புதன், 26 மார்ச், 2014

வாழ்த்துக்களும் ஆசிகளுடன்

உன் குரல் கேட்க எழிலோவியமாய் காண,
காத்திருந்தோம் நாங்கள் ஈரைந்து  மாதங்கள்!

ஆகாயத்தில் கண்ட வெண்ணிலவை,
அருகில் காணும் அதிர்ஷ்டமாய் !
அன்பு போர் செய்த போதும்,
அடம் பிடிக்கும் போதும் 
அழகென நீ இருப்பாய் 
என்றென்றும்  எங்கள் ஜிஷ்ணு!
வருடத்தின் முதற் கவிதை
வரைகிறேன் உனக்காய் இன்று..
வரமென வாழ்வில் வந்த மழலையே ,
மறவாதே உன் அன்னையை!
உனக்கென உருகும் தந்தை(யை)
காண்பதோ நிஜமாய் விந்தை !
நல்லுயிர்களை உரம் என கொண்டு,
வெற்றி வாகை சூடி, 

நற்பண்பின் இலக்கணமாய் நீ வளர,
வேண்டுகிறோம் இறையவனை . . !


வாழ்த்துக்களும் ஆசிகளுடன்,
:-) 

To Jishnu (S/o. Mrs & Mr. Gomathi ) on His Birthday ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக