இல்லத்தை பிரிந்த தருணங்களில்
பலதை கற்றுக்கொண்டேன்.
உறுமலையும் மொழிபெயர்ப்பது
முதற்கொண்டு.!
இப்போதெல்லாம்
எப்பொழுதாவது வருகிறது
என்மன கிறுக்கல்கள் காகிதங்களில்.!
பல நிஜங்கள்
என்னை நீங்கிசென்றாலும்,
நிஜம் எதென்று நான் உணர்ந்தேன்.
கண்ட உள்ளம் எல்லாம்
உண்மையுள்ளம் என,
மதி கேட்டு திரிந்த என்னை,
வெளி உலகம் மாற்றியதோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக