வியாழன், 23 ஜூன், 2011

விசித்திரமானதாய்...


ஒரு வேலை... நான்..

உன் காதலை புறக்கணித்து விட்டு

உன்னையே எனக்கு ஒரு வரன் பார்த்து

முடிவு செய்ய சொல்லி இருந்தால் ...

என்ன செய்திருப்பாய்..?

எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை...?

இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !

காதலுக்காக மட்டுமே

கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை

காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய் ...

சரி விடு .. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?

இதுவும் நம் காதலுக்கு (.. மன்னிக்கவும்..)...

இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !

வரங்கள்...


என்  சகாவே,
என்னை ஒதுக்குவோர் மத்தியில்,
தெரியாமல் செய்த செயல் என என் தவறுகளால் 
நீ மட்டும் என் நண்பனாய்...
நான் வாங்கி வந்த வரம் நீ தானோ? 

நனைத்தது நீ தான் ...!


கொட்டும் மழையிலும்,
இன்றொரு நாள், 
நீ என்னை கடைதெருவில் காண்கையில்,
அதே உரிமையுடன்,
"நீங்கள் செல்லுங்கள்!
நான் பத்திரமாய் வீடு வருவேன் "
என்றாயே உன் கணவனிடம்,
என் தோளில் சாய்ந்தபடியே..!
என் சகியே, 
மழை என்னை நனைக்கவில்லை.............