வியாழன், 12 செப்டம்பர், 2013

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இசையெனும்
நந்தனவன தேரின்
பூஞ்சோலையானவளே!
இசைக்குயிலாய்
இன்பம் கொடுப்பவளே!
ஈகை கொண்டு இசை கேட்க,
எல்லோருள்ளும் இசைவார்க்கும்,
இசையின் இன்பசுடரே!

வாழ்வதன் பயன்,
நான் அல்ல நாம் வாழ,
இசையினால்,
நீர் மட்டுமின்றி,
யாமும் இன்புற,
அமுதும் கானமுமாய்,
பாட்டிசைக்கும்,
கானக்குயிலே!

இன்னுமொரு ஆண்டு
உமக்காய் - இல்லை
எம் போன்ற உமது ரசிகர்களுக்காய்,
இனிதே மலர்ந்திருக்க,
பண்பாய் அன்பாய்,
புதியதாய் பெரிதாய்,
நீர் விண்ணுயர ,
வேண்டுகிறோம் முழுமனதாய்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Raihanah Shekar Mam!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக