செவ்வாய், 26 ஜனவரி, 2016

நகையொளி தொலைத்த அவளுக்கு . . .

நம்மை காக்க விடைபெற்ற வீரர்களுக்கு 
விருந்தோம்பல் நிகழ்ச்சி வேண்டியதில்லை.
ஊடகங்கள் உதடுவழி இவர்கள் 
உமிழ படவில்லை - நல்லது தான்.
என்றேனும் இவர்களின் நினைவு 
நம்முள் இருக்குமோ - சந்தேகம் தான்!
இருப்பினும் காக்கின்றனர் ,
நீரும் நானும் யாரென்றே யறியாத 
போதிலும் உயிரையே தருகிறார்கள் - அவளோ,
தன் உயிரை தந்து உயிரோடு கலங்குகிறாள்!
கணவனேனும் பந்தத்தில் களவு 
போன தன கொலுசொலி தேட முடியாது 
மௌனமாய் அமைகிறாள் !
ஊடகங்கள் உதடுவழி இவர்கள் 
உமிழ படவில்லை - நல்லது தான்.
ஆனால் நீயும் நானும் ஏன் கதைப்பதில்லை 
இராணுவம் எனும் கடமையே 
ந்தியகண்ணியவான்களை பற்றி ?
சரித்திரத்தில்   பெயர்சொல்ல  
 யாரே   உள்ளார் - நீயும் நானும் அன்றி ?
இந்தியத்துவம் தொலைத்த 
மனித விகாராமாய் வேண்டாம் 
நீயும் நானும் - நாட்டினை மதிப்பது 
நமது பெருமையே . . .
குடியரசு தின வாழ்த்துக்கள் !

அவன் . . . !

குளிர்ந்த நீர் தேக்கத்தில்
அவன் முகம் - தன் 
தாகம் தணிக்க நீர் அள்ளினால்,
கலையும் நீர் சுமந்த கரு . . 
வேண்டாம் ,
அவன் முகம் கண்டே
தாகத்தோடு நிற்கட்டும்
அவர்கள்....!

பௌர்ணமிகவிதைகள்‬

தரை வழி நீயும் நானும்,
தொலை தூரத்தில் ஆனாலும்,
விழி வழி ஒரே இடத்தில் தான்!
விழி புகுந்து ,
உயிரினில் தொய்ந்து,
நம்மை இணைக்கும் பாலமாய்,
நிலவின் ஒளி.
நீ பௌர்ணமி…!
‪‎