வியாழன், 30 மே, 2013

பகலும் இரவும்

பகலும் இரவும் 
காதல் கொண்டணவாம்.
பகலோ மாலை வரை எதிர் 
பார்த்து இரவினில் ஒளிய 
இரவோ காலை வரை 
காத்திருந்து பகலினில் மறைய,
காணாத காதல் காவியமாய் 
இன்றும் இருவரும் !

புதன், 15 மே, 2013

சட்டினியும் பத்தினி

என் மனைவி அரைத்த
சட்டினியும் பத்தினிதான்
என்னை தவிர
யாரும் தொட முடியாது !

நிழல் !

அடடே சூரியனும் ஓவியனா?
உன்னை காரிருள்
ஓவியமாய் வரைகிரானே!

மூச்சு

அதீதமாய் சுவாசிக்கிறேன்
நீ அருகிலிருக்கும் பொழுது -
உன் மூச்சு காற்றில் கலந்திருப்பதால் .

காயம்

நீ தரும் மருந்திற்கு ஆசைப்பட்டு 
காயப்பட்டு கொள்கிறேன் -
அம்மாவின் முத்தம் .


அழகு

உன்னை பற்றியதென்றாலும்
உன் போல் அழகில்லையே
என் கவிதைகள் !

மௌன விரதம்

உதடுகளோடு 
இமைகளையும்  மூடிகொள்
விழிகளும் பேசுகின்றனவே !

மறை

மறைந்த உடல்,
மறையாத புகழ் -
விண்வெளி வீராங்கனை !

மண்

என் கல்லறையும் நீயே 
நான் இட்ட விதைக்கு 
கருவறையும் நீயே !

நீர் வீழ்ச்சி

நிலத்தின் எழுச்சி
நீரின் வீழ்ச்சி
அழகு தான் !

கண்ணீர்

வன்னங்களின்றி
கன்னங்களில்
விழிகளின் ஓவியம் !