்துவிட்டாய்
ஒத்துக்கொள்கிறேன்
பௌர்ணமி நான்,
என் வானம் நீ !
​​​​ சுபம்



வியாழன், 4 டிசம்பர், 2014

பௌர்ணமி #7

நிலவு வளருமே என்றேன்!
அடி போடி ,
அல்லி போல் நானும் 
நீ வருவாய் எனநின்றிருந்தேன் 
பிறையாய் வளர்ந்து 
பின் காட்சி தரும் 
பௌர்ணமி நிலவை போல்,
குறுஞ்செய்திகளில் தொடங்கி, 
கை அணைப்பில் 
நிற்கிறாய் நீ என்றாய் ;
-  உருக்கி விட்டாய் !

பௌர்ணமி #6

பௌர்ணமி #6
சில தருணங்களில் முழுமையாய்,
எனதே எனதாய்,
சில தருணங்களில் பகைமையோடு,
எனக்கென்று இல்லாமல் தூரமாய் ,
புரிகிறதா நீயும்
அந்த பௌர்ணமி நிலவும்
 ஒன்று தான் - முடித்துவிட்டாய் !

புதன், 3 டிசம்பர், 2014

பௌர்ணமி #5

பௌர்ணமி கவிதைகள் #5

தனிமை இரவில் 
துணை என யாரும் இல்லை.
அவ்வபொழுது மட்டுமே 
நிழலாய் வரும் நிலவும்
அவ்வபொழுது மட்டுமே 
நிஜமாய் வரும் உன்னையும் தவிர..
 நீ எனக்கு பௌர்ணமி தான்!  

திங்கள், 1 டிசம்பர், 2014

பௌர்ணமி #4

பௌர்ணமி #4
பிறை கொண்ட  நிலவா
நான் உனக்கு - என்றேன்!
நட்சத்திரங்கள் ஆயிரம் இருந்தும்,
வானின் அரசி
என்றும் பௌர்ணமி நிலவு தான்
எனக்கு உன்னை போல
- முடித்து விட்டாய் !

ஞாயிறு, 30 நவம்பர், 2014

பௌர்ணமி #3

அந்த பௌர்ணமி நிலவும்
எனக்கு துணை,
தனிமையில் இசைகேட்க !

பௌர்ணமி #2

நான் பௌர்ணமி என்றால்,
தேய்ந்து விடுவேனே என்றேன்!
காலச்சக்கரம் சுழலாது,
நீ முழுநிலவாய் இருக்கையிலே,
உனக்குள் நான்
தோய்ந்துடுவேன்  என்கிறாய்,
காதல் தோய்த்த குரலில்!

ஒரு முறை !

ஒரு முறை,
ஒரே ஒரு முறைதான் !
உன் தோள் சாய்ந்து,
உன் கையணைப்பில் புகுந்து,
என் கண்ணீரில் உன்னை நனைத்து,
விழியோடு கலந்துறையாடி,
என் அன்பை,
உனக்கு மட்டுமே ஆன
என் அன்பை,
உனக்கு உணர்த்தவேண்டும் . . .
ஒரு முறை,
ஒரே ஒரு முறை மட்டும் தான் , , ,!

தாய்மை

விழிகளிலும் குரலில்
கருவறையின் வெப்பம்
உன் தாய்மை !

சனி, 29 நவம்பர், 2014

ஹைக்கூ

காதலோடு அழைத்தேன்,
அணைத்தாய் - என்னை இல்லை
அலைபேசியை!

பௌர்ணமி ..

நீ இல்லா தனிமையில்,
தகிக்கிறேன் என்றேன்!
அடி போடி,
என்றும் என் நினைவில்
நீ மட்டும் தான் பௌர்ணமி
 - முடித்துவிட்டாய்!

உயிர்சொர்கம்

என் சொர்க்கத்தில்
எனக்கு மட்டுமே இடமுண்டு
அவ்விருக்கண்கள்!

நாணம்

அட,
கொஞ்சமும் நாணம் இல்லை போலும் மேகத்திற்கு
இப்படி பகிரங்கமாய் முத்தமிடுகிறதே பூமியை !

கனவறை

வந்து பார் ,
என் கனவறை முழுதும் உன் பிம்பம்..
நிஜத்தில்
நீ எங்கோ, நான் எங்கோ!

சத்தமும் முத்தமும் !

பூ விரியும் சத்தம்,
பூக்களுக்குள் யுத்தம்!
உன் இதழ் சேரும் சத்தம்,
என் கன்னங்களில் முத்தம் !

கவிதைக்குவியல்

உனக்கும் எனக்குமான 
கவிதைக்குவியல்,
நம் கை பேசிகளின் inbox !

சாம்பல்

நெருப்பின் முடிவு சாம்பல் 
ஒத்துகொள்கிறேன்
காதல் நெருப்பு தான், !

வெள்ளி, 21 நவம்பர், 2014

MAX

சொல் புதிதாய் பொருள் பதிந்தாய்,
சொல்ல வல்ல என் ஆசான்களின் பட்டியலில்,
MAX இன் இடம் அழுந்த பதிந்ததாய்.

என் உயிருக்குள்
ஞான சுடறேற்றி
கற்பனைக்கு ஒளி தந்தது MAX

வாழ்க்கையின் குறிக்கோள்
வயிறல்ல - வாழ தகுதியானவனுக்கு
தடைகளேதும் பெரிதல்ல - சான்றளித்தது MAX

ஞாபக குளத்தினுள்ளும்
நன்மைகளையே தேக்கி வைக்கும்
வித்தைகளை கச்சிதமாய் கற்பித்தது MAX

கால் முளைக்க வைத்து
என் முகவரியை எனக்குள் தொலையாது
தேடி தந்ததில் பெரும் பங்குண்டு MAX

பனிதுளியையும் பூவிதழின் அழுகையல்ல
பூ மலர சிந்திய வேர்வை என
பார்க்க வைத்தது அதிசயமாய் MAX

வாழ்கின்ற வாழ்க்கையில் மனித நேயமும்
உயிர் தாங்கும் தாய் நாட்டின் பற்றும்
உயிர் தந்த அன்னை பாதம் பணிதலுமாய்
என்னை மாற்றி அமைத்த MAX

MAX உடன் நானும்
என்னுடன் MAX உம்
ஒன்றாய் வளர்கிறோம்

மனிதனை மனிதனாய் செதுக்கும் சிற்பியாய்
உளி கொண்டு ஒளி தரும்
MAX இன் அனைத்து உயர்கரங்களுக்கும்
நன்றிகள் பற்பல!

வெள்ளி, 31 அக்டோபர், 2014

விசித்திரம்

விசித்திரம் #2 
அழுக்கழிந்து சுகாதாரம் வேண்டியல்ல,
கண்ணீர் கரைந்து நிம்மதிக்கு 
அஸ்திவாரமாய் வெந்நீர் குளியல்!

செவ்வாய், 7 அக்டோபர், 2014

கானாஞ்சலி . . . !

அனைவரும் உறங்கிடும் நேரம்
தலையணை தகித்திடும் ஈரம்
உன் விரல் தந்த மாயத்தால்
உறக்கம் எனக்கு பரிச்சியம்!

தெற்கும் வடக்கும் கூடாதென்று
கிழக்கும் மேற்கும் காணாதென்று
கூறியோரின் வாக்கை பொய்யாக்கி
காவியம் படைத்தன உன் விரல்கள்!

வாக் தேவி வெறுத்தாள்
தான் கொண்ட வீணையை,
உன் விரல் விளையாடிக்கொண்டிருந்த
Mandolin கண்டு!

அரை மணி பிரார்த்தனை
ஒவ்வொரு கச்சேரிக்கும் முன்பு;
மனிதனே, உமது ஒவ்வொரு கச்சேரியுமே
கடவுளை உணரும் வழிதான் எமக்கு!

மௌனத்தில் புதையுண்டு
வேதனை நம்முள் விதைத்து
மீளா துயர் ஒன்றை தந்து
மாண்டது Mandolin !

தந்திகள் மீட்டிய விரல்களுக்கு
நரம்பறுந்த உணர்வோடு
வலி"மை" இட்டு வரைகிறேன்
கானாஞ்சலியாய் ஓர் கவிதாஞ்சலியை!

இவள்,
நீ விட்டுசென்ற
இசையின் அடிமை !

எழுத்தில் இதை வடிக்கும் பொழுது கண்ணீர் வடித்தது என் பேனா!
துர்பாக்யவதி என் பேனா, தன்  இரு நூறாவது எழுத்தினை அஞ்சலியாய்  பதிந்ததற்கு!

வேறு யார் "ஆண்டவன்"

பிழைப்பு தேடி வந்து 
உழைப்பின் சிகரமான நமக்கு 
எத்துனையோ துன்பங்கலளித்த 
எத்தனையே நடுங்கவைத்து 
ஆண்டவர்களை 
மாண்டவர்களாக்கி 
ஆண்டவனாகி
மாண்டவன் - அவன் 
இந்திய தாயின் தவபுதல்வனின்றி 
வேறு யார் "ஆண்டவன்" ? ?
#சர்தார் ஷாஹீத் பாகத் சிங் 

விசித்திரம்

விசித்திரம் #1
புயல் தந்த மழையில்
நனைந்த மரத்தின்
தலையை துவட்டியது தென்றல் !


ஹைக்கூ

அன்று கிழவன் பெற்று தந்ததை 
இன்று இளைஞன் விற்று வந்தான்!
மேற்கத்திய மோகம்!

திங்கள், 6 அக்டோபர், 2014

என் பேனா உயிரை மாய்துகொன்டது !

எழுதிடவேண்டும் எதையாவது,
மனதையா அறிவையா?
மனம் கனக்கிறது,
அறிவு கண்டிக்கிறது!

தேசத்தின் புற்றாய் 
வளர்ந்து செழிக்கும் ஊழலை 
தேசபற்றோடு 
அழிக்கும் காலம் எங்கு உள்ளது?

நெஞ்சின் குழியில் 
அடைந்து புதையுண்ட 
உணர்வுகள் பாரமாய் கொள்கிறது 
உயிர் வலி கொடுக்கின்றது !

மதியிடம் மனமோ கேட்கிறது,
"எழுத்தில் மட்டுமே இருக்கிறது 
உனக்கும் வீராப்பு - ஒளிகிறாய் தானே 
வேண்டாம் பொல்லாப்பு (என்று)"

வெட்கத்தில் 
கண்ணீர் சிந்திய என் பேனா 
காகித காதலியின் மேலிருந்து 
தன் உயிரை மாய்துகொன்டது !

புதன், 17 செப்டம்பர், 2014

நீ தான், நீயே தான் !

பறவையாய் தங்கிடுவேன்
பறந்து விரிந்த உன்னுள்,
கம்பளம் கேட்க எண்ணம் இல்லை,
நீ என்னை அணைக்கையில்
உன் மார்போடு
நீ என்னை அணைக்கையில் ! ! !

துயர் கொண்ட நெஞ்சம் அதை
தூய நேசத்துடன் கொஞ்சும்
தருணம் கண்டேன்
நீ தரும் முத்தத்தில்
என் நெற்றியில்
நீ தரும் முத்தத்தில் ! ! !

மனதின் அடிவாரத்தில் ஆரவாரம்
மெது மெதுவாய் அடங்கும்
அமைதியாய் கண்கள் உறங்கும்
உன் ஆராரோ கேட்கையில்
நெஞ்சின் பௌர்ணமி என
உன் ஆராரோ கேட்கையில் ! ! !

நீ
என் பிரபஞ்சத்தின் நாயகன்

நீ
நேசத்தின் தாயகம்

நீ
என் ஆரோகணம்

நீ தான்
நீயே தான்

இசை . . !

புதன், 3 செப்டம்பர், 2014

Happy Teachers' Day ! ! !

அனைத்தும் உண்டு


எங்கள் நினைவில்.

நாங்கள் உயர,

நீங்கள் குனிந்து நின்றது!





பசுக்கள் தம் ரத்தத்தை

பாலாய் தருகின்றன,

எங்கள் ஆசானே,

எங்களுக்கு கல்விப்பால் புகட்ட,

உங்கள் ரத்தம்

தொண்டை நீராய் வறண்டுசென்றது !





விஞ்ஞானிகள், மருத்துவர்கள்,

ஆய்வாளர்கள் - ஏதும் நாங்கள் இல்லை,

அன்று எங்களை உரு ஏற்றிவிட

நீங்கள் இல்லாவிடில் !





சர்வாதிகாரி என்றே சொல்லுவோம்

உங்கள் திட்டுகளையும்

பிரம்படிகளையும் வாங்கிய பின்பு!

இன்று உணர்ந்தோம்,

கல்லொன்று தடை செய்த போதும்

சிலை எழுப்பும் சிற்ப்பியாய்,

எம்மை விண்ணுயர செய்த நீர்,

ஆசிரியர் மட்டும் அல்ல,

ஆசானும் தான் !





இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .

வெள்ளி, 25 ஜூலை, 2014

சகோதரர்கள் . . . !

சகோதரனின் ஒவ்வொரு ரகசியமும் 
அறிந்தவர்கள் சகோதரிகள் தான்!

கடற் கரையில் விளையாடவோ,
கண்ணாமூச்சி ஆடிடவோ,
சைக்கிள் ஓட்டிடவோ,
பிஞ்சு விரல் பிடித்து 
தத்தி நடை பழகி,
பட்டு மேனி கொண்டு
தேவதையாய் தெரியும்  சகோதரிகளின் 
சுவாசமாய் சகோதரர்கள் . . .

பொறுப்பும் பண்பும், 
பாச பிணைப்பும்,
உணர்வுகளுக்கு உயிரளிக்கும் 
உன்னதர்களாய், 
நண்பனாய், தந்தையாய் 
சகோதரர்கள். . . 

பெற்றோர்களிடம் பெண் இவளின் 
கோரிக்கைகள் சுமக்கும் தபால்காரனாய்,
இவளுக்கென பெற்றோரையும்
கோபிக்கும் அக்னிதேவனாய்,
இவளுக்கென பாசபயிரிட்டு 
வேலி போல் தாங்கும் காவலனாய், 

சண்டை போட்டாலும் 
பின்பு சமாதனமானாலும்,
கடை கன்னி செல்கையில் 
தனக்கு என்பதை விட
தன் சகோதரிக்கென 
வாங்கும் சகோதரர்கள், 

சகோதரனில்லா வாழ்வின் 
கற்பனையும் பயங்கரம் பெண்ணிற்கு,
சகோதரி இல்லா வீடும் 
நிசப்தமான அவஸ்தை ஆணிற்கு !

மற்றவே முடியாத மரபாம் 
அவளின்  திருமணத்தின் பொழுது 
அழுதிடும் தந்தையர்கள் முன்,
தன கண்ணீரை மறைத்து 
சந்தோஷமாகவே நடிக்கின்றனர்கள்
சகோதரர்கள்  . . . !



எனக்கும் சகோதரத்துவம் கற்பித்த கைலாஷ், வேளு அண்ணா, ஐயுப், சுந்தர ராகவன் அண்ணா, சத்யா . . .  என நீளும் பட்டியலின் மக்களிற்காக.... !

செவ்வாய், 17 ஜூன், 2014

ஹைக்கூ

உங்கள் விழிநீரினால் 
என் நெற்றி பொட்டு அழிந்தது,
இராணுவ வீரரின் மனைவி.

இளம் விதவை

வாழும் பொழுது எனக்கு தராத பூமாலைகள்,
வீழ்ந்தபின் குவிந்தன என் கல்லறையில் 
இளம் விதவையின் கண்ணீர் .

புதன், 9 ஏப்ரல், 2014

ஹைக்கூ

உடல் புழுக்கம் - வியர்வை
மனபுழுக்கம் - கண்ணீர்
நீர் இன்றி அமையாது உலகு ! 

புதன், 26 மார்ச், 2014

ஸுதர்சனதிர்கோர் ஸாசனம் . . .

பறவைகளாய் பறந்து கொண்டிருக்கும்
இந்த கெவின்கேர் வாழ்விலே,
ஏதோர் கிளையில், இளைப்பாற அமருகையில்,
நிதானமாய் தீண்டும் எங்கள் செவியை
உந்தன் சிரிப்பு ஒலி . . !

தும்பிகளும் தோற்கும் உந்தன் சுருசுருப்பிலே,
கதிரவனும் கனிவான் உந்தன் பரபரப்பிலே,
விண்மீகன்களும் இடம் கேட்கும் உந்தன் விழிதனிலே,
ஐன்ஸ்டெனும் கடன் கேட்பர் உந்தன் அறிவதனிலே,
பட்டாம்பூச்சியும் பரிசலிக்கும் தன் சிறகதனையே . . !



வானம் தொடும் வரம் பெற்றோனே,
எல்லோர்க்கும் இனியவனாய்,
எந்நாளும் இளையவனாய்,
எழிலேனவே இமயமாய்
குறைவில்லா புகழோடும்,
குறைவற்ற குணத்தோடும்,

மாசற்ற மனதோடும்,
மறவாது எங்கள் நினைவோடும்,
மாறா புன்னகை கொண்டு,
தினம் பூக்கும் புதுமலர் போல்,
என்றென்றும் வாடதிருக்க,
வேண்டுகிறோம் இறையவனை . . !

உந்தன் வாழ்க்கை பறவையின்
ஓர் சிறகின் இறகுகள்,

TO SS, Our Team mate on his fare well ! :-) 31s Jan 2014. . . 



ருபியானோடு சனீரா . .

பாரிஸ் நகரில் பரிவாய் பார்த்தவள்
சைதையில் சற்றே  சேட்டையாய்  சிரித்தவன்,
கொல்லத்தில் கொள்ளை அழகோடு,
நாணி சிவக்கிறார்கள் மணகோலத்தில் நம் முன்னே !

விழிகளில்  கண்ட கனவாய் -  காதல்,
விழித்த உடன் நனவாய், திருமணத்தில்.
மொட்டுக்களை ரசித்த மனதிற்கு சந்தோஷ புதுமலராய்,
நாளைய கனவுகளில் நம்பிக்கை காண இருமனம் இணைகிறது!
திங்களின் எழில் கொண்ட தேவதையாம் இவள்,
ஆதவன் ஒளிகொண்ட இசை வேந்தனாம் இவன்
இருவர் கரங்கொண்டு இல்லறத்தேர் நல்லறத்தோடு
இனிதாய் இழுத்திடவே தொடங்குமோர்  பயணம்!

ஆன்றோர் நாள் குறித்து உமை சேர்க்க,
சொந்தங்கள் கூடிவந்து பெருமை கூட்ட  
தேவர்கள் ஆயிரம் பூச்சொரிய 
ஓருயிராய், ஆருயிராய், இணையாய்  இருவரும் !
விண்மீண்கள் கண்ணசைவில் புதுகவிதை பாடிடவே,
இசையோடு நாதம் சேர்ந்து தேனமுது உதித்திடவே,
காற்றோடு மேகங்கள் இன்ப  மழைச்சாரல் தூவிடவே,
ருபியானோடு சனீரா காதல் பாட்டிசைத்திடவே !

இசையன்னை மடியில் இளஞ்சிங்கமாய் உறுமுமிவனை
தன்மடி தாங்கும் அன்னையாய் இவள் இருக்க,
பிரெஞ்சு நாட்டின் அழகு தேவதையாய் இருப்பவளை,
தன்நெஞ்சில் சுகமாய் தாங்கும் தோழனாய் இவன்!
இவள்பாதியிவன்பாதி என்றுறைக்கும் மணவாழ்வில் 
இல்லறத்தின் இலக்கணமாய் ஜெயமளித்துஅன்போடு,
மனம் நிறைக்கும் மழலைச் செல்வங்களோடும் 

அறிவோடும் அன்போடும்ஆண்டாண்டாய் நிறைவாய் வாழியவே !

என்  அக்காவின் திருமணத்திற்காக :-) :-) :-)

வாழ்த்துக்களும் ஆசிகளுடன்

உன் குரல் கேட்க எழிலோவியமாய் காண,
காத்திருந்தோம் நாங்கள் ஈரைந்து  மாதங்கள்!

ஆகாயத்தில் கண்ட வெண்ணிலவை,
அருகில் காணும் அதிர்ஷ்டமாய் !
அன்பு போர் செய்த போதும்,
அடம் பிடிக்கும் போதும் 
அழகென நீ இருப்பாய் 
என்றென்றும்  எங்கள் ஜிஷ்ணு!
வருடத்தின் முதற் கவிதை
வரைகிறேன் உனக்காய் இன்று..
வரமென வாழ்வில் வந்த மழலையே ,
மறவாதே உன் அன்னையை!
உனக்கென உருகும் தந்தை(யை)
காண்பதோ நிஜமாய் விந்தை !
நல்லுயிர்களை உரம் என கொண்டு,
வெற்றி வாகை சூடி, 

நற்பண்பின் இலக்கணமாய் நீ வளர,
வேண்டுகிறோம் இறையவனை . . !


