வியாழன், 12 செப்டம்பர், 2013

என் கல்லூரி தாயை, நினைத்தாலே இனிக்கும் . .

கல்லூரி காலத்தில்,
முகம் காணா ஆருயிர் நட்புக்கள்,
உழைத்து ஓய்வு பெரும் தருணத்திலும்,
ஆயிரம் யானை பலம் கூடுது 
என் கல்லூரி அன்னையே,
உன் மடியில் திரிந்த நாட்கள் எண்ணுகையில்!

வினாடிநேரத்தில் விட்டு செல்லா 
நேசமிகு நண்பர்களின் கூட்டம்
எமக்களித்த தேவதையே,
ஆண்டுகள் ஆறாகினும் ,
அனுபிசகாது நீடிக்கும்,
அழகு பந்தமாய்,
ஆத்மார்த்த நண்பர்கள்,
அன்பின் இலக்கணமாய்,
அறிவார்ந்த ஆசிரியர்கள்!

நன்றி மலர்களை
நாவினிக்க துவுகிறேன்,
உன் வளர்ச்சியை மேலும் காணவே . . !

ஒரே பிரசவத்தில், எண்ணற்ற குழந்தைகளை தந்த என் கல்லூரி தாயை, நினைத்தாலே இனிக்கும் . . 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இசையெனும்
நந்தனவன தேரின்
பூஞ்சோலையானவளே!
இசைக்குயிலாய்
இன்பம் கொடுப்பவளே!
ஈகை கொண்டு இசை கேட்க,
எல்லோருள்ளும் இசைவார்க்கும்,
இசையின் இன்பசுடரே!

வாழ்வதன் பயன்,
நான் அல்ல நாம் வாழ,
இசையினால்,
நீர் மட்டுமின்றி,
யாமும் இன்புற,
அமுதும் கானமுமாய்,
பாட்டிசைக்கும்,
கானக்குயிலே!

இன்னுமொரு ஆண்டு
உமக்காய் - இல்லை
எம் போன்ற உமது ரசிகர்களுக்காய்,
இனிதே மலர்ந்திருக்க,
பண்பாய் அன்பாய்,
புதியதாய் பெரிதாய்,
நீர் விண்ணுயர ,
வேண்டுகிறோம் முழுமனதாய்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Raihanah Shekar Mam!
 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இசையெனும்
நந்தனவன தேரின்
பூஞ்சோலையானவளே!
இசைக்குயிலாய்
இன்பம் கொடுப்பவளே!
ஈகை கொண்டு இசை கேட்க,
எல்லோருள்ளும் இசைவார்க்கும்,
இசையின் இன்பசுடரே!

வாழ்வதன் பயன்,
நான் அல்ல நாம் வாழ,
இசையினால்,
நீர் மட்டுமின்றி,
யாமும் இன்புற,
அமுதும் கானமுமாய்,
பாட்டிசைக்கும்,
கானக்குயிலே!

இன்னுமொரு ஆண்டு
உமக்காய் - இல்லை
எம் போன்ற உமது ரசிகர்களுக்காய்,
இனிதே மலர்ந்திருக்க,
பண்பாய் அன்பாய்,
புதியதாய் பெரிதாய்,
நீர் விண்ணுயர ,
வேண்டுகிறோம் முழுமனதாய்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Raihanah Shekar Mam!
 

பிரியா பிரியத்துடன்

நீ இல்லாது நீளமாய் என் நொடிகள்,
ஹ்ருதயத்தில் கனீர் வெடிகள்!
சுற்றிவரும் கடிகாரமுள் போல்,
நீ ஆன்லைன்வரும் நொடிக்காய்,
சுழலும் என் கரு விழிகள்!
பிரிந்திருந்தாலும்,
பரிவுடன் எங்கும்
உன் மனம் எண்ணுகையிலே,
கண்கள் கரிக்கும் கண்ணீரும்,
கசக்கவில்லையடி!
உன்னை காணும் நொடிக்கென,
காத்திருக்கிறேன் சகோதரி! 

புதன், 4 செப்டம்பர், 2013

உங்கள் ஆசிகளுக்காக ஆசைகளோடு . . !

சிலையும் சிதையாமல்,
கல்லும் அதிராமல்,
பளிங்காய் செதுக்கினீர் . !

ஆயிரமாயிரம் மக்கள்,
ஒன்றான நோக்கமாய்,
என் மாணாக்கர் இவர் .  !

தண்டனை எமக்கு,
வேதனை உமக்கு,
தாயுள்ளம் கொண்டனர் நீர் . . !

 நாங்கள் மின்ன,
வெண்முத்துக்களாய்,
முத்துகுளித்தீர் நீர் . . !

காய் தொங்கும் கொடியாய்
சேய்  தாங்கும் தாயாய்,
தயாள உள்ளம் கொண்டவர் நீர். . !

உமது உழைப்பின் முடியலில்,
வியர்வை குளியலில்,
மனிதர்களாய் நாங்கள் . . !

எமது வெற்றிப்பாதையில்,
உமது கை சுவடுகளே ஏராளம்,
எனது பாதங்களை பாதுகாத்ததால் . . !

இறை பணியில் இனிதாய் தம்மை அற்பணித்த அனைத்து ஆசிரிய நல்லுள்ளங்களுக்கு எனதினிய ஆசிரியர்தின வாழ்த்துகள் ! ! !

உங்கள் ஆசிகளுக்காக,
ஆசைகளோடு,