வியாழன், 14 நவம்பர், 2013

எழுத்தரசிக்கென ஓர் எழுத்து !

எழுத்தரசியே ,
உம்மை கடவுள் எழுதிய நாள் இன்று 
நீ வளர்ந்தாய் தடைகளை வென்று!

சிரிக்க மறந்த மனதை,
சிந்திக்க வைத்தாய் !
துடிக்க மறந்த நெஞ்சை 
அன்பிலே நனைய வைத்"தாய்" !

காதலுடன் நேசம் கற்பித்தாய்,
பாசத்தை சுவாசம் செய்ய வைத்"தாய்"!
எண்ணங்களுக்கு எழுத்தூட்டினாய்,
எமக்குள் நம்ம்பிக்கையை துளிரவைத்"தாய்"!
என்னை நீர் பெறவிடில்லும்
நீரும் என் அன்னையே!

சீரிய சிந்தனையுடன் நற்பண்புடனும்
எழுத்தென்னும் ஆயுதத்தால்,
நல் எண்ணன்ங்கள் விதைத்து,
தீமையை கலை அறுத்து,
என்றும் நீவிர் வழிகாட்டி ,
வெற்றி படியேறி விண்ணுயர்ந்து,
வானிலும் மை இட்டு எழுதிட ,
வேண்டுகிறோம் இறையவனை . . . 


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக