ஞாயிறு, 29 மார்ச், 2015

எம்மக்கள் யார் . ?

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் கொள்வோம் உறுதியை
வீழ்ந்த சிங்கங்களின் மரணம் சொல்லும் செய்தியை
என்றும் கொள்வோம் எங்கள் செங்குருதியில்..
நாங்கள் தமிழர்கள் என.....

உயர உயர அலை வீசிஎழும் பிரதேசம்
எங்கள் உணர்வலைகளை தாங்கிய தேசம்
தமிழ்  மட்டுமே எங்கள் முதல் சுவாசம்
அதனால் கொண்டனர் எம்மேல் த்வேஷம் !

உணவில்லை அதை உணரவில்லை
மனம் இல்லை வேறு வழி தேடவில்லை.
ஆனாலும் கொண்டுள்ளோம் உறுதியை
எங்கள் தாய் மண்ணிற்காக சிந்துவோம் குருதியை!


எம் மக்கள் உருகுகின்றனர் எம் மக்கள் அழுகின்றனர்
அலைகளின் ஓசையை விட அலறலின் ஓசை அதீதமாய்
ஒரே நாள் உயிர்தெழுந்த ஏசு கடவுலேனில்
ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழும் எம் மக்கள் யார்?






சனி, 21 மார்ச், 2015

பௌர்ணமி கவிதைகள்

வானம் வறண்டதாய் இருக்கையில் ,
எங்கிருந்து வருவாள் கவிக்குயில் ?
நிழலாகி சென்ற நிலவு,
நிஜமாய் திரும்பும் வரை !
என் எழுத்து புதையுண்டு கிடக்கிறது
நிலவின் தேகத்தினுள்ளே . . !

திங்கள், 16 மார்ச், 2015

சிந்து வெளியும் இந்து தர்மமும்

சிந்து வெளி யின் கலாச்சாரத்தையும்
இந்து தர்மத்தின் ஆச்சாரத்தையும்
கொண்ட நாம் - எப்படி மறந்தோம் ,
ஈழம் என்றொரு இனமுண்டு
தமிழ் என்றொரு மொழியுண்டு
இப்புவிதனிலே அன்றி
வேறொரு கிரகதினில் அல்லவென்று ! !



வியாழன், 5 மார்ச், 2015

பௌர்ணமி கவிதைகள்

நாள் கடக்கையில் 
நூலாகி , நிழலாகி,
ஒளியும் நிலவிற்கு தான் 
காதலர்கள் ஆயிரம் - என்றோ ஓர் நாள்
 நிழல் நிஜமாகக்கூடும் 
பிறை பெளர்ணமியாகும் 
என்ற நம்பிக்கையில் . . !

பௌர்ணமி கவிதைகள்

பௌர்ணமி நிலவும்
என் தோலினை சுடுகிறது
என்று நீ பௌர்ணமி என்றாயோ . . !

ஹைக்கூ

என் கண்களிடமா 
உன் இருப்பிடமா 
குறை எங்கு கடவுளே...?

வாக்கு

நெருப்பு என்றால் தீயாய் 
சுடுவதில்லை நாக்கு - பின் ஏன்
சருகாக்கிறது வாழ்வை
பலரின் பொய் வாக்கு ...?

பௌர்ணமி கவிதைகள் #10

பிறைகளும் நட்சத்திரங்களும்
இருந்தென்ன பயன் - கருநீல 
வானில் கதியற்ற "ஒற்றை" 
நிழலான நிலவு !