வாழ்த்துக்களும் ஆசிகளுடன்,
:-) 

To Jishnu (S/o. Mrs & Mr. Gomathi ) on His Birthday ! 

அடை தோசையும் நானும்!

முழு நிலவு அம்மாவிற்கு மட்டுமே
பிஞ்சு போன பிறை நிலவு,
ஏன் எனக்கு மட்டும்??

ஆதலால் அனுமதி தாருங்கள் . . !

கவிதைகளில் மட்டுமாவது
சிந்துகிறேன் என் கண்ணீரை,
துடைக்க விரல்கள் ஏதும் இல்லை,
ஆதலால் அனுமதி தாருங்கள் . .

வாழையடி வாழையாய்,
கவிஞர்களின் வரிகளிளேனும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள்
முதிர் கன்னியவள்  . . .

கூடுகளோடு மரங்களை தேடி
அலையும் என் போன்ற
ஆண் பறவைகள்,
சிறகொடிக்கபடுங்கின்றன. . .

முதிர் காளைகள் என  எங்களுக்கும்
 வைக்கலாமே ஓர் முத்திரையை,
கிழிக்குமே அது அடாவடி என
புகழப்படும் எங்கள் முகத்திரையை . . .

பேரழகியை தான்
தேடுகிறேன் நான்,
தாயாக சேயாக,
என் தாரமாக, எனக்காக . . !

பெண்ணிற்கு பேரழகு 
மதிப்பதில் பங்கதிகம்,
சிந்தும் வெட்கத்தில்
இன்னும் கொஞ்சம் . .!

நளினமும் நாணமும்
மென்மையும் மேன்மையும்
அளவான கலவையில்,
பண்பை பறை சாற்றும். . .

பெண்னொருத்தி இருக்கின்றாலெனில்
எனை ஆளும் உரிமை மட்டுமல்ல
நேசத்தோடு சுவாசமும் தருவேன்,
என் அவள் ஜீவிப்பதர்க்கு . . . !

பாரதியே,
நீ கண்ட புதுமை பெண்களில்
என்றேனும் கண்டாயோ,
நான் தேடும் பேரழகியை . . ?

என் விழி சிந்தும் நீர்
கரை புரண்டே வழிந்தோடும்,
ஆங்காங்கே பெற்றோரின்
கண்ணீர் கால்வாயாய் சேர்ந்தோடும் . . !
 
கவிதைகளில் மட்டுமாவது
சிந்துகிறேன் என் கண்ணீரை,
துடைக்க விரல்கள் ஏதும் இல்லை,
ஆதலால் அனுமதி தாருங்கள் . . !

மனமே, உன் கதவின் தாழ் திறவாய். . .

காதல் அதில் பிரிந்தால்
பிரிந்தவளுக்கு ஒரு வலி இல்லை , 
பிரிந்தவளுக்கு ஒவ்வொன்றுமே வலி தான் . . .

நேற்று வரை என் அவன் இப்படி இல்லையே,
இன்றோ அவன் அப்படி இல்லை
மாற்றம் நேர்ந்தது அவனிடமா 
இல்லை என்னிடமா?
என் பார்வையிடமா?

இரு மனமாய் இருந்த வரை 
இது இல்லையே 
திருமண முதல் நாளில்
காதல் இல்லையே !

காதலெனில் அது 
கல்யாணத்தில் முடியுமென 
கேள்வி கொண்டேன்.
ஆனால் காதலே 
கல்யாணத்தின் பின் 
முடிந்து போகும் என கற்றும் கொண்டேன் !

வலிகளை விழிகள் சுமக்கத் தவறி
அணை கொண்ட இமைகள் உடைந்து போக,
கொட்டும் அருவியில் உலகம் தடுமாற
முடிவெடுத்தேன் அவனை கடந்து போக!

என்னுள் விதை கொண்ட அவனது உயிர்,
அவன் விதைத்த காதலை தர,
அவன் காதலை நினைத்து கரையும் தருணம்,
மனமே, உன் கதவின் தாழ் திறவாய். . .