வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

என் அன்பு சகோதரனுக்கு....

யுகங்கள் பல கழிந்தாலும்
குறையாது உன் மீதான என் நேசம்;
என் உயிர் அடங்கிய பின்பும் 
உன் உள்ளத்தில் உணர்வாய் என்னை.!
                               

அண்ணன் என்ற ஆணின் அருமையை
உணர்தேன் உன் அருகாமையில்..
வருடங்கள் உதிர்ந்தாலும்,
வாழ்கையில் உயர்ந்தாலும்,
என்றும் உன்னை நான் மறவேன்,..!

அன்பாய் ஓர் பார்வை,
ஆசையாய் ஓர் வார்த்தை,
இம்சையாய் சில செயல்,
இப்படி உண்டு பல,
என்னிடம் உனக்காக..!

எனக்கே எனக்காய்,
இதோ ஓர் கவிதை.;
என் ஆன்மாவையும் 
தீண்டிய ஓர் ஆடவனுக்காக..
எனக்கும் உள்ளான் 
ஓர் அண்ணன் என 
மார் தட்டுவேன் இனி.!

சரியா தவறா
தெரியவில்லை,
ஆனாலும்


சம்மதிக்கிறது மனம்,

புண்ணியம் செய்தேனோ
 இப்புவிதனில் பிறக்க!
தவம் தான் செய்திருப்பேன்,
உன்னை அண்ணனாய் பெற.

உன்  வார்த்தை பல கேட்க ,
நான் காத்திருந்து நிற்கையில்
திருவள்ளுவரும் இல்லை இன்று
என் பொறுமையின் குரல் கூற !


எம்மதமும் சம்மதம்"
இம்மொழி, உன்போன்ற,
உடன்பிறவா, 
உன்னத உறவுகளுக்கும் தான்..
என்றும் உடன் இருப்பாயா,
எனதாய்??

3 கருத்துகள்: