வியாழன், 26 நவம்பர், 2015

பௌர்ணமி கவிதைகள்,

உன் உதடிலிருந்து கசிந்த ஒரு துளி பால் - நீ 
பிள்ளையாய் இருந்த சமயம் - உன் உதடிலிருந்து 
கசிந்த ஒரு துளி பால் - உன் 
அன்னை புகட்டிய ஒரு துளி பால் - வழிந்து 
விண்வெளியில் மோக்‌ஷமடைந்ததோ - 
பௌர்ணமி நிலவாய் ?
நீ என் பிள்ளை நிலா!

பௌர்ணமி கவிதைகள்-016

என் கண்ணீரில் கரைந்து அமாவாசை ஆன நிலவு, 
இன்று நீ கற்பித்த நேசத்தால் 
விண்ணில் ஆடும் வானின் மீதே!
நீ பௌர்ணமி!

‎பௌர்ணமி கவிதைகள்‬

இரவின் வானத்தை 
கோப்பையினில் நிரப்பி,
உன் நெஞ்சமெனும் பூமியில்
என் உயிரெனும் வேர் பதித்து,
நிலவின் ஒளிகொண்டு ,
உன் விழிதனில் தெரியும்
விண்மீன் கூட்டத்தை ,
என் நினைவிலிருத்தி ,
சுகித்திட ஆசை தான் . . .
நீ பௌர்ணமி . . !