செவ்வாய், 21 மார்ச், 2017

பயணம்

விடியலை தேடி நகரும் பூமி ,
சுவாசத்தை தேடி அலையும் இலைகள்,
புற்கள் நிறைந்த வனங்கள் ,
இலையுதிர்ந்த மரங்கள் ,
பனி படர்ந்த புல்வெளிகள்,
மழை தாங்கிய கார்மேகங்கள் ,
வானும் பூமியும் வெண்மை படர,
அவ்வபோது பஞ்சவர்ணங்கள் தெறிக்க,
முடிவற்ற நீண்ட பாதையில் ,
சொற்களை தேடியும் ,
கனவுகளை சுமந்தும் ,
கவிதைகள் வடித்தும் ,
கேளிக்கையை சகித்தும் ,
பேனாக்காரியாய்
நீண்டதூர பயணம் . . .!

உலக கவிதைகள் தினம் படைப்பு - 2017