அனைவரும் உறங்கிடும் நேரம்
தலையணை தகித்திடும் ஈரம்
உன் விரல் தந்த மாயத்தால்
உறக்கம் எனக்கு பரிச்சியம்!
தெற்கும் வடக்கும் கூடாதென்று
கிழக்கும் மேற்கும் காணாதென்று
கூறியோரின் வாக்கை பொய்யாக்கி
காவியம் படைத்தன உன் விரல்கள்!
வாக் தேவி வெறுத்தாள்
தான் கொண்ட வீணையை,
உன் விரல் விளையாடிக்கொண்டிருந்த
Mandolin கண்டு!
அரை மணி பிரார்த்தனை
ஒவ்வொரு கச்சேரிக்கும் முன்பு;
மனிதனே, உமது ஒவ்வொரு கச்சேரியுமே
கடவுளை உணரும் வழிதான் எமக்கு!
மௌனத்தில் புதையுண்டு
வேதனை நம்முள் விதைத்து
மீளா துயர் ஒன்றை தந்து
மாண்டது Mandolin !
தந்திகள் மீட்டிய விரல்களுக்கு
நரம்பறுந்த உணர்வோடு
வலி"மை" இட்டு வரைகிறேன்
கானாஞ்சலியாய் ஓர் கவிதாஞ்சலியை!
இவள்,
நீ விட்டுசென்ற
இசையின் அடிமை !
எழுத்தில் இதை வடிக்கும் பொழுது கண்ணீர் வடித்தது என் பேனா!
துர்பாக்யவதி என் பேனா, தன் இரு நூறாவது எழுத்தினை அஞ்சலியாய் பதிந்ததற்கு!
தலையணை தகித்திடும் ஈரம்
உன் விரல் தந்த மாயத்தால்
உறக்கம் எனக்கு பரிச்சியம்!
தெற்கும் வடக்கும் கூடாதென்று
கிழக்கும் மேற்கும் காணாதென்று
கூறியோரின் வாக்கை பொய்யாக்கி
காவியம் படைத்தன உன் விரல்கள்!
வாக் தேவி வெறுத்தாள்
தான் கொண்ட வீணையை,
உன் விரல் விளையாடிக்கொண்டிருந்த
Mandolin கண்டு!
அரை மணி பிரார்த்தனை
ஒவ்வொரு கச்சேரிக்கும் முன்பு;
மனிதனே, உமது ஒவ்வொரு கச்சேரியுமே
கடவுளை உணரும் வழிதான் எமக்கு!
மௌனத்தில் புதையுண்டு
வேதனை நம்முள் விதைத்து
மீளா துயர் ஒன்றை தந்து
மாண்டது Mandolin !
தந்திகள் மீட்டிய விரல்களுக்கு
நரம்பறுந்த உணர்வோடு
வலி"மை" இட்டு வரைகிறேன்
கானாஞ்சலியாய் ஓர் கவிதாஞ்சலியை!
இவள்,
நீ விட்டுசென்ற
இசையின் அடிமை !
எழுத்தில் இதை வடிக்கும் பொழுது கண்ணீர் வடித்தது என் பேனா!
துர்பாக்யவதி என் பேனா, தன் இரு நூறாவது எழுத்தினை அஞ்சலியாய் பதிந்ததற்கு!
Migavum Arumaiyaana Elimaiyaana Pathivu !
பதிலளிநீக்குVaazhthukkal.
Raga.