செவ்வாய், 4 டிசம்பர், 2012

பூக்களோட புராணம்

தோட்டத்துல போய்
பட்டாம்பூச்சி புடிக்கறப்போ 
எங்க ஆத்தா கூப்பிட்டு  வெக்கும் 
சோறு திண்ண !
ஒழுங்கு காமிச்சு 
ஒளிஞ்சுக்குவோம்
 வயக்காட்டுகுள்ளரா !
வீடுங்க நெரப்பி போக,
எம்புள்ளைக்கு 
பட்டாம்பூச்சின்னா 
பேந்த பேந்த முழிக்க தெரியுது!
மல்லிபூ பந்தல்னா ,
பெக்க பெக்க ன்னு பாக்க தெரியுது !
அதான், எம் பேரப்புள்ளைங்கனாச்சு 
தெரிஞ்சுகட்டுன்னு ,
பூக்காரி கூடை பூ கிட்ட கேட்டு தெரிஞ்சுகிறேன் 
பூக்களோட புராணத்த! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக