தொலைந்த அன்பை
தேடி தரும் வரவு,!
உன்னை போல் ஆனா
தொப்புள் கோடி உறவு,!
நிலவொளியில்
நாம் சுகித்த தருணங்களில்,
நீ விட்டு சென்ற
மற்றொரு தடயம்..
அதனால் தானேன்னவோ
என் வாழ்வினில் ஓர் உதயம்...???
உன்னால் ஏற்பட்ட தாகத்தின்
விளைவுகள்,,,
இரவிகளில் என் கனவுகளாய்....
நீ ஓர் நினைப்பினில்.,
நான் ஓர் நினைப்பினில்...!
சேரா செவ்வானமாய்...!!!
எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 30 செப்டம்பர், 2010
கஷ்டமா.. இஷ்டமா??
என்னவனே...
புரிதலில் உண்டு பிரியம்!
எடுத்து உறைத்திரிந்தால்
உணர்ந்து நீங்கி இ(ற)ருந்திருப்பேன் ...
இப்போதோ..,
உரிமை விரிய வேண்டிய தருணத்தில்
உறவு "விரிந்து விட்டது"..!
என்னை புரிந்து கொண்ட பின்னும்
நீ பொய் உறைத்திருக்கிறாய்...
பகிர்தல் அவ்வளவு கஷ்டமா?
இல்லை,
என்னை ஏமாற்றுவது உனக்கு இஷ்டமா...?
புரிதலில் உண்டு பிரியம்!
எடுத்து உறைத்திரிந்தால்
உணர்ந்து நீங்கி இ(ற)ருந்திருப்பேன் ...
இப்போதோ..,
உரிமை விரிய வேண்டிய தருணத்தில்
உறவு "விரிந்து விட்டது"..!
என்னை புரிந்து கொண்ட பின்னும்
நீ பொய் உறைத்திருக்கிறாய்...
பகிர்தல் அவ்வளவு கஷ்டமா?
இல்லை,
என்னை ஏமாற்றுவது உனக்கு இஷ்டமா...?
வியாழன், 23 செப்டம்பர், 2010
ஓர் தமிழச்சியின் குரல்..
உயிருடன் இருந்தும்
உறங்குகின்றனர்
சவக்குழிகளில்...
கொடை வள்ளலாம்
பாரத பூமி;
குண்டு மழைகளுக்கு
குடை கொடுக்க வக்கில்லை..
உலக வரைபடத்தின்
பௌத்த நாடு,
இன்றோ யுத்த நாடாய்...
அலைகளின் ஓசையை காட்டிலும்
அலறலின் ஓசையே அதீதமாய்....
செவிடாய் கிடக்கும்
உலக நாடுகளும்,
ஐ நா சபை கூடங்களும்...
மடல் சாய்க்க
மனதில்லையா??
மனிதாபி"மானமே" இல்லையா??
எனது ஈழ சகோதரர்களின்
இழிவு நிலை அதனை
இல்லாது செய்வது அரிதோ??
~ ~ ~ இவள் ,
ஓர் தமிழச்சி...
.
உறங்குகின்றனர்
சவக்குழிகளில்...
கொடை வள்ளலாம்
பாரத பூமி;
குண்டு மழைகளுக்கு
குடை கொடுக்க வக்கில்லை..
உலக வரைபடத்தின்
பௌத்த நாடு,
இன்றோ யுத்த நாடாய்...
அலைகளின் ஓசையை காட்டிலும்
அலறலின் ஓசையே அதீதமாய்....
செவிடாய் கிடக்கும்
உலக நாடுகளும்,
ஐ நா சபை கூடங்களும்...
மடல் சாய்க்க
மனதில்லையா??
மனிதாபி"மானமே" இல்லையா??
எனது ஈழ சகோதரர்களின்
இழிவு நிலை அதனை
இல்லாது செய்வது அரிதோ??
~ ~ ~ இவள் ,
ஓர் தமிழச்சி...
.
வியாழன், 16 செப்டம்பர், 2010
தவமின்றி வரமோ...
உன் கரங்களில்சிறையுண்டு கிடக்கவே
எதனை நாட்கள் தவம் கிட்டப்பது..?
காத்திருந்து காத்திருந்து
என்னை நான் மறந்திட
கண்ணீருக்கும்
இங்கு வலிக்கின்றதே ..
உணர்வுகள் உயிரிழந்திட,
உயிரற்று போனது உடல்...
என்று சேர்வாய் என்னுள்...??
தவமின்றி வரமோ...
எதனை நாட்கள் தவம் கிட்டப்பது..?
காத்திருந்து காத்திருந்து
என்னை நான் மறந்திட
கண்ணீருக்கும்
இங்கு வலிக்கின்றதே ..
உணர்வுகள் உயிரிழந்திட,
உயிரற்று போனது உடல்...
என்று சேர்வாய் என்னுள்...??
தவமின்றி வரமோ...
விழிகளில் விழுந்தேனோ..?
ஆழியினும் ஆழமான
உன் மௌனத்தை
எனக்க்கு என்றும் விளம்புகிறது
உன் விழிகள்..!
அதனால் தான் என்னவோ..,
தவறுகள் செய்தால்,
கண் நோக்கி பேச முடிவதில்லை என்னால்..!
முதற்கனவா பகற்கனவா?
அருகினில் மழை சாரலின் குளுமையாய்,
உந்தன் அணைப்பினில் கிறங்கினேன்..
மூளை சிலிர்த்து உசுப்பியது..
இது வெறும் பகற்கனவென..!
காதலனா கணவனா ?
திருமணத்தின் பின்பு ,
நமது கர்வ பசிக்கு
தீனி ஆகிவிடுமோ காதல்?
வேண்டாம்.,
நாம் காதலர்களாகவே வாழ்ந்திடுவோம்..
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
எனதினிய மேன்மக்களுக்கு..
வாழ்வெல்லாம் வெற்றி காணும்
வகைகளை எல்லோருக்கும்
ஆழ் மன அன்பையும்
அரிதான அறிவையுங்க்கூட்டி
அன்றாடம் புகட்டுகின்றனர்,
எம்-மேன்மக்கள்.!
அன்பு நெறி பண்புடனே
அறநெறியும் அறிந்துகொண்டு
நல்லநிலை எய்துவதற்கு
ஏணியாய் உதவுகின்றனர்
எழிலார்ந்த ஆசிரியர்கள்..!
சத்தான கருத்துக்களை
முத்தான முழுஅறிவு - அதனையும்
முழு நிலா வெளிச்சமாய்,
கால் முளைத்த நற்கனவுகளுக்கு
வெற்றியின் வழி காட்டி
நிர்மல்யமாகவே தொடக்கத்தில் நின்று
நிறை நெஞ்சுடனே வாழ்த்தும்
எமதினிய ஆசிரிய உள்ளமே...
வாழ்த்த வயதில்லை உம்மை,
வணங்குகிறேன் சிரம் தாழ்த்தி.....
இனிய ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)