உன் குரல் கேட்க எழிலோவியமாய் காண,
காத்திருந்தோம் நாங்கள்
ஈரைந்து மாதங்கள்!
ஆகாயத்தில் கண்ட வெண்ணிலவை,
அருகில் காணும் அதிர்ஷ்டமாய் !
அன்பு போர் செய்த போதும்,
அடம் பிடிக்கும் போதும்
அழகென நீ இருப்பாய்
என்றென்றும் எங்கள் ஜிஷ்ணு!
வருடத்தின் முதற் கவிதை
வரைகிறேன் உனக்காய் இன்று..
வரமென வாழ்வில் வந்த மழலையே ,
மறவாதே உன் அன்னையை!
உனக்கென உருகும் தந்தை(யை)
காண்பதோ நிஜமாய் விந்தை !
நல்லுயிர்களை உரம் என கொண்டு,
வெற்றி வாகை சூடி,
நற்பண்பின் இலக்கணமாய் நீ வளர,
வேண்டுகிறோம் இறையவனை . . !
வாழ்த்துக்களும் ஆசிகளுடன்,
:-)
To Jishnu (S/o. Mrs & Mr. Gomathi ) on His Birthday !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக