புதன், 2 மார்ச், 2011

பிரிவும் பிளவும் நமக்குள்ளுமா ?


தொடர்புக்கு ஓர் முற்று புள்ளி 
வைத்தாய் வார்த்தைகளால் !
கடல் அலைகள் அடங்கலாம்,
நம் மன அலைகள் தீருமோ?
கண்கள் பரிமாறிய காதலும்,
உதடுகள் பரிமாறிய நேசமும்,
விரல்கள் பரிமாறிய அன்பும்,
நாசிகள் நெருடும் நம் சுவாசமும்,
எப்படி மறப்பேன் நான்.?
தூரங்கள் நம்மை பிரித்தாளும்,
நீ என்னை விலகி நின்றாலும்,
துயரங்கள் மனதை வதைத்தாலும்,
என் உலகம்,
உன்னை சுற்றியே சுழல்கிறது. 
நேசம் என்ற வார்த்தை 
என் சுவாசம் தீண்டும்போதேல்லாம்,
நீ தான் என் மனகண்ணில்!
காண்பவர்கள்,
காதல் தோல்வியா என்கிறார்கள்.!
ஏன்,
என் தோழமையை நான் நேசிக்க கூடாதா?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக