வாழ்வெல்லாம் வெற்றி காணும்
வகைகளை எல்லோருக்கும்
ஆழ் மன அன்பையும்
அரிதான அறிவையுங்க்கூட்டி
அன்றாடம் புகட்டுகின்றனர்,
எம்-மேன்மக்கள்.!
அன்பு நெறி பண்புடனே
அறநெறியும் அறிந்துகொண்டு
நல்லநிலை எய்துவதற்கு
ஏணியாய் உதவுகின்றனர்
எழிலார்ந்த ஆசிரியர்கள்..!
சத்தான கருத்துக்களை
முத்தான முழுஅறிவு - அதனையும்
முழு நிலா வெளிச்சமாய்,
கால் முளைத்த நற்கனவுகளுக்கு
வெற்றியின் வழி காட்டி
நிர்மல்யமாகவே தொடக்கத்தில் நின்று
நிறை நெஞ்சுடனே வாழ்த்தும்
எமதினிய ஆசிரிய உள்ளமே...
வாழ்த்த வயதில்லை உம்மை,
வணங்குகிறேன் சிரம் தாழ்த்தி.....
இனிய ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக