வியாழன், 27 டிசம்பர், 2012

இதோ என்னவள் !

செய்தி கேட்டு
தோழியின் இல்லம் சென்றேன் ,
எங்கள் சிரிப்பை திருடிக்கொண்டு,
புகைப்படத்தில் சூடி இருந்தால்,
பூ மாலைகளுக்கிடையே ஒளிந்திருந்தாள் !
ஒளியிழந்த நான்,
அவள் இல்லை இது என்றேன்!
மரண அறிக்கை,
விபத்தின் விவரங்கள்,
எரித்த சாம்பல்,
இப்படி அனைத்தும் காண்பித்தனர்!
அவள் இல்லை இது என்றேன்!
அவளால் காப்பாற்ற பட்ட
சிறார்களை காண்பித்து,
இதோ என்னவள் . . . . . . . !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக