எழுதிடவேண்டும் எதையாவது,
மனதையா அறிவையா?
மனம் கனக்கிறது,
அறிவு கண்டிக்கிறது!
தேசத்தின் புற்றாய்
வளர்ந்து செழிக்கும் ஊழலை
தேசபற்றோடு
அழிக்கும் காலம் எங்கு உள்ளது?
நெஞ்சின் குழியில்
அடைந்து புதையுண்ட
உணர்வுகள் பாரமாய் கொள்கிறது
உயிர் வலி கொடுக்கின்றது !
மதியிடம் மனமோ கேட்கிறது,
"எழுத்தில் மட்டுமே இருக்கிறது
உனக்கும் வீராப்பு - ஒளிகிறாய் தானே
வேண்டாம் பொல்லாப்பு (என்று)"
வெட்கத்தில்
கண்ணீர் சிந்திய என் பேனா
காகித காதலியின் மேலிருந்து
தன் உயிரை மாய்துகொன்டது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக