திங்கள், 6 அக்டோபர், 2014

என் பேனா உயிரை மாய்துகொன்டது !

எழுதிடவேண்டும் எதையாவது,
மனதையா அறிவையா?
மனம் கனக்கிறது,
அறிவு கண்டிக்கிறது!

தேசத்தின் புற்றாய் 
வளர்ந்து செழிக்கும் ஊழலை 
தேசபற்றோடு 
அழிக்கும் காலம் எங்கு உள்ளது?

நெஞ்சின் குழியில் 
அடைந்து புதையுண்ட 
உணர்வுகள் பாரமாய் கொள்கிறது 
உயிர் வலி கொடுக்கின்றது !

மதியிடம் மனமோ கேட்கிறது,
"எழுத்தில் மட்டுமே இருக்கிறது 
உனக்கும் வீராப்பு - ஒளிகிறாய் தானே 
வேண்டாம் பொல்லாப்பு (என்று)"

வெட்கத்தில் 
கண்ணீர் சிந்திய என் பேனா 
காகித காதலியின் மேலிருந்து 
தன் உயிரை மாய்துகொன்டது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக