முதல் நாள் பள்ளி,
அழுகையினூடே
பையை அணைத்தேன் ,
நீரோ எம்மை அணைத்தீர்,
தாயுமானவராய் !
குறும்பு வயதின் உச்சமாய்
ஓராயிரம் தண்டனைகள்,
வாயோயாது வைவீர்கள்
வலிக்கும் என அறிந்தும் திருத்த,
தந்தைக்கு நிகரானீர் !
என் நத்தை கூட்டிலிருந்து
விடுவித்து வெளியுலகை காட்டினீர்.
தவறி விழுந்தால்
தோளோடு அணைத்தீர்,
தோழனாய் திகழ்ந்தீர் !
தாய் தந்தது உயிர்
தந்தை தந்தது அன்பு
எனில் எமக்கு
நீர் தந்ததோ
உணர்ச்சி !
எதிர்பாரா சந்திப்பில் ,
நாங்கள் முன்னேறி
நல்ல குடிமகன்களாய் இருக்கையில்
எத்துணை மகிழ்ச்சி
எத்துணை குதூகலம் !
உங்களை வாழ்த்த வயதில்லை
உங்கள் அன்பிற்கு
தலை வணங்குகிறோம்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! ! !
தாய் தந்தது உயிர்
தந்தை தந்தது அன்பு
எனில் எமக்கு
நீர் தந்ததோ
உணர்ச்சி !
எதிர்பாரா சந்திப்பில் ,
நாங்கள் முன்னேறி
நல்ல குடிமகன்களாய் இருக்கையில்
எத்துணை மகிழ்ச்சி
எத்துணை குதூகலம் !
உங்களை வாழ்த்த வயதில்லை
உங்கள் அன்பிற்கு
தலை வணங்குகிறோம்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! ! !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக