வியாழன், 12 செப்டம்பர், 2013

என் கல்லூரி தாயை, நினைத்தாலே இனிக்கும் . .

கல்லூரி காலத்தில்,
முகம் காணா ஆருயிர் நட்புக்கள்,
உழைத்து ஓய்வு பெரும் தருணத்திலும்,
ஆயிரம் யானை பலம் கூடுது 
என் கல்லூரி அன்னையே,
உன் மடியில் திரிந்த நாட்கள் எண்ணுகையில்!

வினாடிநேரத்தில் விட்டு செல்லா 
நேசமிகு நண்பர்களின் கூட்டம்
எமக்களித்த தேவதையே,
ஆண்டுகள் ஆறாகினும் ,
அனுபிசகாது நீடிக்கும்,
அழகு பந்தமாய்,
ஆத்மார்த்த நண்பர்கள்,
அன்பின் இலக்கணமாய்,
அறிவார்ந்த ஆசிரியர்கள்!

நன்றி மலர்களை
நாவினிக்க துவுகிறேன்,
உன் வளர்ச்சியை மேலும் காணவே . . !

ஒரே பிரசவத்தில், எண்ணற்ற குழந்தைகளை தந்த என் கல்லூரி தாயை, நினைத்தாலே இனிக்கும் . . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக