ஞாயிறு, 29 மார்ச், 2015

எம்மக்கள் யார் . ?

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் கொள்வோம் உறுதியை
வீழ்ந்த சிங்கங்களின் மரணம் சொல்லும் செய்தியை
என்றும் கொள்வோம் எங்கள் செங்குருதியில்..
நாங்கள் தமிழர்கள் என.....

உயர உயர அலை வீசிஎழும் பிரதேசம்
எங்கள் உணர்வலைகளை தாங்கிய தேசம்
தமிழ்  மட்டுமே எங்கள் முதல் சுவாசம்
அதனால் கொண்டனர் எம்மேல் த்வேஷம் !

உணவில்லை அதை உணரவில்லை
மனம் இல்லை வேறு வழி தேடவில்லை.
ஆனாலும் கொண்டுள்ளோம் உறுதியை
எங்கள் தாய் மண்ணிற்காக சிந்துவோம் குருதியை!


எம் மக்கள் உருகுகின்றனர் எம் மக்கள் அழுகின்றனர்
அலைகளின் ஓசையை விட அலறலின் ஓசை அதீதமாய்
ஒரே நாள் உயிர்தெழுந்த ஏசு கடவுலேனில்
ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழும் எம் மக்கள் யார்?






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக