வெள்ளி, 28 ஜூலை, 2017

பௌர்ணமி கவிதைகள்

நிலவை போல் நம் உறவு,
தேய்ந்தும் தோன்றியும், 
முழு இருட்டும் 
கடன்வாங்கிய வெளிச்சமுமாய்! 
குடும்பம் எனும் வானில்,
கண்கட்டி விளையாடும்
கடனாளி நிலவாய் . . ! 

பௌர்ணமி கவிதைகள்

என் கனவுகளில் தேய தொடங்கி
உன் முழு ஒளியில்
நான் கண் விழித்தேன்!
நீ என் பௌர்ணமி . . !

பௌர்ணமி கவிதைகள்

ப்ரகாசமாய் மிதந்தாலும்
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
மத்தியில்,
கதியற்ற ஒற்றை நிலவாய்
கருநீல இருள் வானில்
தனி வெள்ளை தட்டாய்
சொல்லொன்னா சோகமேந்தி
பௌர்ணமி நிலவு . . !

பௌர்ணமிகவிதைகள்

நிலவும் தாயே
தான் தேய்ந்தாலும்
பேனாக்கள் வழி
பிரசவிக்கிராள் கவிதையாக . . !
நீ பௌர்ணமி