வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

கவிஞர்கள் தினத்திற்காக என் படைப்பு . . !

அநாதை குழந்தையாய் என் உள்ளம்,
உனக்கென ஏங்குகிறது . . !
வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சியாய் 
உன்னை காண தவிக்கிறது கண்கள் . . !
நான் உன்னை பிரியாவிடிலும் 
நீ என் அருகினில் இல்லை . . !
நீ காற்றாய் கலந்திருக்கிறாய் ,
உன்னை சுவாசித்தே வாழ்கிறோம் யாம் . . !
உறவாய் நீ இல்லாது பயணிப்பது  ,
குருடனை நிறம் கேட்டறிவது போல் உள்ளது . . !
இருந்தும் பயணிக்கிறேன் ,
நீ விட்டு சென்ற தடயங்களை தேடி,
என் விழிகளில் உன் ஒளி கொண்டு ,
தொடர்கிறேன் உனக்காகவே . . !
என்றாவது ஓர் நாள் ,
நாதமாய்,
பிம்பமாய்,
ரீங்காரமாய் ,
ஒளியாய்,
ஒலியாய்,
மழையாய்,
என் மழலையாய் ,
நீ வருவாயென - மீண்டும் 
நீ வருவாய் - ஒளியேற்றுவாய் 
இருட்டண்டாது - என் வாழ்வினில் 
ஒளியேற்றுவாய் என . . . ! 

ஒளி எனும் தலைப்பினில் இந்த வருடம் கொண்டாடப்படும் கவிஞர்கள் தினத்திற்காக என் படைப்பு . . !

சமர்ப்பணம் : என் உயிராய், மழலையாய், தமயனாய், தந்தையாய், தோழனாய் இருந்த, இருக்கும் என் ராஜ் கைலாஷ் மோகனிற்கு