நம்மை காக்க விடைபெற்ற வீரர்களுக்கு
விருந்தோம்பல் நிகழ்ச்சி வேண்டியதில்லை.
ஊடகங்கள் உதடுவழி இவர்கள்
உமிழ படவில்லை - நல்லது தான்.
என்றேனும் இவர்களின் நினைவு
நம்முள் இருக்குமோ - சந்தேகம் தான்!
இருப்பினும் காக்கின்றனர் ,
நீரும் நானும் யாரென்றே யறியாத
போதிலும் உயிரையே தருகிறார்கள் - அவளோ,
தன் உயிரை தந்து உயிரோடு கலங்குகிறாள்!
கணவனேனும் பந்தத்தில் களவு
போன தன கொலுசொலி தேட முடியாது
மௌனமாய் அமைகிறாள் !
ஊடகங்கள் உதடுவழி இவர்கள்
உமிழ படவில்லை - நல்லது தான்.
ஆனால் நீயும் நானும் ஏன் கதைப்பதில்லை
இராணுவம் எனும் கடமையே
ந்தியகண்ணியவான்களை பற்றி ?
சரித்திரத்தில் பெயர்சொல்ல
யாரே உள்ளார் - நீயும் நானும் அன்றி ?
இந்தியத்துவம் தொலைத்த
மனித விகாராமாய் வேண்டாம்
நீயும் நானும் - நாட்டினை மதிப்பது
நமது பெருமையே . . .
குடியரசு தின வாழ்த்துக்கள் !