சனி, 19 மார்ச், 2011

பேசுகிறேன், பேசுகிறேன், உன் ஜீவன் பேசுகிறேன்..!

மனிதன் படைக்க தொடங்கிவிட்டான்
இறைவன் அதை நிறுத்தி விட்டான்.
முடிவு அவன் கையில்..!
~~ அழிந்து வரும் பூமி.


என் பொறுமையை கலைத்த 
அவனுக்கு ஏது மன்னிப்பு?
வெடிப்பேன் நானும்..!
~~ பூகம்பம்.

நானும் சேர்கிறேன் உன்னோடு,
சீரும் ஆழ்கடல்,
இனி ஆவதற்கில்லை..!
~~ சுனாமி.


விதைத்தது யாரோ?
நான் இங்கு பூத்துள்ளேன்,
சிதறடிக்க.!
~~ எரிமலை.


மனிதா! 
என்னை சீரழிக்காதே.
சிதைவது நீ தான்!
~~ இயற்கை.




1 கருத்து: